Monday, August 12, 2013

பா.ஜ.க-வில் இணைகிறார் எடியூரப்பா?
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டவிரோத சுரங்க முறைகேடு புகாரால் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா பாரதிய ஜனதாவிலிருந்து பிரிந்து கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அவரது விலகலுக்கு பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாரதிய ஜனதா படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற, எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது அவசியம் என அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடியூரப்பா பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நரேந்திர மோடியிடம் எடியூரப்பா தொலைபேசி மூலம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள் ள து

No comments:

Post a Comment