Friday, December 13, 2013

8.12.2013 அன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்டம் சக்குடி யில் வீடுதோறும் மோடி உள்ளம் தோறும் தாமரை நிகழ்ச்சியிம் கிராமயதிரை நிகச்சியிம் மேல தளம் முழங்க நான்கு மாநில தேர்தல் வெற்றி விழாவும் கொண்டாடபட்டது அன்நிகழ்ச்சியில் மாவட்டபொதுசெயலாளர் மகாசுசிந்திரன் ,மாவட்துனைதலைவர்சக்குடிசீனிவாசன்,ஒன்றீயதலைவர் TRசங்கர்
கேந்திர பொறுப்பாளர் கணேஷ்பாபு மற்றும்பலர் கலந்து கொண்டனர் கிளை பொறுப்பாளர் B சதிஷ்குமார் கலப்பை கொலு வழங்க மாவட்ட நிர்வாகிகள் பெற்றுகொண்டனர்
with Karuppu Muruganadham and 6 others.

Thursday, December 12, 2013

மாணவன் முத்துராமலிங்கம் கேட்ட கேள்வியும் வாயடைத்துப் போன கிறிஸ்த்தவப் பாதிரியாரும்: ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர்கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு. அவர் இந்து மதத்தை விஞ்சிக்க ஆரம்பித்தார். “பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம், கூடாது…! பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை அம்மாணவன், அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…! மாணவன்: “பாதிரியார் அவர்களே! ஓரு சந்தேகம், அதை நீங்கள்…! பாதிரியார்: “என்ன சந்தேகம்? அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை..! மாணவன்: “அப்படியனால், கோபப்படக்கூடாது நீங்கள்…!” பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?” எதுவானாலும் கேளுங்கள் . . .! மாணவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின் உள்ளே சிலையாக இருப்பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…” பாதிரியார்: “இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !” மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு தாயார், அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”. பாதிரியார்: “ஆமாம்…!” மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்.” பாதிரியார்: “உண்மை தான்” மாணவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள் தானே…?” பாதிரியார்: “சந்தேகம் என்ன வந்தது இதிலே?” மாணவன்: “அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .! உங்கள் மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய், தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படி பாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில்…?” இடியோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும். அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பியஆரவாரங்கள், கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார் பாதிரியார் . பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள்… பிற மதங்களைப் பழிக்கக் கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன், தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன். நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான். நன்றி”. அடுத்த வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார் வெளியேறினார் . அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும் உத்தமர், பசும்பொன் தந்த சித்தர் உ.முத்துராமலிங்கத் தேவர்.

Tuesday, December 3, 2013

ரகசியம்...................... இந்தியா அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற நாடா.... ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால் அதை திருத்திக்கொள்ளு ங்கள்... பாரதம் அஹிம்சை முறையில் முறையில் போராடி சுதந்திரம் வாங்கியது என்பதை பாட புத்தக்தில் நாம் படித்திருப்பபோம். அதுவும் காந்தி இல்லை என்றால் நமக்கு இன்றளவும் சுதந்திரம் கிடைத்திருக்காது என்று பில்டப் வேறு கொடுக்கப்பட்டிருக்கும். இளைஞர்களே! ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் காந்திய வழியில் போராடி இருந்தால் இன்றைக்கும் நாம் அடிமைதான். பல ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரை பலி கொடுத்துதான் நாம் சுதந்திரம் வாங்கினோம். ஆங்கிலேயரை எதிர்த்து பேராடிய இளைஞர்களை பிரிட்டிஷ் அரசு பல விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கியது. (உதராணத்துக்கு) கைது செய் தவர்களை பீரங்கியின் முன் நிறுத்தி, அதை வெடிக்க வைக்கும் போது உடல் பல துண்டுகளாக சிதறும். இது போன்ற படுபாத செயல்களில் ஈடுபட்டனர். காரணம், இதைப்பார்த்தால் ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேண்டும் என்ற தோன்றக்கூடாது என்பதற்காக. ஆனால் நம் முன்னோர்களை இதை கண்டு பயந்து விடவில்லை ஆவேசம் அடைந் தார்கள். அவர்களும் துப்பாக்கி ஏந்தி போராடினார்கள். ஆங்கிலேய அதிகாரிகளை தெரு நாயை சுடுவதுபோல் சுட்டு கொன்றனர். வெடி குண்டு வீசி கொலை செய்தனர். ஆனாலும் நாளுக்கு நாள் தாக்குதலில் வேகமும் ஆக்ரோஷமும் கூடியது. மக்கள் வெளிப்படையாக போராட்டத்தில்(அஹிம்சை இல்லை) ஈடுபட ஆரம்பித்தனர். இதைக்கடு மிரண்டு போன ஆங்கிலேயர்கள், பயந்து நடுங்கினர். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நாட்டை விட்டு ஓடிவிட்டனர். ஆனால் சத்தியாகிரம், அஹிம்சை இப்படி தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கற்பிக்கப்படுகிறது. சுதந்திரத்துக்காக உண்மையாக போராடியவர்களில் ஒருவரது வரலாறு கூட நமது பாடபுத்தகத்தில் இடம் பெறவில்லை. அரசும் அதைபற்றி கவலைகொள்ளவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களாகிய நாம் அதைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும். மதன்லால் திங்ரா என்ற 21 வயது இந்து இளைஞன் கர்சன் வில்லியம் என்ற ஆங்கிலேய அதிகாரியை லண்டனில் வைத்து நாயை சுடுவது போல் சுட்டு கொன்றான். அதற்காக பிரிட்டிஷ் நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. திங்காராவைப் பார்த்து “நீ ஏதாவது கூற விரும்புகிறாயா?” என்று கேட்டபது, அவன் சொன்னான்,தேசபக்தியுள்ள எங்கள் நாட்டுத்தலைவர்களையும் இளைஞர்களையும் நாடு கடத்தியும், தூக்கிலிட்டும் வருகிறிர்கள்..இதற்கு பழி தீர்க்கவே கர்ஸான் வில்லியை சுட்டுக் கொன்றேன்.என்னைக் கைது செய்யவோ, விசாரிக்கவோ, தண்டிக்கவோ, பிரிட்டிஸ் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது,இதுதான் என் எண்ணம்,அதனால்தான் உங்கள் விசாரணையில் கலந்து கொள்ளவோ, வழக்கறிஞர் உதவி பெற்று வாதாடவோ,இல்லை. எனக்குத் தூக்குத்தண்டனை விதியுங்கள், அதைத்தான் நான் விரும்புகிறேன், ஏனென்றால் என்னை நீங்கள் தூக்கிலிட்டு கொன்றால்தான் , உங்களை பழிவாங்க வேண்டுமென்ற என் தாயகத்து இளைஞர்களின் பழியுணர்வு மேலும் கூர்மையடையும்,!” என்றான் -இதைக்கேட்டு சில நிமிடங்கள் நீதிமன்றமே நிசப்தமாக நின்றது, நீதிபதி பேச வகையின்றி விழித்தார். மதன்லால் திங்காரா தூக்கிலிடுவதற்கு முந்தின நாளன்று பிரிட்டிஸ் அரசாங்க நாளேடான “டெய்லி நியூஸ்” பத்திரிகையில் திங்காராவின் சவால் என்ற அறிக்கை ஒன்று வெளியே வந்தது,அந்த அறிக்கை பிரிட்டிஸ் பேயரசை நிலை குலைய செய்தது, இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீரகாவியமான அந்த அறிக்கை இதோ, “கர்ஸான் வில்லியை சுட்டுக்கொன்று ஆங்கில மண்ணில் ஆங்கில ரத்தத்தினை சொட்ட வைத்தேன் என்பதினை நான் ஒப்புக்கொள்கிறேன். நான்காண்டுகளுக்கு முன்னர் எங்கள் தங்க வங்கத்தினை இரண்டாக பிரித்த சண்டாளன் கர்ஸான் வில்லி. அவனுக்கு பாடம் புகட்ட இப்போதுதான் தகுந்த வாய்ப்பு கிட்டியது. இந்த முயற்சியில் நான் எவரோடும் கலந்து ஆலோசிக்கவில்லை. ஓர் இந்து என்ற முறையில் என் தேசத்திற்கு இழைக்கப்படும் அவமானம் கடவுளுக்கே இழைக்கப்படும் அவமானமாக நான் கருதுகிறேன். என் தேச காரியம் ஸ்ரீ ராமனின் காரியம். என் தேச சேவை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கே செய்யும் சேவை ஆகும்.என் தேச சேவை ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிற்கே செய்யும் சேவை. அறிவிலும், செல்வத்திலும் வரியவனான என் போன்ற ஏழை மகன், என் தேசத்தாய்க்கு கொடுக்க என்ன இருக்கிறது,? ஏதும் இல்லாத போது அவளது சந்நிதானத்தில் என் சொந்த ரத்தத்தினையே காணிக்கையாகப் படைப்பதுதானே சிறந்த சமர்ப்பணம்? நானும் அதைத்தான் செய்தேன்.. பாரத மக்களுக்கு இன்று தேவையான ஒரே பாடம் எப்படி சாவது என்று கற்றுக்கொள்வதுதான்! அதனை போதிக்க ஒரே வழி நாமே செத்து மடிவதுதான். இன்றுள்ள ஆண்டான் அடிமை என்ற நிலை ஒழிகின்ற வரை இந்த யுத்தம் தொடரும். யுத்தத்தில் செத்து மடிந்தால் வீரசுவர்க்கம் கிடைக்கும், வென்றால் நமது பூமி திரும்பக் கிடைக்கும்! நான் கடவுளிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனை இதுதான்: நான் மீண்டும் பிறந்தால் என் பாரத அன்னைக்கே மகனாக பிறக்க வேண்டும்: அப்போதும் அவள் அடிமையாக இருந்தால் நான் மீண்டும் இதே புனித காரணத்திற்காகவே போரிட்டு மடிய வேண்டும்.! மனிதகுல நன்மைக்காகவும், ஹிந்துமதம் நிலைத்து நிற்கவும் என் தாயகம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும். வந்தேமாதரம்.”” 1909 ஆகஸ்ட் 9 அதிகாலையில் சூரியன் உதயமாகும் முன்பே, மதன்லால் திங்காரா தூக்கிலிடப்பட்டான். எங்கோ பிறந்த அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன் ஆகியோரின் வரலாற்றினை போதிக்கும் காங்கிரஸ் அரசாங்கம், அபிமன்யுவிற்கு நிகரான மதன்லால் திங்காரா போன்ற மாவீரர்களின் உண்மையான வீரவரலாற்றினை குழி தோண்டி புதைத்து விட்டது, இந்த நாசக்கார காங்கிரஸ் இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை