Thursday, December 12, 2013

மாணவன் முத்துராமலிங்கம் கேட்ட கேள்வியும் வாயடைத்துப் போன கிறிஸ்த்தவப் பாதிரியாரும்: ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் கிறித்தவப் பாதிரியார் நாகர்கோவிலிலிருந்து வந்த மைக்கேல் தம்புராசு. அவர் இந்து மதத்தை விஞ்சிக்க ஆரம்பித்தார். “பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம், கூடாது…! பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை அம்மாணவன், அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…! மாணவன்: “பாதிரியார் அவர்களே! ஓரு சந்தேகம், அதை நீங்கள்…! பாதிரியார்: “என்ன சந்தேகம்? அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை..! மாணவன்: “அப்படியனால், கோபப்படக்கூடாது நீங்கள்…!” பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?” எதுவானாலும் கேளுங்கள் . . .! மாணவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின் உள்ளே சிலையாக இருப்பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…” பாதிரியார்: “இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !” மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு தாயார், அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”. பாதிரியார்: “ஆமாம்…!” மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும் மக்களும் இருக்கிறார்கள்.” பாதிரியார்: “உண்மை தான்” மாணவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள் தானே…?” பாதிரியார்: “சந்தேகம் என்ன வந்தது இதிலே?” மாணவன்: “அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற்படுமேயானால். . .! உங்கள் மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய், தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படி பாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில்…?” இடியோசை கேட்ட நாகம் போலாகிவிட்டார் பாதிரியார். எதிர்பாராது எழுந்த இக் கேள்வியைக்கேட்டதும். அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பியஆரவாரங்கள், கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார் பாதிரியார் . பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள்… பிற மதங்களைப் பழிக்கக் கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன், தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள். உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன். நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான். நன்றி”. அடுத்த வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார் வெளியேறினார் . அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும் உத்தமர், பசும்பொன் தந்த சித்தர் உ.முத்துராமலிங்கத் தேவர்.

No comments:

Post a Comment