Friday, August 30, 2013

பிரதமரின் கண்காணிப்பில் இருந்த துறையில் ஊழல் நடந்துள்ளதாகச் சொல்லப்படுவதும், அது சம்பந்தப்பட்ட, 257 கோப்புகள், ஒட்டு மொத்தமாக காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுவதும், எந்த அளவிற்கு, தவறு நடந்துள்ளது என்பதை, படம் பிடித்துக் காட்டி விட்டது. பிரதமர் நேர்மையானவராக இருந்தால், உடனடியாக, பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சி காலங்களில், வரலாறு காணாத ஊழல்களை செய்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், பதவியை விட்டு விடாமல், ஒட்டிக் கொண்டிருப்பது, நிச்சயம், மன்மோகனுக்கு பெருமை சேர்க்காது. அன்று, ஆதர்ஷ் ஊழலில் முக்கிய கோப்புகள், கடலில் தூக்கி வீசப்பட்டதும், எரிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. எனவே, அதை விட பெரிய ஊழலான, நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதால், நிச்சயம், இந்த, 257 கோப்பு களும் எரிந்து, சாம்பல் ஆக்கப்பட்டிருக்கும் என்பதில், மாற்றுக் கருத்து கிடையாது.

No comments:

Post a Comment