நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ.,
உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.,
மூத்த தலைவர் அத்வானி ; 2013ம் ஆண்டிலேயே லோக்சபா தேர்தல் நடத்த வேண்டும்
எனவும், அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசே காரணம் . மாநில சட்டசபை
தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் நடத்த வேண்டும்; எதிர்க்கட்சிகள் மற்றும்
வெளிநாட்டு காரணிகள் மீது பழி போடும் விளையாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி
அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அத்வானி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment