Tuesday, November 12, 2013

இந்த நூலை எழுதியவர் ஆர்.எஸ்.எஸ்காரரோ இந்து மகா சபை/ஜனசங்கம் சார்ந்தவரோ இல்லை. அதை எழுதியவர் மகாத்மா காந்தியின் நேரடி சீடர். அது மட்டுமல்ல அவர் கேரளத்தைச் சார்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார்: பாதர் அந்தோனி எலெஞ்சிமிட்டம் . padre_anthony1915 இல் கேரளாவில் பிறந்தவர். கிறிஸ்தவ இறையியல் படிப்புடன் இணைந்து இவருக்கு ஆன்மிக நாட்டமும் இருந்தது. காந்திய ஈர்ப்பினால் அன்று தீவிரமாகிக் கொண்டிருந்த காந்திய இயக்கத்தில் இணைந்தார். காந்தியுடன் நவகாளி சென்றிருக்கிறார். இங்கிலாந்தில் இறையியல் பயின்றார். அதே காலகட்டத்தில் அங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்திருக்கிறார். தர்ம-அத்வைதம் எனும் தலைப்பில் இவர் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆர் எஸ் எஸ் குறித்த அவரது நூல் அவரது பார்வையின் தெளிவையும் ஆழத்தையும் காட்டுகின்றன. பொதுவாகவே ஆர் எஸ் எஸ்ஸும் சரி இதர இந்து அமைப்புகளும் சரி ஆவணப்படுத்துவதில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. இந்த விசயத்தில் மனிதனின் உள்ளார்ந்த நற்பண்பை முழுமையாக நம்புகிறவர்களாகவே சங்கத்தை சார்ந்தவர்கள் உள்ளனர். அப்பிராணிகள் என்று உலக பொது வழக்கில் சொல்லலாம். குறிப்பாக 1951 இல் ஆர் எஸ் எஸ் குறித்து தவறான அபிப்பிராயங்களே நிறைந்திருந்த காலகட்டம். ஹிந்துக்களே ஆர் எஸ் எஸ்ஸை ஏதோ காந்தியை கொலை செய்த இயக்கம் என காங்கிரஸ் பிரச்சார மாயையில் ஆழ்ந்திருந்த காலகட்டம். இந்த சூழலில் எலெஞ்சிமிட்டம் தன் நூலில் ஆர் எஸ் எஸ் உண்மையான ஹிந்து ஞான மரபுக்கு செயல்வடிவம் கொடுக்கும் இயக்கம் என்பதை உரத்த குரலில் சொல்கிறார். இந்நூலில் இருந்து சில வரிகள்:

இந்நூலில் இருந்து சில வரிகள்:

இந்த தேசத்தை முழு மனதுடன் நேசிக்கும் எவரும் ஆர் எஸ் எஸ்ஸின் உறுப்பினராகலாம். இன்றில்லாவிட்டால் நாளை தேசபக்தி திடமாக நிலை பெறும் நாளில் இது நிச்சயமாக நடக்கும்.

ஆரோக்கியமான ஹிந்து சமுதாயத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிலுள்ள பலவீனங்களை அகற்றுவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் தமமை ஹிந்து அல்லாதவர் என கருதும் சிறுபான்மையினரையும் தம் ஹிந்து அடையாளத்தை பெருமையுடன் இயல்பாகவே உணர வைக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சாதிக்கு இடமில்லை. எத்தனை உயர்ந்த சாதி என கருதப்படுகிறவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் இணைந்துதான் தோளோடு தோள் சேர்ந்துதான் அமர்ந்திருக்க வேண்டும்.

இன்றைய அரசியல்வாதிகள் வீட்டு கூரைகளிலிருந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் தம் புதிய வழக்கமாகிவிட்ட போலி மதச்சார்பின்மையை கூவிக் கொண்டிருக்கும் போது தேசத்தின் ஒற்றுமைக்காகவும் நன்மைக்காகவும் கவலைப்பட்டு கஷ்டப்பட்டு கடும் முயற்சியுடன் உழைப்பவர்கள், அதை குறித்து மனநேர்மையுடன் சிந்திப்பவர்கள் ஆர்,எஸ்,எஸ்ஸையும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் சேர்ந்த இளைஞர்கள்தான்.

தகவலுக்கு நன்றி...தமிழ்ஹிந்து..

No comments:

Post a Comment