Saturday, November 30, 2013

இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை

பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மதுரை புறநகர் மாவட்டம் கருப்பாயூரணியில் இன்று  (01.12.2013) காலை வீடு தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை நிகழ்சிக்காக பாதயாத்திரையை தொடங்குகினார் .தலைமை திரு ,சிவராமன் ,மற்றும்  மாவட்டதலைவர் ஹரிகிருஷ்ணன் ,பொதுசெயலாளர் சுசிந்திரன் ,துணைத்தலைவர் சக்குடிசீனிவாசன் ,ஒன்றிய தலைவர் tr சங்கர் ,பொதுசெயலாளர் பொய்கை பெரியகருப்பன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஹரிகரன் ,மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ,பாரதிய ஜனதா கட்சியின் புதிய முயற்சியாக மோடியை பற்றி தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு தமிழக மக்களின் மன நிலையை நேரில் அறியவும், மக்கள் பிரச்சினைகளில் நேரடியான கவனத்தை அதிகரிக்கவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அணுகி அறிவதற்காகவும் இல்லம் தோறும் மோடி, உள்ளம் தோறும் தாமரை எனும் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. ஒவ்வொரு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரும் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று மக்களோடு நேரடியாக கலந்து கொண்டு மக்களிடம் தேசத்தின் தற்போதைய நிலை, ஏன் பாரதிய ஜனதாகட்சியையும் மோடியையும் ஆதரிக்க வேண்டும். என்பது போன்ற விஷயங்களை நேரடியாக சொல்வதோடு, மக்களின் தற்போதைய நிலை, அவர்களின் அன்றாட வாழ்வியல் சிக்கல்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை நேருக்கு நேர் அறிந்து அரசியல் விழிப்புணர்வு பெறும் விதமாகவும் மக்களை அணுக வேண்டும் என பாஜக மாநில தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழகம் முழுக்க இருக்கும் பாஜக நிர்வாகிகளையும் , தொண்டர்களையும் நோக்கி வேண்டுகோள் வைக்கிறார்.

Wednesday, November 27, 2013

டைம் பத்திரிகையில் மோடிக்கு இடம் ; இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வாகிறார்...

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிகை நடத்தும் ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல் தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். தற்போது இவருக்கு அதிக ஓட்டு விழுந்து வருவதாகவும், இவரே சிறந்த நபராக தேர்வாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் டைம் பத்திரிகை உலக அளவிலான தலைவர்களை வரிசைப்படுத்தி சிறந்த மனிதர் பட்டத்திற்கு தேர்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் நடப்பு 2012 ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் யார் என 42 பேரை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல் தலைவர்கள் , தொழில்முனைவோர்கள், மற்றும் சமூக பணியாளர்கள் அடங்குவர்.

இதன்படி டைம் பத்திரிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தலிபான்ககள் எதிராக போராடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலாயூஷாப்ஷாய், ரஷ்ய அதிபர் புடின், ஜப்பான் பிரதமர் சின்சோ, நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, டூவிட்டர் செயல் அதிகாரி கோஸ்டோலோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், சிரியா அதிபர் பஷீர் அகமது, யாகூ தலைமை அலுவலர் மாரிசா, போப் பிரான்சிஸ், இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ், அமேசான், தலைமை அலுவலர் ஜெப்பிசோஸ், அமெரிக்காவின் உளவு தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோவ்டன், ஜெர்மனி அதிபர் ஆஞ்சலே மார்க்கல், ஈரான் அதிபர் அசன்ரோஹனி, ஆஸ்கர் விருது பெற்ற ஆஞ்சலினா ஜோலி, அதிகாரி மாரிசா மேயர், ஆகியோர் முக்கியஸ்தர்கள்.


செய்திகளில் மோடி பிரபலம் : மோடி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து டைம் பத்திரிகை அளித்துள்ள விளக்கத்தில், சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி மோடி ஜனநாயகம் போற்றும் இந்தியாவில் காங்கிரஸ் அரசை அகற்ற இந்தியர்கள் பலரும் விரும்பும் நபராக உள்ளார் என்று கூறியுள்ளது.


இந்தியாவில் இருந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் மோடி. நடந்து வரும் ஆன்லைன் ஒட்டெடுப்பில்37000ஒட்டுக்கள் விழுந்துள்ளது. சமீபத்தில் பதிவாகியுள்ள மொத்த ஓட்டில் இது 96 சதம் ஆகும்.

Tuesday, November 19, 2013

A function at the Bharatiya Janata Party  (BJP)  State headquarters on Tuesday evening turned out to be a event of pride for the party. Around 300 Christians, led by four pastors and a local leader joined the party. They exuded confidence that Narendra Modi would become Prime Minister after the coming Lok Sabha polls and said they would pray for the Gujarat Chief Minister’s success.
Arumainayagam, one of the pastors who joined the BJP on Tuesday recited verses from the Bible’s Book of Psalms in Tamil and blessed the party and its leadership, and followed it up by quoting the first verse of the Thirukkural. He also dubbed both Modi and party State president Pon Radhakrishnan as ‘devanin dasan’, or servant of God.
“Christianity and christians are in need of protection for their way of life and religious practice. We are going to be praying for Modi to become Prime Minister and appeal to him to ensure protection for churches, schools, colleges, missionaries and pastors,” said Arumainayagam.
Radhakrishnan and state secretary Vanathi Srinivasan were presented with copies of the Tamil Bible by MJ Clarence, a construction promoter, under whose initiative the function was organised.
Clarence defended his joining the BJP saying Indians had for long been divided by the lines of caste, religion and language, when they were all children of Mother India first. He added that many other Christian groups and parishes wanted to join the BJP.

Tuesday, November 12, 2013

இந்த நூலை எழுதியவர் ஆர்.எஸ்.எஸ்காரரோ இந்து மகா சபை/ஜனசங்கம் சார்ந்தவரோ இல்லை. அதை எழுதியவர் மகாத்மா காந்தியின் நேரடி சீடர். அது மட்டுமல்ல அவர் கேரளத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார்: பாதர் அந்தோனி எலெஞ்சிமிட்டம் . padre_anthony1915 இல் கேரளாவில் பிறந்தவர். கிறிஸ்தவ இறையியல் படிப்புடன் இணைந்து இவருக்கு ஆன்மிக நாட்டமும் இருந்தது. காந்திய ஈர்ப்பினால் அன்று தீவிரமாகிக் கொண்டிருந்த காந்திய இயக்கத்தில் இணைந்தார். காந்தியுடன் நவகாளி சென்றிருக்கிறார். இங்கிலாந்தில் இறையியல் பயின்றார். அதே காலகட்டத்தில் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்திருக்கிறார். தர்ம-அத்வைதம் எனும் தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆர் எஸ் எஸ் குறித்த அவரது நூல் அவரது பார்வையின் தெளிவையும் ஆழத்தையும் காட்டுகின்றன. பொதுவாகவே ஆர் எஸ் எஸ்ஸும் சரி இதர இந்து அமைப்புகளும் சரி ஆவணப்படுத்துவதில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. இந்த விசயத்தில் மனிதனின் உள்ளார்ந்த நற்பண்பை முழுமையாக நம்புகிறவர்களாகவே சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளனர். அப்பிராணிகள் என்று உலக பொது வழக்கில் சொல்லலாம். குறிப்பாக 1951 இல் ஆர் எஸ் எஸ் குறித்து தவறான அபிப்பிராயங்களே நிறைந்திருந்த காலகட்டம். ஹிந்துக்களே ஆர் எஸ் எஸ்ஸை ஏதோ காந்தியை கொலை செய்த இயக்கம் என காங்கிரஸ் பிரச்சார மாயையில் ஆழ்ந்திருந்த காலகட்டம். இந்த சூழலில் எலெஞ்சிமிட்டம் தன் நூலில் ஆர் எஸ் எஸ் உண்மையான ஹிந்து ஞான மரபுக்கு செயல்வடிவம் கொடுக்கும் இயக்கம் என்பதை உரத்த குரலில் சொல்கிறார். இந்நூலில் இருந்து சில வரிகள்:

இந்நூலில் இருந்து சில வரிகள்:

இந்த தேசத்தை முழு மனதுடன் நேசிக்கும் எவரும் ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினராகலாம். இன்றில்லாவிட்டால் நாளை தேசபக்தி திடமாக நிலை பெறும் நாளில் இது நிச்சயமாக நடக்கும்.

ஆரோக்கியமான ஹிந்து சமுதாயத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிலுள்ள பலவீனங்களை அகற்றுவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் தமமை ஹிந்து அல்லாதவர் என கருதும் சிறுபான்மையினரையும் தம் ஹிந்து அடையாளத்தை பெருமையுடன் இயல்பாகவே உணர வைக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சாதிக்கு இடமில்லை. எத்தனை உயர்ந்த சாதி என கருதப்படுகிறவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் இணைந்துதான் தோளோடு தோள் சேர்ந்துதான் அமர்ந்திருக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்.

தகவலுக்கு நன்றி...தமிழ்ஹிந்து..
எதிர்ப்பாளர்களை ஒடுக்க நேரு கையாண்ட ஆயுதம்தான் 'போலி மதச்சார்பின்மை'
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் பற்றி சமீப காலமாக பரவலாக பேசப்படுகிறது. படேலின் கொள்கைகளுக்கு உண்மையான வாரிசு யார் என்ற விவாதத்தில், வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு, அரசியல் மற்றும் மதவாத கோஷங்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. உண்மையில் நேருவும் படேலும் வெவ்வேறு தனித்தனியான கொள்கைகளை, தன்மைகளை, கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் இடையேயான வேறுபாடு அடிப்படையானது.
நவீன இந்தியாவை உருவாக்க, காங்கிரசை கட்டுப்பாடுள்ள ஜனநாயக அமைப்பாக மாற்ற வேண்டியது அவசியம் என்று படேல் விரும்பினார். அதன் முதல் கட்டமாக தனியாக உறுப்பினர்கள், கட்சி அமைப்பு மற்றும் திட்டம் கொண்டிருப்பவர்களை, காங்கிஸ் கட்சியின் உறுப்பினர்களாக அனுமதிக்கும் இரட்டை உறுப்பினர் கொள்கையை எதிர்த்தார். இந்த இரட்டை உறுப்பினர் முறையைத் தடை செய்யும் தீர்மானத்தை, 1948ல் காங்கிரஸ் காரியக் கமிட்டியில் நிறைவேற்ச் செய்தார் படேல். இதனால் காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்து வந்த காங்கிரஸ் சோசலிச கட்சி, காங்கிரசிலிருந்து விலக நேர்ந்தது. இது நேருவிற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் கட்சியை மீண்டும் பலப்படுத்த நேரு தொடர்ந்து முயற்சித்தார். 1950ல் பட்டேலின் மரணத்திற்கு முன் காங்கிரஸ் தலைமை பொறுப்பை கைப்பற்ற கட்சிக்குள் தீவிர போராட்டமே நடைபெற்றது. இதனால் கட்சி தலைவர் பொறுப்பிற்கு நடைபெற்ற தேர்தலில் பட்டேல் ஆதரித்த புருஷோத்தம் தாஸ் தான்டனுக்கு எதிராக ஜெ.பி.கிருபாளினியை தனது தரப்பு வேட்பாளராக நேரு ஒருதலைபட்சமாக அறிவித்தார். தான்டன் விஷயத்தில் நேருவிற்கும், பட்டேலுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வரத் துவங்கியது. இதன் பிறகு தான்டனை நேரு தொடர்ந்து பல்வேறு விதங்களில் விமர்சித்து வந்தார். டில்லியில் நடைபெற்ற அகதிகள் மாநாட்டில் தான்டன் கலந்து கொண்டதையும் நேரு கடுமையாக விமர்சித்தார். நேரு கையாண்ட இந்த போலி மதசார்பின்மை, கட்சியின் கொள்கைகளுக்கும் பண்புக்கும் எதிராக இருந்ததால் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல சமயங்களில் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளது.

நேரு விடுத்த மிரட்டல்:

கட்சி தலைவராக தான்டன் தேர்வு செய்யப்பட்டால் தான் காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலகி விடப் போவதாகவும் நேரு மிரட்டல் விடுத்தார். இறுதியாக தலைவர் தேர்தலில் தான்டன் 1306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நேரு நிறுத்திய கிருபாளினியால் 1092 ஓட்டுக்கள் மட்டுமே பெற முடிந்தது. சொன்னபடி நேருவும் கட்சியில் இருந்து விலகவில்லை.
பட்டேலின் மரணத்திற்கு பின் கட்சிக்குள் இருந்த ஜனநாயக கட்டுப்பாடு காணாமல் போனது. நேருவின் ஆதரவாளரான எஸ்.கே.சின்கா பீகாரின் முதல்வராக்கப்பட்டு, காங்கிரஸ் காரிய கமிட்டியிலும் இணைந்தார். பின்னர் நேருவின் நிர்பந்தத்தால் லோக்சபா உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தான்டனுக்கு எதிராக சக்ரவியூகத்தை நேரு கையாண்டார். அதன் விளைவாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் இருந்து விலக தான்டனுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இறுதியாக தான்டன் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால் பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி தொடர்ந்து 4 ஆண்டுகள் தலைவர் பதவியில் தான்டன் தொடர்ந்தார்.

சிறுபான்மையினருக்கு சலுகை:

நேருவிற்கும் பட்டேலுக்கும் இடையே விருப்பும் வெறுப்பும் கலந்த உறவே இருந்து வந்தது. அஜ்மீர் வகுப்புவாத கலவரம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளின் மூலம் நிரூபணமாகி உள்ளது. ஷங்கர் பிரசாத்தை தலைமை செயலராக நியமிக்க பட்டேல் உறுதியுடன் இருந்தார். ஆனால் நேரு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், பின்னர் ஹச்.வி.ஆர்.ஐயங்காரை தற்காலிக செயலாளராக நியமித்தார். இதுவே இவர்கள் இருவருக்கிடையேயான கொள்கைகளுக்கிடையே மோதலாக உருவானது. சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக சட்ட ஒழுங்கை பற்றி கவலைப்படாமல் சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்க வேண்டும் என நேரு வலியுறுத்தினார். மதக்கலவரங்களின் போது பயங்கரவாதிகள் என சிறுபான்மையினரை கைது செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு இணையாக இந்துக்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் நேரு தெரிவித்தார். இதனை பட்டேல் ஏற்றுக் கொள்ளவில்லை. இவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் மகாத்மா காந்தியிடம் ராஜினாமாவை அளித்தனர். ஆனால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் வேறு வழியின்றி இருவேறு கொள்கைகளைக் கொண்ட இருவரும் ஒரு விசித்திர கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தினர்.

உண்மைகள் மறைப்பு:

இந்திய வரலாற்று புத்தகங்களிலும், வரலாற்று குறிப்புகளிலும் இதுபோன்ற வேற்றுமைகள் மறைக்கப்பட்டும், புறம்தள்ளப்பட்டும் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரே குடியுரிமை உள்ள ஒரே நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று அரசியல் நிர்ணயசபை உறுதி அளித்திருந்தது. ஆனால் நேருவின் குறுகிய நோக்கத்தால் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டது. அவர் தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் சிறுபான்மையினர்-பெரும்பான்மையினர் என்ற வாத அடிப்படையில் ஓரங்கட்டினார். இத்தகைய போலி மதசார்பின்மை கொள்கை, காங்கிரசில் புதிய தலைவர்கள் உருவாவதை தடுத்தது. இந்த போக்கு குறித்து அன்றைய காங்கிரஸ்காரர் டி.பி.மிஸ்ரா கூறுகையில், களிமண்ணில் இருந்து தலைவர்களை உருவாக்கினார் காந்திஜி; ஆனால் நேருவின் தலைமையோ அந்த தலைவர்களை வெறும் ஜடங்கள் ஆக்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.
( இந்தியன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10ம் தேதி இதழில் ராகேஷ் சின்கா எழுதிய கட்டுரை)
                                     அன்புடன் ;சக்குடி ஸ்ரீனிவாசன்

Saturday, November 9, 2013

Bjp Sakkudisrinivasan Yadav's photo.''நான், வித்தியாசமானவன். பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். பயங்கரவாதிகளை வேரோடு வீழ்த்துவோம். நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்காக, நாங்கள் எடுத்துள்ள சபதத்தை, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளால் முறியடிக்க முடியாது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சென்று, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று, உ.பி., மாநிலம், பராய்ச்சில் நடந்த கூட்டத்தில், அவர், அனல் பறக்க பேசினார்.

அவர் பேசியதாவது:குஜராத்தில், தொடர்ச்சியாக, மூன்று முறை நடந்த சட்டசபை தேர்தல்களில், என்னையும், பா.ஜ.,வையும், எதிர்க்கட்சியினரால், தோற்கடிக்க முடியவில்லை. ஜனநாயக முறைப்படி, என்னை தோற்கடிக்க முடியாது என, அவர்களுக்கு புரிந்து விட்டது.

பொய் வழக்கு போட முயற்சி:

இதனால், வேறு மாதிரியான நடவடிக்கைகளின் மூலம், என்னை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். சி.பி.ஐ., அமைப்பை, தவறாக பயன்படுத்தி, பொய் வழக்கு போட்டு, அதில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.'இந்தியன் முஜாகிதீன்' போன்ற பயங்கரவாத அமைப்பினரை, சுதந்திரமாக நடமாட அனுமதி அளித்துள்ளனர். அதனால் தான், பாட்னாவில் நான் பங்கேற்ற கூட்டத்தில், அந்த அமைப்பினர், வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஜனநாயக ரீதியாக வெற்றி பெற முடியாதவர்கள், துரோகிகளைப் போல், முதுகில் குத்துகின்றனர்.வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மூலம், அரசியல் செய்பவர்கள், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான், வித்தியாசமானவன். பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். பயங்கரவாதிகளை வேரோடு வீழ்த்துவோம். நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்காக, நாங்கள் எடுத்துள்ள சபதத்தை, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளால், முறியடிக்க முடியாது. உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு, ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது.

அப்பாவிகள் கைது:

முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமான, உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், அப்பாவிகளை கைது செய்கிறது. எங்கள் கட்சியின், இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கைது செய்துள்ளது. அவர்கள், ஒரு வழக்கிலிருந்து விடுதலையானால், மற்றொரு பொய் வழக்கில் கைது செய்கிறது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அத்தனையையும் முறியடிப்போம்.காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், ஒரே மரபணுவைச் சேர்ந்தவை.இந்த கட்சிகள், தங்களின் சுய நலனுக்கு மட்டுமே செயல்படுபவை. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், உ.பி., மக்களின் நலனுக்காக செயல்படும் கட்சிகள் அல்ல. சி.பி.ஐ., வழக்குகளில் இருந்து, தங்களை பாதுகாக்கவே செயல்படுகின்றன. மத்தியில், அடுத்த தேர்தலில், பா.ஜ., ஆட்சி அமைத்தால், நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவோர், மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

Thursday, November 7, 2013

: ரஷ்யாவில், புராதன, விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியில் உள்ள, மாய்னா என்ற கிராமத்தில், கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா
கூறியதாவது: மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, ,8,000 பேர் வசித்துள்ளனர்.இப்பகுதியில், ஏழு மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட, மகாவிஷ்ணுவின் சிலை கிடைத்துள்ளது.

இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் புராதன நாணயங்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு கோஜ்வின்கா கூறியுள்ளார்.இந்த புராதன கிராமத்தின் தோற்றம் மற்றும் அழிவு குறித்த சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தற்போது கிடைத்த மகாவிஷ்ணு சிலை, காட்சிக்கு வைக்கப்பட்டது.

ரிக் வேதத்தில், இப்பகுதி, புனிதத் தலமாகவும், 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலை கிடைத்திருப்பதன் மூலம், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையில் பண்டைக் காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது. பெருமாள் கோவில்களில், பூஜை, அர்ச்சனைகள் எவ்வாறு செய்யப்படுகிறதோ அதேபோன்ற, பூஜை, அர்ச்சனைகள், ரஷ்ய சர்ச்சுகளில் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி பெயரில், அவர்களும் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர்