Tuesday, August 20, 2013

பாகிஸ்தான் முகாம்களில் பயிற்சி பெற்ற 8 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தென்னிந்தியாவை தாக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. உளவுத்துறை மூலம் மகாராஷ்டிர போலீசுக்கு பெறப்பட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாக்.,கில் பயிற்சி இந்த பயங்கரவாதிகளில் 4 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள் எனவும், மற்றவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஜாப்னா நகரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் முகாமிட்டுள்ள இவர்கள் தமிழகத்தின் மயிலாடுதுறை அல்லது மதுரை நகரங்களை குறித்திருக்கலாம் எனவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல் இன்னும் சில மாதங்களில் நடத்தப்படலாம் எனவும், பாக்., நாட்டைச் சேர்ந்த சிலர் இலங்கை பாஸ்போர்ட் மூலம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மும்பை மற்றும் திருவனந்தபுரத்திற்கு வந்து சென்றதாக இலங்கை உளவுத்துறை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment