Thursday, January 30, 2014

தமிழக மீனவர் உரிமை காக்கும் கடல் தாமரை போராட்டம் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்கள் மற்றும் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது ...தமிழக மக்கள் மற்றும் தாமரை சொந்தங்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு வங்ககடலில் நமது உரிமையை நிலைநாட்டுவோம்நாள் : 31.01.2014இடம் : இராமேஸ்வரம்,மாலை 3மணி 
பழசை மறந்துடக்கூடாது !!!

விவசாயி ஒருவர் தன் பண்ணையில் ஆயிரம் பசுக்களை வளர்த்தார். அவை நன்றாகப் பால் கறந்தன. கிடைத்த வருமானத்தில் பெரிய வீடு கட்டினார். மகளை பெரிய இடத்தில் கட்டிக் கொடுத்தார். இரண்டு மகன்களை படிக்க வைத்தார். அந்தப் பிள்ளைகள் பொறுப்பானவர்கள். பசுக்களுடன் அவர்கள் அன்பாக இருந்தனர்.

காலம் கடந்தது. பண்ணையில் இருந்த சில பசுக்களிடம் பால் வற்றி விட்டது. அவை கிழடாகி விட்டதால் இந்த நிலை ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்ட விவசாயி, மனைவியை அழைத்து,""அடியே! சில மாடுகள் கிழடாகி பால் குறைந்துவிட்டது. அதை அடிமாட்டுக்கு அனுப்பி விட வேண்டியது தானே! பணமும் கிடைக்கும்,'' என்றான். அவளும் ஆமோதித்தாள்.

இதை பிள்ளைகள் கேட்டனர். தந்தையிடம் சென்றனர்.

""அப்பா! வயதாகி விட்டால் எதற்குமே நாம் பயன்பட மாட்டோமா?'' என்றனர்.

""அதிலென்ன சந்தேகம்! நிற்கக் கூட முடியாது. கால்கள் தள்ளாடும், கைகள் நடுங்கும், '' என்றார் தந்தை.

""அந்த நேரத்தில் நம்மை யார் காப்பாற்றுவார்கள்?'' என்ற பிள்ளைகளிடம், ""அவரவர் வளர்ச்சிக்கு காரணமானவர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

உதாரணத்துக்கு எனக்கு வயதாகி விட்டால், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்'' என பதிலளித்தார்.

""அப்பா! நம் மாடுகள் கிழடாகி விட்டாலும், அவை இதுவரை நம்மோடு வாழ்ந்து பால் தந்து நம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளன. அவற்றை மட்டும் கொல்ல வேண்டும் என்கிறீர்களே! இது என்ன நியாயம்! நம்மைப் போல நம் வளர்ச்சிக்கு காரணமான அந்த விலங்குகளையும் நேசிக்க வேண்டுமல்லவா!'' என்ற பிள்ளைகளின் பேச்சு, விவசாயியின் மனதில் சம்மட்டி அடியாய் விழுந்தது.

மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பும் எண்ணத்தைக் கைவிட்டு தனியிடத்தில் கட்டி வைத்து, அவை இயற்கையாக மரணமடையும் வரையில் பராமரித்து வந்தார்.

நன்றி : விஜயபாரதம்
நமது ஸ்ரீ.மோடிஜி 8/02/2014 மாலை 3 மணி அளவில் நமது சென்னை அருகில் உள்ள வண்டலூர் VGP மைதானத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் பொது கூட்டத்தில் கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்.நண்பர்கள் அனைவரும் அவரவர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் தக்க முறையில் தெரியப்படுத்தி தவறாமல் கலந்து கொண்டு பொது கூட்டம் மிக சிறப்பான வெற்றி பெற உதவ வேண்டுகிறேன்.
statue of unity movement
modi ji
வழிபாட்டில் காகத்திற்கு சாதம் வைப்பது ஏன்?
ஜனவரி 28,2014


Temple images
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்குச் சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பது நம்பிக்கை. காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்துபோன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாகக் கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று தன்னிடம் உள்ள பொருளை பிறருக்குப் பகுத்துண்டு வாழவேண்டும் என்று வள்ளுவர் நமக்கு போதித்திருக்கிறார். அப்பாடத்தை தவறாமல் பின்பற்றும் குணம் காகத்திற்கு இருக்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்தபின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுவது சரிதானே!
லக்னோ : பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, உ.பி., கோவிலில், சிலை அமைக்கப்பட்டு, தினமும் ஏராளமானோர் வணங்கி வருகின்றனர்.

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின், கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ளது பகவான்பூர் கிராமம். இங்குள்ள பழமையான சிவன் கோவிலில் தான், மோடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில், மோடி அமர்ந்திருப்பது போல், நான்கடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு, மோடி போல் தாடி, உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன.

தினமும் ஏராளமான, பா.ஜ.,வினரும், மோடி ஆதரவாளர்களும் அந்த கோவிலுக்கு வந்து, 'மோடி சாலிசா' எனப்படும், மோடி புகழ் மந்திரங்களை பாடுகின்றனர். சிலர், மலர் மாலைகள் சூட்டி, வணங்கவும் செய்கின்றனர்.மேலும், அந்தக் கோவிலின் அர்ச்சகர், பிரிஜேந்திர நாராயண் மிஸ்ரா, 49, மோடி போலவே உடையணிந்து, பூஜை மேற்கொள்கிறார். மோடி சிலை அருகே, 24 மணி நேரமும், விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.இந்த தகவல், சமீபத்தில் தான், பிற பகுதியினருக்கு தெரிய வந்தது. அதையடுத்து, ஏராளமானோர், இந்த கோவிலுக்கு வந்து மோடியை தரிசித்து செல்கின்றனர்.
On Mahatma Gandhi's Punya Tithi, we bow to the Father of the Nation & pledge to uphold his ideals & teachings for peace & progress of India. http://nm4.in/1noavsx

Wednesday, January 29, 2014


கலைகிறது காங்., கூடாரம்: தேசிய மாநாட்டு கட்சியை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை எதிரொலிக்கும் வகையில், அக்கட்சியின் தலைவர் பிரபுல் பட்டேல், மோடிக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளார். குஜராத்தில் நடந்த 2002ம் ஆண்டு கலவரம் குறித்து நரேந்திரமோடிக்கு நீதிதுறை குற்றமற்றவர் என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்நிலையில், ராகுல் உள்ளிட்ட பலர், இந்த விஷயத்தை கையில் எடுத்து பேசுவது சரியல்ல. நீதிதுறை ஒரு முடிவை அறிவித்துவிட்டால், அதை மதிக்க வேண்டியது அனைவரின் கடமை எ அவர் கூறி உள்ளார். இது, காங்கிரஸ் கட்சியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

மத்தியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியியேறி உள்ள நிலையில் மாநிலத்திலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறி வருகின்றன. இதனால் மத்தியில் மட்டுமின்றி மாநிலத்திலும் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய கூட்டணி கட்சிகள் வெளியேறி வரும் நிலையில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகள் பதவி ஆசையில் காங்கிரசிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இவற்றின் மீது ஊழல் கறை படிந்துள்ளதால், காங்கிரஸ் செய்வதறியாமல் திகைத்து வருகிறது.
மோடிக்கு ஆதரவு : காஷ்மீரில் காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவுக்கு வரும் இறுதி கட்டத்தில் இருப்பதால் ஒமர் அப்துல்லா பதவியை ராஜினாமா செய்து, தேர்தலை தனித்து சந்திக்க தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து கட்சி தலைவரும், அவரது தந்தையுமான பரூக் அப்துல்லா டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒமரின் முடிவுபடி நடக்க திட்டமிட்டுள்ளோம்; அதற்கு முன் நாங்கள் எதையும் முடிவு செய்யப் போவதில்லை; மோடி பிரதமர் ஆவதை எங்கள் கட்சி எதிர்க்கவில்லை; மோடியின் வெற்றி, தோல்வியை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்; இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; மோடி தான் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் விரும்பினால் அந்த தீர்ப்பை எங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளும்; காங்கிரசும்- தேசிய மாநாட்டு கட்சியும் காஷ்மீரின் 3 பகுதிகளில் ஆட்சி செய்து வருகிறது; வரும் தேர்தலிலும் காங்கிரசிற்கு நாங்கள் சீட் அளித்தால் எங்கள் கட்சி தனித்தன்மையை இழக்க வேண்டி வரும்; வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை; தனித்து போட்டியிடவே காங்கிரசும் விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
 ராகுல் பிரபல டிவி நிருவன பேட்டி இலகணேசன் ஜி கருத்து ,,,,,,,பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, நாட்டின் பல நகரங்களில், 70க்கும் மேற்பட்ட கூட்டங்களில் பேசிவிட்டார். இன்னும் சில கூட்டங்களில் பேசிவிட்டால், அவரது வெற்றி உறுதியாகிவிடும் என, நினைத்தோம்.ஆனால், ராகுலின் தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்த பின், மோடி இனி பேசத் தேவையில்லை. ராகுல் பேசினாலே போதும். மோடியின் வெற்றி உறுதியாகிவிடும் என்ற எண்ணம், எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி பேட்டியில், எந்த ஒரு கேள்விக்கும், நேரடியான பதிலை ராகுல் கூறவில்லை. அவருக்கு வரலாறு தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாளிதழ்களை படிக்கும் பழக்கம் கூடவா அவருக்கு இல்லை. கோத்ரா சம்பவம் குறித்து, நீதிமன்றம் அமைத்த குழு அளித்த அறிக்கையை தொடர்ந்தே, கோத்ரா சம்பவத்தில், மோடிக்கு தொடர்பில்லை என, நீதிமன்றம்அறிவித்தது.ஆனால், மோடிக்கும், கோத்ரா சம்பவத்துக்கும் தொடர்புண்டு என்பது போன்ற பொய் பிரசாரத்தை, ராகுல் செய்து வருகிறார். ராகுலின் சொந்த தொகுதியான அமேதி குறித்து, சுப்ர மணியசாமி தெரிவித்த கருத்துக்கு, ராகுலால் எந்த பதிலையும் கூற முடியவில்லை. மாறாக, அவர் தனிமனித விமர்சனத்தை செய்ய விரும்பவில்லை. சமூக மாற்றத்துக்கானவிவாதத்தை செய்ய விரும்புகிறார் என்கின்றனர்.

பகதுார் சாஸ்திரி, 'திங்கள்கிழமை இரவு ஒரு நேரம் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்' என்றார். பல கோடி மக்கள் பின்பற்றினர். இதற்குக் காரணம், சொல்கிறவர்களுக்கு உள்ள தகுதியை மக்கள் அறிந்து கொண்டிருந்தனர். ராகுல் சார்ந்துள்ள காங்கிரசும், அவரது குடும்பம் மீதும், ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், சமூக மாற்றம் வேண்டும் என, ராகுல் விரும்புகிறார். அதற்கு, விவாதம் நடத்த வேண்டும் என்பதை, யாரும் கேட்கவும் மாட்டார்கள், ஏற்கவும் மாட்டார்கள்.இல.கணேசன் ஜி பா.ஜ., தேசிய குழு உறுப்பினர் .

Tuesday, January 28, 2014

மோடி ஒரு சாமானியர் ; வாழ்க்கை வரலாறு 1950ம் ஆண்டு செப்டம்பர்மாதம் வடக்கு குஜாத்தின், மேஹசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார் நரேந்திர மோடி. தாராளமனது , பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, சமூகசேவையாற்றும் எண்ணம் ஆகிய சூழலின் கீழ் அவர் வளர்ந்தார். இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரின் போது, சிறு வயதில் இருந்த மோடி, படைவீரர்களுக்கு உணவு கொண்டு சென்றுகொடுத்த குழுவில் இடம் பெற்றிருந்தார். 1967ம் ஆண்டு, குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார். சிறந்தநிர்வாக ஒருங்கிணைப்பு திறமையை கொண்டிருந்த மோடி, மனித உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவராகவும் விளங்கினார். அகில பாரத வித்யார்த்திபரிஷத் அமைப்பிலும், பல்வேறு சமூக அரசியல் இயக்கங்களிலும் பங்கெடுத்துள்ளார் மோடி. சிறுவயது முதலே அவர் பல்வேறு தடைகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப்போராடி வென்றுவந்துள்ளார். தன் முன் இருந்த சவால்களை உடைத்து அவற்றை வாய்ப்புகளாக மாற்றிவிடுவார். தனது குணாதிசயத்தின் பலத்தாலும், தைரியத்தாலும் முன்னேறியவர் மோடி. அவர் கல்லூரியிலும், பின்னர் பல்கலைக் கழகத்திலும் சேர்ந்தபோது, அவரது பாதைநெடுகிலும் கடுமையான போராட்டங்களே நிரம்பியிருந்தன. ஆனால் வாழ்க்கை போராட்டத்தில் எப்போதுமே அவர் ஒருபோராளியாகவே திகழ்ந்தார். உண்மையான வீரராக பரிமளித்தார். ஒருமுறை அடியெடுத்து வைத்து விட்டால் அவர் திரும்பி பார்ப்பதே இல்லை. தோல்வியை அவர் ஏற்கவேமாட்டார். தோல்வியையே தழுவாதவரும்கூட. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்து முதலில்தனது செயல்பாட்டைத் தொடங்கினார். அப்போது அவர் பலமுக்கியப் பணிகளை ஆற்றியுள்ளார். 1974ம் ஆண்டு நடந்த நவ்நிர்மான் ஊழல் எதிர்ப்புப்போராட்டம் அதில் ஒன்று. அதேபோல, 1975 முதல் 77 வரையிலான 19 மாதகால அவசர நிலைச் சட்டத்தின் போதும் அவர் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றார்.இந்தக் காலகட்டம் முழுவதும் அவர் தலைமறைவாக இருந்து போராட்டங்களில் பங்கேற்றார். 1987ம் ஆண்டு பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் இறங்கினார். அடுத்த ஒரு வருடத்திலேயே அவர் குஜராத்மாநில பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார். அந்த சமயத்தில் அவர் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக பெயர்பெற்றிருந்தார். கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டி சரியான பாதையில் செலுத்தும் பணியை அவர் விரும்பி ஏற்றுசெயல்பட்டார். 1990ம் ஆண்டு மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய பாடுபட்டார். இந்த நிலையில் குஜராத்தில் 1995ம் ஆண்டு பாஜாக மூன்றில் இரண்டு மடங்கு மெஜாரிட்டியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அன்று முதல் இன்று வரை பாஜகவே குஜராத்தில் ஆட்சி நடத்தி வருகிறது. 1988 முதல் 95 வரையிலான காலகட்டத்தில் மிகச்சிறந்த திட்டமிடுபவராக செயல்பட்டார் மோடி. குஜராத் பா.ஜ.க.,வை ஆளுங் கட்சியாக்க தேவையான அடிப்படைப்பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்தவர் என்ற பெயரையும் பெற்றார். இந்தசமயத்தில் இரண்டு முக்கியமான தேசிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணியும் அவருக்கு வந்துசேர்ந்தது. அதில் ஒன்று சோம்நாத் முதல் அயோத்தி வரையிலான அத்வானியின் ரதயாத்திரை. அதேபோல கன்னியா குமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரை. 1998ம் ஆண்டு டெல்லியில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்ற இந்த இரண்டு யாத்திரைகளும்தான் முக்கியக்காரணம். இதை திறம்பட நடத்திக் காட்டியவர் மோடி. 1995ம் ஆண்டு பாஜகவின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டார் மோடி. ஐந்து முக்கிய மாநிலங்களின் பொறுப்பாளர் பணி அவருக்குத் தரப்பட்டது 1998ம் ஆண்டு கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்தார். 2001 அக்டோபர் வரை இப்பொறுப்பை அவர் வகித்தார். அதன் பின்னர் அவர் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார். தேசிய அரசியலி்ல அவர் இருந்தபோது, பல்வேறு மாநிலகட்சி நிர்வாகங்களை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக முக்கியமான ஜம்முகாஷ்மீர் மாநில பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டது. அதேபோல வடகிழக்கு மாநிலங்களின் பாஜக நிர்வாகங்களையும் அவர் கவனித்தார். தேசிய அளவில் பணியாற்றிய போது கட்சியின் முக்கியச் செய்தித் தொடர்பாளராகவும் விளங்கினார் மோடி. அப்போது அவர் பலமுக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிட்டின. இந்த காலகட்டத்தில் அவர் உலகம் முழுவதும் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு முக்கிய உலகத் தலைவர்களை சந்தித்துள்ளார். இந்த அனுபவம், அவருக்கு உலகளாவிய பார்வையைக் கொடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும், இந்தியாவுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கையையும் ஏற்படுத்தி கொடுத்தது. 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம், குஜராத்மாநில பாஜக ஆட்சிக்குத் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் மோடி. அக்டோபர் 7ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற போது, குஜராத் மாநிலம் பொருளாதார சீர்குலைவில் இருந்தது. பல இயற்கைச்சீற்றங்கள், மிகப்பெரிய நிலநடுக்கம் போன்றவற்றால் பெரும்பாதிப்பில் இருந்தது குஜராத். இருப்பினும், மோடி, மிகச்சிறப்பாக செயல்பட்டு, தனது அனுபவத்தால், அத்தனை துயரங்களிலிருந்தும் குஜராத்தை மீட்டெடுக்க ஆரம்பித்தார். முதல்வராக அவர் பொறுப்பேற்றபோது அவர் முன் இருந்த மிகப்பெரிய சவால், 2001ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மறு சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள்தான். பூஜ் நகரம் தான் மிகப்பெரிய சீரழிவை சந்தித்திருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்கியிருந்தனர். எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை. ஆனால் இன்று பூஜ்நகரத்தை மிகச்சிறந்த நகரமாக மாற்றியுள்ளார் மோடி. மறுசீரமைப்பும், மறுவாழ்வுப் பணிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தொலை நோக்குப் பார்வையுடன் மறுபக்கம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார் மோடி. குஜராத் மாநிலம் எப்போதுமே தொழில் வளர்ச்சியை மட்டுமே பார்த்தபடி வளர்ந்து வந்தது. அதை மாற்றி, சமூக பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சமூக பொருளாதார வளர்ச்சியை சரிவிகித சமானத்தில் கவனிக்க ஆரம்பித்தார் மோடி. இதன் விளைவாக உதித்ததுதான் பஞ்சம்ருத் யோஜனா. அதாவது ஐந்து முனை வளர்ச்சித் திட்டம் என்பதாகும். அவருடைய தலைமையின் கீழ், குஜராத் மிகப் பெரிய மாற்றத்தை பல்வேறு பிரிவுகளில் சந்தித்தது. கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. குஜராத் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டு செயல்பட ஆரம்பித்தார் மோடி.நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைத்தார். இப்படி பல்வேறு பணிகள் மூலம் குஜராத்தை வளர்ச்சிப் பாதையில் நடை போட வைத்தார் மோடி. முதல்வராகப் பதவிக்கு வந்த 100 நாட்களிலேயே அவரது தொலைநோக்கும், திறமையும், குறிக்கோள்களும் அனைவராலும் உணரப்பட்டன. இவை அனைத்தும் 2002 டிசம்பரில் குஜராத்தில் நடந்த பொதுத் தேர்தலில் இரட்டிப்புப் பலன்களைக் கொடுத்தன. மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது, பெரிய பலத்துடன். மொத்தம் உள்ள 182 இடங்களில் 128 இடங்களை மோடி அரசு கைப்பற்றியது. இதே வெற்றி 2007 தேர்தலிலும் எதிரொலித்தது. மீண்டும் ஒரு சாதனை வெற்றியுடன் பாஜக, மோடி தலைமையில் குஜராத்தில் ஆட்சியைப் பிடித்தது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியுடன் 4000 நாட்களை மக்கள் பணியில் நிறைவு செய்தார் மோடி. தொடர்ந்து மூன்று தேர்தலில் மக்களின் ஆசியுடன் ஆட்சியமைக்கும் அரிய வாய்ப்பையும் மோடி பெற்றார். 2002, 2007 தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து 2012ல் நடந்த பொதுத் தேர்தலிலும் குஜராத் பாஜக, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. குஜராத் முதல்வராக நான்காவது முறையாக 2012, டிசம்பர் 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டார் மோடி. இன்று மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாட்டின் முன்னணி மாநிலமாக குஜராத் திகழ்கிறது. மின் ஆளுமை, முதலீடுகள், வறுமை ஒழிப்பு, மின்சார உற்பத்தி, பொருளாதார மண்டலங்கள், சாலை வசதிகள், நிதி ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குஜராத் முதன்மையான இடத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் குஜராத் வளரவில்லை. மாறாக, அனைத்து முக்கியத் துறைகளிலும், அதாவது விவசாயம், தொழில் மற்றும் சேவை என்று வளர்ந்துள்ளது. இந்த மாபெரும் வளர்ச்சிக்குப் பின்னால், மோடியின் சப்கா சாத், சப்கா விகாஸ் ஆகியவை உள்ளன. மக்களுக்காக, மக்களுக்கான நல்லாட்சி என்பதே மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. அனைத்து அவ நம்பிக்கைளுக்கு எதிராகவும், நர்மதா அணையின் உயரம் 121.9 மீட்டராக உயர்த்தப்பட்டது. இந்த கட்டுமானத்திற்கு எதிராகப் போராடியவர்களை எதிர்த்து மோடியே உண்ணாவிரதம் இருந்தார். நீர்ப் பாதுகாப்புக்கு நர்மதா அணை ஒரு மிகப் பெரிய உதாரணமாகத் திகழ்கிறது. சோயில் ஹெல்த் கார்ட், ரோமிங் ரேஷன் கார்டு, ரோமிங் ஸ்கூல் கார்டு போன்றவை சாதாரண மக்கள் மீது மோடிக்கு உள்ள அக்கறையைக் காட்டுவதாக உள்ளது. அதேபோல கிரிஷி மகாத்சோவ், சிரஞ்சீவி யோஜனா, மாத்ரு வந்தனா, பேட்டி பச்சாவ், ஜோதிகிராம் யோஜனா, கர்ம்யோகி அபியான், இமம்தா, இஎம்பவர், ஸ்கோப், ஐகிரியேட் போன்றவை பன்னோக்கு வளர்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவையெல்லாம் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அக்கறைப்படும் மோடியின் திறமையான தலைமைத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இளமையான சிந்தனைகளுடன் கூடிய தலைவராக மோடி திகழ்கிறார். தனது நோக்கத்தையும் குறிக்கோளையும் குஜராத் மக்களுக்கு அவர் தனது செயல்பாடுகள் மூலம் புரிய வைத்துள்ளார். 6 கோடி குஜராத்திகள் மத்தியில் நம்பிக்கையை விதைத்துள்ளார் மோடி. லட்சம் பேர் மத்தியில் பேசினாலும் மக்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அவரது ஞாபக சக்தி மக்களைக் கவர்ந்த விஷயமாகும். மக்களின் டார்லிங்காக அவர் திகழ்கிறார். ஆன்மீகத் தலைவர்கள் மீது அலாதிப் பற்று கொண்டவர் மோடி. இது மதத் தலைவர்கள் மத்தியில் நல்ல பெயரை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. மதப் பாகுபாடுபா பாராமல், அத்தனை மதத்தினரும் நரேந்திர மோடி அன்பும் பற்றும் வைத்துள்ளனர். சிறந்த பேச்சாளரான மோடி, பிரச்சனைகளை பேசித் தீர்ப்பதிலும் கில்லாடியும் கூட. கிராமப்புற மக்களின் அன்பையும், நகர்ப்புற மக்களின் அன்பையும் ஒரு சேரப் பெற்றவர். மோடியின் தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் உலக அளவில் குவித்துள்ளது. ஐ.நா. சசக்வா விருது அதில் ஒன்று. அதேபோல காமன்வெல்த் பொது நிர்வாக அமைப்பின் விருது, யுனெஸ்கோ விருது, மின் ஆளுமைக்கான சிஎஸ்ஐ விருது ஆகியவை அதில் சில. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் சிறந்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடி. குஜராத்தை உலக வரைபடத்தில் இடம் பெறவைத்தவர் மோடி. வைப்ரன்ட் குஜராத் நிகழ்வுகள் மூலம் குஜராத்தை அனைவரும் விரும்பும் முதலீட்டு மையமாக மாற்றியவர். 2013 வைப்ரன்ட் குஜராத் நிகழ்வானது 120 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை ஈர்த்தது. இது மிகப் பெரிய சாதனையாகும். கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை தொடர்ந்து வருகிறது. மேலும் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. மறுபக்கம் மோடியின் அயராத பயணமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இலக்காக அவர் படிப்படியாக நடை போட்டு வருகிறார். அரசியலிலும் கூட அடிமட்ட அளவிலிருந்து உயர் பதவிக்கு வந்தது வரை அவர் சாதித்தவை ஏராளம்.. ஏராளம். நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு, வாழ்க்கை குறிப்
தனக்கு கிடைத்த பரிசுகளை அரசு கஜானாவில் ஒப்படைத்தார் மோடி கடந்த ஆண்டில் தனக்கு கிடைத்த பரிசுகளை குஜராத் அரசு கஜானாவில் 1-1-2014 அன்று ஒப்படைத்தார் திரு.நரேந்திரமோடி. மொத்தம் ரூபாய் 26.54 லட்சம் மதிப்புள்ள 3,064 பரிசுப்பொருட்கள். தங்கம், வெள்ளி என 103 கலைப்பொருட்களுடன் (ரூ14.81 லட்சம் மதிப்பு), ரதங்கள், நாணயங்கள், வாட்ச்கள், மெடல்கள் போன்றவையும் அடங்கும். இது 13வது ஆண்டு. இவை ஏலம் விடப்பட்டு பணம் அரசுக்கு சேர்க்கப்படும். ஏலத்தேதி விரைவில் அறிவிக்கப்படும். சுழற்சி முறையில் குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது. நவ.2001 முதல் டிச. 2013 வரை ஆண்டுதோறும் ஒப்படைத்து வருகிறார். இதுவரை 15,464 பொருட்கள் ஏலம் விடப்பட்டு ரூ.18.91 கோடி அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு உள்ளது. 2G, CWG, நிலக்கரி, ஆதர்ஷ் என மக்கள் பணத்தை சுரண்டும் மன்மோகன்சிங் அரசு எங்கே? தனக்கு கிடைத்த பரிசுகளை 13 ஆண்டுகளாக தவறாமல் அரசு கஜானாவில் சேர்க்கும் இவர் எங்கே? இந்த மன்மோகன்சிங்தான் மோடி பிரதமரானால் நாட்டிற்கு பேரழிவு என்கிறார். சிந்தியுங்கள் நண்பர்களே!
Shri Narendra Modi meets the newly appointed religious head of Dawoodi Bohra community Syedna Mufaddal Saifuddin in Mumbai, and pays his condolences to the departed religious leader Dr Syedna Mohammed Burhanuddin. To read more http://nm4.in/1f1RaJf
பவம் பசு பாவிகலினல் வந்த கொடுரம் 
மாட்டிறைச்சியை உண்டால் இளவயதில் மரணம் * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * இந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்பட்டாலும் சில சமூகத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில் சளைத்தவர்கள் இல்லை. பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. மாட்டிறைச்சி உலகளவில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேல் நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோக்ளோபின் (Myoglobin) என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மையோக்ளோபின் எந்த அளவு கறியில் இருக்கிறதோ அந்த அளவே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவையும் நிர்ணயம் செய்யும். தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் இருபது சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்களில் அதிகமானவர்கள் இளமையிலேயே இதயபாதிப்பு பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை இதயநோய், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகின்றன
Honoured to be among war veterans & families of martyrs who gave their lives for India, at the Shreshtha Bharat programme in Mumbai. There can be no better way to mark 51 years of 'Ae Mere Vatan Ke Logon' than witnessing Lata ji herself sing parts of this historic song!

Our Armed Forces don't only shine on the battlefield! We have seen their great service in saving lives be it in Uttarakhand or Kutch quake. India needs to be self-reliant in manufacturing defence equipment. Till when will we keep importing arms from overseas?

A very touching part of the evening was when everyone sung 'Ae Mere Vatan Ke Logon' at the end of the programme http://nm4.in/1b1avXd
பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது, தேவை அற்றது' என, தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன் கூறியுள்ளார்.இது, இன்றைய சூழலில் காங்கிரஸ் தலைவர்களுக்கு, பெரிதும் தேவையான அறிவுரை. மோடி குறித்து, ஊடகங்கள் பாராட்டுவது, காங்கிரஸ் தலைவர்களுக்கு, தவறாகத் தோன்றினால், அதை, அவர்கள் நாகரிகமாக எதிர் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து, 'டீ வியாபாரி, காபி வியாபாரி' என்றெல்லாம், தரக் குறைவாக, இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள், மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன.அதோடு, மோடி அலையை பார்த்து, காங்கிரஸ் பயந்து விட்டதால் தான், இப்படி பேசுகின்றனரோ என்ற எண்ணத்தையும், மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. காங்கிரஸ், மேலும் வலு இழந்து போவதற்கும் இது வழி வகுக்கும்.ஞானதேசிகனின், மேற்சுட்டிய கருத்து, மாநில தலைவர்களுக்கு மட்டும் அன்றி, தேசிய தலைவர்களுக்கும் பொருந்தும்.கொள்கைகளில் மட்டும் மாறுபட்டு, மக்கள் பணி செய்ய, முதல் ஆளாய் தோள் கொடுக்கும் தலைவர்கள் தான், நினைவில் கொள்ளப்படுவர். அவர்கள், எதிர்க்கட்சியில் இருந்தாலும், ஆளும்கட்சியில் இருந்தாலும், அதைப் பற்றி கவலை இல்லை.வெற்று விமர்சனங்கள், எந்த பயனையுமே தராது.
நன்றி ;பிரசன்னா
.காங்., மறைமுக பிரதமர் வேட்பாளர் தான் ராகுல்:அருண்
ஜேட்லி......காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையிலும்,
பா.ஜ.,கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பா.ஜனதா தலைவரும் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி கூறுகையில்,ராகுலை சுற்றியே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை இருக்கிறது. எப்படியோ, இப்போது அவர் பிரதமர் வேட்பாளராக இல்லை. இருப்பினும், ராகுலை சுற்றிதான் நடவடிக்கைகள் இருக்கின்றனவே ஏன் என்று தெரியவில்லை அவர்தான் காங்கிரஸ் கட்சியின் மறைமுக பிரதமர் வேட்பாளர் என்பது தற்போது தெரியவருகிறது.
காங்கிரஸ்காரர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அவர்கள் தயாராகவும் இல்லை விருப்பமும் இல்லை.ஏனென்றால் பயம் தான் காரணம்.லோக்சபா தேர்தலில் அவர்களுக்கு எதிரான முடிவுகள் வந்தால் ராகுல் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும். அதனால் அவர்கள் பயப்படுகின்றனர்.சந்தையில் பொருட்களை விற்க விளம்பரம் அவசியம் ஆகிறது.அதற்கு பணம் செலவழிக்க வேண்டும். அதைதான் காங்கிரஸ் கடந்த நான்கு மாதங்களாக செய்துவருகிறது.தேர்தலை அப்படி செய்து விடமுடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்றார் அருண் ஜேட்ல
போர் நினைவுச் சின்னம் இல்லாத ஒரே நாடு இந்தியா; நரேந்திர மோடி வேதனை,,,,,,,சீனாவுடன் 1961ல் நடைபெற்ற போரில் உயிர் நீத்த வீரர்கள் நினைவாக. லதா மங்கேஷ்கர் பாடிய பாடலின் 51வது ஆண்டு நிறைவை ஒட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏக்கத்துடன் நிகழ்த்திய உரை வருமாறு: நாட்டிற்காக உயிர் நீத்த வீரர்களுக்காக காஙகிரஸ் அரசு, ஒரு போர் நினைவுச் சின்னத்தை இதுவரை ஏற்படுத்தவில்லை. அந்த நல்ல பணியை எனக்காக அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள் போலும். போரில் உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை கவுரவிப்பதற்காக அமைக்கப்படும் நினைவுச் சின்னம் இல்லாத ஒரே நாடு இந்தியாதான் என்பது வேதனையான விஷயம். தற்போதைய நிலையில், அடுத்து வரும் பொதுத் தேர்தலில், பாரதிய ஜனதாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது. ( அப்போது கூட்டத்தினர், மோடியைக் கொண்டு வாருங்கள்; நாட்டைக் காப்பாற்றுங்கள் என் முழங்கினர்).

நேரு முன் பாடப்பட்ட பாடல்


: கவி பிரதீ்ப் எழுதிய இந்த பாடலை, சி.ராமச்சந்திரா இசையமைக்க, 1963, ஜனவரி 27ம் தேதி அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு முன்னிலையில் லதா மங்கேஷ்கர் பாடினார். லதா மங்கேஷ்கர் தற்போது கடந்த காலத்தை நம்முடன் இணைத்துள்ளார். நேர முதலில் கேட்ட பாடலை நாமும் இப்போது கேட்பது நமக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகும்.

ஒரு ராணுவ சக்தியாக விளங்கும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது; இந்தியா முடிவு செய்தால், சரியான தலைமையும், கொள்கைகளும் இருந்தால், 10 ஆண்டுகளில் இந்தியா இதர நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும். போர் வீரர்களையும் தியாகிகளின் குடும்பத்தினரையும் கவுரவிப்பதென்பது, நாட்டிற்காக சுயநலம் இல்லாமல் தியாகம் செய்த அனைவரையும் கவுரவிப்பதாகும் என்றார்.

ஆயுதப்படை வீரர்களே பெருமளவில் பங்கேற்ற இந்த நிகழ்வில், அவர்களுக்காக மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பரவியுள்ள படைவீரர்களுக்காகவும் மோடி பேசினார். போர் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று உறுதி கூறியதோடு, சமீபத்தில் இந்திய வீரர்களின் தலையை பாகிஸ்தானிய ராணுவம் துண்டித்தது, சீனாவின் சைபர் தாக்குதல், ஆயுதங்கள் வாங்குவதற்கு போதிய நிதி ஒதுக்காமை போன்ற விஷயங்களையும் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி, தேச பக்தி பாடல்களுட்ன துவங்கியது. மோடியும் லதாவும் மேடைக்கு வந்ததும், தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். 26/ 11ல் நடைபெற்ற மும்பை தாக்குதலில் போராடி உயிர் நீத்தவர்களுக்கும், போராடியவர்களுக்கும் மோடி பாராட்டு தெரிவித்தார். எல்லையில் உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கும், அவர்களை தியாகம் செய்ய அனுப்பிய அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இந்த நிகழ்வில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின்போது லதா மங்கேஷ்கருடன் சேர்ந்து, மோடியும் அந்த பாடலைக் கண்ணீர் விட்டபடியே பாடினார். லதா மங்கேஷ்கர் பேசுகையில், இந்த நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசக்கூடாது; மோடியைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த, நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு என்னுடைய நன்றி என்றார். கடந்த நவம்பரில் புனேயில், தன்னுடைய தந்தை நினைவாக கட்டப்பட்ட மருத்துவ மனை திறப்பு விழாவில் லதா மங்கேஷ்கர் பேசுகையில், நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்று இந்தியாவில் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர் என்று பேசினார். இது அப்போது அரசியல் வட்டாரத்தில் பல விமர்சனத்திற்குள்ளானது.

Monday, January 27, 2014

நரேந்திர மோடி, டீ விற்றவர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட வேண்டாம். தேவையானால், டில்லியில் காங்., மாநாட்டில் வந்து, டீ சப்ளை செய்யலாம்' எனத் தெரிவித்துள்ளார், ராஜ்யசபா எம்.பி.,யான, மணிசங்கர் அய்யர்.மோடி, தன் கடுமையான உழைப்பால் முன்னேறி, பா.ஜ., கட்சியில் நல்ல பெயர் எடுத்து, குஜராத்தின் முதல்வராகி, அதையும் பல துறைகளில் முன்னிலைப்படுத்தி வருவது, நாடறிந்த விஷயம்.மணிசங்கர் அய்யர் செல்வக் குடும்பத்தைச் சேர்ந்தவர். டேராடூனில் உள்ள, 'டூன் ஸ்கூலில்' முன்னாள் பிரதமர் ராஜிவுடன் படித்தவர்.பின் தமிழகத்தில், மயிலாடுதுறை தொகுதியில் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது நண்பர் ராஜிவால் அமைச்சராக்கப்பட்டார்.எனவே, ஆதிக்கமிக்க எண்ணத்துடன், கீழ்த்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த மோடி, பிரதமராக வர இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், வெளிப்படுத்திய வார்த்தைகள் தான் இவை.'ஒரு சாதாரண பிரஜையும், இந்த நாட்டின் பிரதமராகலாம்; ஜனாதிபதியாகலாம்' என்ற, காந்திஜி போன்ற தலைவர்களின் கோட்பாட்டில் இருந்த காங்., இன்று, இவ்வாறு, கீழ்த்தரமான விமர்சனத்தைக் கூறி வரும் தலைவர்களைக் கொண்டதாக மாறிவிட்டது.சிறந்த நல்ல திட்டங்களை நிறைவேற்றியதையும், இனி நிறைவேற்ற இருக்கும் பெரும் திட்டங்களைப் பற்றியும், எதுவும் பேசாமல், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது விரும்பத்தக்கதல்ல. பெருந்தலைவர் காமராஜர், கக்கன் போன்றவர்கள் என்ன கனவான்களா?பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தா, ஜனாதிபதியாக இருந்த ராஜேந்திர பிரசாத், ஜெயில் சிங், வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் போன்றோர், சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.நேருவின் வாரிசுகளான இந்திரா, ராஜிவ், ராகுல் போல் எண்ணிக் கொண்டு, மணிசங்கர் இப்படி பேசுவது, அவருக்குத் தகுதியாக இல்லை.ஒதுக்கப்பட்டிருந்த இனத்தவரை, ஜாதியைக் கூறி இழிவாக எண்ணுவது, சட்டப்படி எவ்வாறு குற்றமோ, அதுபோல, செய்த தொழிலை தாழ்மைப்படுத்திப் பேசுவதும் தவறு தான்.சுய சிந்தனை அவசியம்!

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video

Dinamalar Videos - Breaking News videos, Live News Videos, News Videos Online, Latest Video
பா.ஜ.க.,வுக்கு 20 கோடி வாக்காளர்கள் ஆதரவு:ராம்தேவ் உறுதிபா.ஜ.க.,வுக்கு 20 கோடிக்கும் மேலான வாக்காளர்கள் ஆதரவு அளிப்பார்கள் என யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் நேற்று ஐதராபாத்தில் தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில் பிரதமர் வேட்பாளராக உள்ள நரேந்திர மோடிக்கு தனது ஆதரவையும், நாடு முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்க உள்ளேன். இதில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.யோகா மஹோத்சவம் மூலம் 23 கோடி பேர் ஏற்கனவே சேர்ந்துள்ளனர். இவர்களில் பா.ஜ.க.விற்கு 20 கோடி பேர் ஆதரவளிப்பார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
340 இடங்கள் இலக்


லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., 340 இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதுதான் எங்கள் இலக்கு என்று அவர் மேலும் தெரிவித்தார்.நான் கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜ்நாத்சிங் மற்றும் நிதின்கட்காரி ஆகிய தலைவர்களிடம் கலந்து பேசினேன். அவ்வாறு பேசும்போது அவர்கள் வெளிநாட்டில் உள்ள கருப்புபணத்தை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் வரி சீர்திருத்தம் குறித்தும் எங்களின் முக்கிய திட்டத்தில் உறுதியாக இருப்பதாக ராம்தேவ் தெரிவித்தார்.நாடு முழுவதும் யோகா மஹோத்சவம் மார்ச் மாதம் 23ல் துவங்குகிறது. அது எல்லா மாவட்ட தலைநகரிலும் நாடு முழுவதும் துவங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் , பாரதீய ஜனதா கட்சியின் கொள்கை வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வர போராட்டம் உட்பட, அவரது ஊழல் எதிர்ப்பு சிலுவை உடன்பாடான இருந்த அவர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார் . " நான் ஜனவரி 5 ம் தேதி மோடி , ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்காரி உள்ளிட்ட பாரதீய ஜனதா தலைவர்கள் சந்தித்து பேசினேன் மற்றும் அவர்கள் கருப்பு பணத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் . மேலும் அவர்கள் வரி சீர்திருத்தம் எங்கள் திட்டம் உறுதி வேண்டும்," என்று அவர் கூறினார்

Saturday, January 25, 2014

வாக்களர் விழிப்புணர்வு தினம் வாக்களிப்பிற் தாமரைக்கு


 வாக்களர் விழிப்புணர்வு தினம்
இந்து என்பது ஆங்கிலேயன் கொடுத்த சொற்பதமா? சைமன் தருதலைக்கு இந்த அரேபியா கவிதை சமர்பணம். காபாவில் சிவாலயம் இடிப்பதற்கு முன்னால் எஎழுதப்பட்டது. 1700ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஹிந்து சமயத்தைப்பற்றிய ஒரு அரேபிய கவிதை லபிபின் அகதப் பின் துர்பா' என்பவரால் எழுதப்பட்டது அயா முபார கேல் அரஜ் யூ ரௌயே நோஹா மிலன் ஹிந்தேவ அராத கல்லாஹ் மஜ்யோனஜ்ஜேல் ஜிகரதுன் (1) வஹல் தஜல்லீயதுன் எனானே ஸஹபீ அக அதுன் ஜிகரா வஹாஜே ஹீ யோனஜ்ஜேலுரஸுல் மிலன் ஹிந்த்துன் (2) யே குலுநல்லஹா ய அஹஜல் அரஜ அல்லமின் குல்லஹம் ஃபட்டப்யூ ஜிகரதுல் வத ஹக்குனா மஜம் யோபஜ்ஜேலதுன் (3) வா ஹோவ அல முஜ்ஜம் வாலயஜுரா மெஹல்லஹே தன ஜிலானா ஃபாய்நோமா யா அரவ்வய்யோ முத்தபீன் யோபஸ்ஸேரியோ நஜதுன் (4) வா இஸனேன் ஹுமாரிக் அதர் நாயிஹின்கா அகாவதுன் ! வா அஸ்நத ஆல ருதன்வோஹோவா மஸா எர்அதுன் (5) (ஸை அருல் அகில் பக் – 157) இதன் அர்த்தம் ;- புனித ஹிந்து பூமியே ! நீ பாக்யசாலி ! ஏனெனில் இறைவன் தன் பேரறிவை உனக்கன்றோ வழங்கியுள்ளான். ஹிந்து ரிஷிகளின் மூலம் நான்கு வேதங்களாக வெளிப்பட்ட அவனது பேரறிவு உலகின் நான்கு திசைகளிலும் நான்கு தீபஸ்தம்பங்களாக சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றன. தனது பேரறிவு வெளிப்பட்டு விளங்கும் இந்த வேதங்களைப் பின்பற்றி வாழுமாறு மனித குலத்திற்கு இறைவன் ஆணையிட்டுள்ளான். அறிவு களஞ்சியமான யஜுர் சாமம் ஆகியவை இறைவனின் வரப்பிரசாதம். ஆகையால் சகோதரர்களே அவற்றை பக்தியுடன் பாராயனம் செய்வீர். அவை மோக்ஷத்திற்கு வழிகாட்டுபவை. ரிக் அதர்வணம் ஆகிய இருவேதங்களும் சகோதரத்துவத்தை போதிக்கின்றன. இந்த வேதங்களால் தெளிவடைந்த யாரும் இருளை நோக்கித் திரும்பிச் செல்ல மாட்டார்கள். நன்றி................ ‪#‎அன்புடன்‬ ரவி

Friday, January 24, 2014




திண்டிவனம்: திண்டிவனம் அருகே சீரமைப்பு பணியின்போது ஏராளமான கற்சிலைகள் கிடைத்தன. இதை கண்டு கிராம மக்கள் பரசவம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் கிராமத்தில் விளைநிலத்தின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த சிவன் கோயில் இருந்துள்ளது. பல வருடங்களாக யாரும் செல்லாத காரணத்தால் கோயிலை முட்செடிகள் சூழ்ந்து புதர் போல் காணப்பட்டது.நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராம மக்கள் அப்பகுதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பழுதடைந்த கிணறு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த செடி கொடிகளை அகற்றியபோது விசித்திரமான சாமி சிலைகள், கற்சிலைகள் காணப்பட்டன. மண்ணில் புதைந்த நிலையில் 11க்கும் மேற்பட்ட சிலைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்கள் பெருமளவில் திரண்டனர்.

தொடர்ந்து கற்பூரம் காட்டி சிலைகளுக்கு பூஜை செய்து வணங்கினர். கிராம மக்கள் கூறுகையில், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருந்தோம். நேற்று சிலை இருப்பதை கண்டு பரவசம் அடைந்தோம். விஞ்ஞானம் வளராத காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் பல சிலைகள் புதைந்திருக்கும் என்று கருதுகிறோம். 19ம் நூற்றாண்டின் கன்னிமார் சிலைகளாக இருக்கலாம் என்றனர்.
லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு, மூன்றில் இரண்டு மடங்கு இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகத் தெரிவதாக திருவாய் மலர்ந்துள்ளார், ராகுல்.கதர் சட்டைப் பேர்வழிகள், நல்லாவே காமெடி பண்ணுறாங்க. மகாபாரதப் போரில், பாண்டவர்களின் வெற்றிக்காக, அரவானைப் பலி கொடுக்கச் சொன்னார் கிருஷ்ண பகவான்.மகத்தான தோல்வியைத் தவிர்க்க, 'ராகுல் தான் எங்கள் அடுத்த சூப்பர் பிரதமர்' என்கிறது, காங்கிரஸ் கட்சி. 65 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, இன்று, சீந்துவார் யாரும் இல்லாததால், அரசியல் அனாதையாகிப் போனது தான் மிச்சம்.'கழுதையை நிறுத்தினாலும் கட்டாயம் ஜெயிப்போம்' என்று தெனாவட்டாகப் பேசியவர்கள், இன்று, டிபாசிட் பணம் திரும்பக் கிடைக்குமா என, ஏங்கும் நிலையில் தானே இருக்கின்றனர்.'மணிமேகலையே... மங்கம்மாவே' என்று புகழ்ந்து பாடியவர்கள் எல்லாம், 'அட போம்மா! வேலையைப் பார்த்துக்கிட்டு' என, ஏகடியம் பேச ஆரம்பித்து விட்டனர். ராகுலுக்கு, தவிர்க்க முடியாத கடமை ஒன்று பாக்கி இருக்கிறது. அது, காந்திஜியின் சமாதிக்கு அருகே, காங்கிரஸ் கட்சிக்கும் சமாதி கட்ட, ராகுல் தயாராக வேண்டும்.அப்ப தான் காந்திஜி ஆத்மா சந்தி அடைம் 
சேவகனைத் தேர்ந்தெடுங்கள்; வளர்ச்சியைத் தருகிறேன்: மோடி உருக்கம்
கோரக்பூர்: இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலில் ஒரு சேவகனை (என்னை) தேர்ந்தெடுங்கள்; என்னை ( பா.ஜ.,) வெற்றி பெறச் செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்கு வட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித் தருவேன் என்று பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

வரும், ஏப்ரல், மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில், மூன்று மாதங்களுக்கு முன்பே, மும்முரமாக இறங்கி உள்ள, நரேந்திர மோடி, நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

4 லட்சம் பேர்:

உ.பி., மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான, கோரக்பூரில், நேற்று நடந்த, பிரமாண்டமான, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், மோடி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

நான்கு லட்சம் பேர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், மோடி பேசியதாவது:
இந்த தொலைதூரப்பகுதியிலும் என் பேச்சைக் கேட்க இந்த அளவுக்கு கூட்டம் வருகிறதென்றால், காற்று திசை மாறி அடிக்கிறது என்றுதானே பொருள். காங்கிரசிடமிருந்து இந்தியர்கள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்பதையே இது காட்டுகிறது. கடந்த டிசம்பர் 15ம் தேதி, சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளன்று நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்ற உத்தர பிரதேச இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். உ.பி.,யின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஊர்வலம் ஒரு உலக சாதனையாக உள்ளது. ஒரு நோக்கத்துக்காக, 50 லட்சம் பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். பட்டேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை நிறுவப்படும்; அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையை விட இருமடங்கு உயரம் இருக்கும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களுடைய பழைய உழவுக் கருவிகளை இதற்காக வழங்கியுள்ளனர்.

பா.ஜ., மீது தலித்கள் நம்பிக்கை:

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4ல் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுள்ளது. தலித்களையும் பழங்குடியினரையும் முக்கியமானவர்களாக எவரும் கருதுவதே இல்லை; அவர்களை வெறும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர். 4 மாநிலங்களிலும் பா.ஜ., பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் 34 தனித் தொகதிகளில் பா.ஜ., வென்றுள்ளது; காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சட்டிஸ்கரில் 10 தனித் தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தலித்களும் பழங்குடியினரும் தற்போது பா.ஜ., மீது நம்பிக்கை வைத்துள்ளனர், இந்த நாடு, ஏழை நாடல்ல; இந்த செழிப்பான நாட்டின் மக்களை, காலங்காலமாக, காங்கிரஸ் கட்சி, ஏழைகளாகவே வைத்து விட்டது. அரசியலுக்காக அவர்கள், இவ்வாறு செய்து வருகின்றனர். காங்கிரஸ் ஏழைகளைப் பற்றி பேசுகிறது; ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே அவர்களைப் பற்றி நினைக்கிறது. ஏழைகள் குறித்து காங்கிரசார் பல ஆண்டுகளாக பேசி வருகின்றனர்; ஆனால் ஏழைகளின் நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 60 ஆண்டு காலமாக மாற்றம் அடையாத நிலை குறித்து என்னுடைய கருத்து இதுதான்: ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில்தான் காங்கிரசின் எதிர்காலம் இருக்கிறது.தலித், பழங்குடியின மக்கள், பா.ஜ.,வுக்கு எதிரானவர்கள் என, பிரசாரம் செய்து வந்த காங்கிரஸ், நடந்து முடிந்த, நான்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவைப் பார்த்து, கலங்கிப் போயுள்ளது. நலிவடைந்த சமுதாய மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்களுக்கு, 60 மாதம் ஆட்சி செய்ய அனுமதி தாருங்கள். உங்கள் நிலையை மாற்றிக் காண்பிக்கிறேன்.ஏழ்மை என்பதே, காங்கிரசாருக்கு, என்னவென்று தெரியாது. இந்த நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல, பா.ஜ.,வால் தான் முடியும். மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய, ஓட்டளியுங்கள்.

ஓட்டு வங்கி அரசியல்:

ஓட்டு வங்கி அரசியலால், இத்தனை ஆண்டுகளும், ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட காங்கிரஸ், இந்த முறை, பலத்த அடி வாங்கப் போகிறது. பா.ஜ., வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, மக்களை சந்திக்கிறது. நல்ல நிர்வாகம் இல்லாமல், எந்த வளர்ச்சி திட்டங்களையும் செய்து விட முடியாது.அதனால் தான், 60 மாதங்கள் மட்டும் ஆட்சி செய்ய அனுமதி தாருங்கள் என, நான் கேட்கிறேன். காங்கிரஸ் கட்சி, தலித் மக்களையும், நலிவடைந்த மக்களையும், தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பதாக கூறுகிறது. ஆம்... அவர்களை, மனிதர்களாக பாவிக்காததால் தான், அவர்களை, காங்கிரஸ் தன் சட்டைப் பையில் வைத்திருக்கிறது.

ஏழைகளை கிண்டல் செய்வதா:

ஒரு டீ விற்பனையாரை ( மோடி) காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நமது வறுமையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் பலன் அடைய நினைக்கிறது. ஏழைகளை ஓட்டு வங்கியாக கருதும் ஒரு கட்சியை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இது வெறுமனே ஒரு டீ விற்பனையாளரின் பிரச்னை மட்டுமல்ல. 5 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர். இது ஏழைகளைக் கிண்டல் செய்வதல்லாமல் வேறு எப்படி எடுத்துக் கொள்வது? ஏழைகள் சிரமப்பட்டு வாழ முடியாமல் உயிர் விடுகின்றனர். மத்தியிலும் உபி.,யிலும் உள்ள அரசுகள், வறுமையைப் போக்க அக்கறை காட்டுவதில்லை. இங்குள்ள இளைஞர்களுக்குத் தேவையானது கிடைத்தால் அவர்கள் ஏன் தங்களுடைய நிலத்தையும் பெற்றோரையும் விட்டு விட்டு குஜராத்துக்கு வருகி்னறனர்? உ.பி.,யி்ல் கடவுள் கொடுத்த வளங்கள் ஏராளமாக உள்ளன. முயன்றால் 10 ஆண்டுகளில் இதர மாநிலங்களை உ.பி.மிஞ்சி விடும்

தந்தையும் மகனும் சவால்:

தற்போது தந்தையும் ( முலாயம் சிங்) மகனும் ( அகிலேஷ்) என்னைப் பின் தொடர்ந்து வருகின்றனர். காசியில் அவர்கள் இருவரும் எனக்கு சவால் விட்டுள்ளனர். "உ.பி.,யை குஜராத்தாக மாற்ற மோடியால் முடியாது" என்று சவால் விட்டுள்ளனர். நேதாஜியே ( முலாயம்) உங்களுக்கு குஜராத்தாக மாற்றுவதென்றால் என்னவென்று தெரியுமா? ஒவ்வொரு கிராமத்திலும் 24 மணி நேரமும் மினசப்ளை கிடைக்க வேண்டும். உண்மைதான். இது உங்களால் முடியாது. அதற்கு 56அங்குல மார்பு தேவை. கடந்த 10 ஆண்டாக குஜராத் வளர்ந்துள்ளது; வளர்ந்து வருகிறது. உங்களால் இது முடியாது. நீங்கள் உ.பி.,யை குஜராத்தாக மாற்றினால், குஜராத் மக்கள் உ,பி.,யைத் தேடி வருவார்கள். நீங்கள் பெண்களை மதிப்பதில்லை; அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதும் இல்லை. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால், முதலில் உ.பி.,யிலிருந்து அது அகற்றப்பட வேண்டும். நம்மிடம் கால்நடைகள் உள்ளன; மனிதர்கள், தண்ணீர், உணவு எல்லாமே இருக்கிறது. அப்படியானால் வெளியிலிருந்து ஏன் பால இறக்குமதி செய்ய வேண்டும்? குஜராத்தில் உள்ளது போல ஒரு அமுல் பால்பண்ணையை இங்கு உருவாக்க முடியாதா? நமது நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். உரங்களைப் பெறுவதற்காக விவசாயிகள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; உர மூடைகளை வைத்துள்ள கிடங்குகளோ மூடிக் கிடக்கினறன.

முன்னேற்றப்பாதையில் பா.ஜ.,:

நாடு முன்னறே வேண்டும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை; பா.ஜ., மட்டுமே முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த தேவைகளை பா.ஜ.,வால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியம்.பள்ளித் தேர்வுகளை உரிய நேரத்தில் நடத்த முடியாத மாநில அரசு, கிடங்குளையும் தொழிற்சாலைகளையும் நடத்த முடியாது. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால், இளைஞர்கள் ஆண்டுகளை இழக்கின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். விவசாயத்தை நாம் பாரம்பரிய விவசாயம், கால்நடை பராமரிப்பு, மரம் வளர்த்தல் என மூன்றாக பிரிக்க வேண்டும்; இதற்கு சரியான சிந்தனை, நோக்கம், தலைமை தேவை.தற்போதைய அரசு சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. நமது நாடு ஏழ்மையான நாடு அல்ல; நமது நாடு செழுமையான நாடு; மக்களும் செழி்ப்பாக இருக்க முடியும். இதற்கான முடிவை 2014 தேர்தலில் நாம் எடுத்தாக வேண்டும். தங்களுடைய குழந்தைகள் வேலை தேடி வெளியிடங்களுக்குச் செல்லும்போது, பெற்றோர் கவலைப்பட வேண்டி வரும்.
சேவகனைத் தேர்வு செய்யுங்கள்:


நீங்கள் கடந்த 60 ஆண்டாக உங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் 60 மாதந்தான். எனக்கு 60 மாதம் மட்டுமே கொடுங்கள்; நீங்கள் இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்; இப்போது ஒரு சேவகனைத் தேர்வு செய்யுங்கள். உங்களுடைய கனவுகளைப் பூர்த்தி செய்கிறோம். இன்று சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாள். "நீங்கள எனக்கு ரத்தம் கொடுங்கள்; உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன்" என்று அவர் கூறினார். நான 60 மாத ஆட்சி மட்டுமே கேட்கிறேன். நான் உங்களுக்கு மகிழ்ச்சியை, அமைதியான வாழ்க்கையை தருகிறேன். நாம் உலகோடு போட்டியிட விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆதரவு தேவை. நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்தால், உங்கள் அன்பிற்கு வளர்ச்சி என்ற வட்டியைச் சேர்த்து திருப்பித் தருவேன்.இந்த நாட்டையே, குஜராத் போல் மாற்றிக் காட்டுகிறேன்.எத்தனையோ தேர்தல்களை சந்தித்து விட்டோம். ஆனால், இது, வித்தியாசமான தேர்தல். இந்த நாட்டின் எதிர்காலத்தை மக்கள் முடிவு செய்து விட்ட தேர்தல். காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும், மக்கள் பிரியாவிடை அளிக்கும் தேர்தல் இது.இவ்வாறு மோடி பேசினார்.

Thursday, January 23, 2014

நேதாஜியின் பிறந்தநாளில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு : வைகோ சென்னை: மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும், காங்கிரஸ் கட்சியை வெற்றி கொள்ளும் திறன் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பாஜக இன்று காலையில் தொடங்கியது. கூட்டணி பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவில் இடம் பெற்றுள்ள குமாரவேலு, மோகன்ராஜூலு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வானதி ஸ்ரீனிவாசனும் மதிமுக தலைமையகமான தாயகம் வந்திருந்தார். மதிமுகவின் ஐவர் குழுவில் உள்ள டாக்டர் இரா.மாசிலாமணி, அ.கணேசமூர்த்தி, இமயம் ஜெபராஜ், புலவர் சே.செவந்தியப்பன், சிவகங்கை மாவட்டச் செயலாளர், டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆகியோர் வரவேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். நேதாஜியின் பிறந்தநாளில் நேதாஜியின் பிறந்தநாளான இந்நாள் ஒருபொன்னான நாள், இந்நேரத்தில் பா.ஜ. மாநில தலைவர்களை சந்தி்த்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். காங்.கட்சியை வரப்போகும் தேர்தலில் தூக்கி எறியவேண்டும் என்றார். கூட்டணி பேச்சு வார்த்தை கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றார். காங்கிரஸ் தூக்கி எறியப்படும் வரலாறு காணாத ஊழல், 528 மீனவர்கள் படுகொலை, ஈழத் தமிழர்கள் கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்தது என பல்வேறு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும். காங்கிரஸ் எதிர்ப்பு காங்கிரஸ் கட்சியோடு தேர்தலுக்கு முன்னரோ இல்லை தேர்தலுக்குப் பின்னரோ நேரடியாகவோ, மறைமுகாவோ, கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியுடனும் மதிமுக கூட்டு சேராது என்றார் வைகோ. மோடி அலை நாடெங்கும் மோடி அலை வீசுவதாக தெரிவித்த வைகோ, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுவது நிச்சயம் என்றார். தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு பரிமாணம் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படும் என்றும் அவர் கூறினார். பாஜக கூட்டணியில் மதிமுக பின்னர் பேசிய மாநில பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், "தே.ஜ. கூட்டணியில் மதிமுக இணைய வந்திருப்பது மகிழ்ச்சி என்றார். மோடி சென்னை வருகை கூட்டணிக்கான பூர்வாங்கப் பேச்சு தொடங்கியுள்ளது, இந்த பேச்சுவார்த்தை தொடரும். வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நரேந்திர மோடி சென்னை வரும் போது மதிமுக தலைவர் வைகோ மோடியை நேரில் சந்திக்க வேண்டும்" என்றார்... பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், பா.ஜ. , ம.தி.மு.க. உறவு கூட்டணியில் இல்லாமால் இருந்த காலத்திலும் தொடர்கிறது. தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க இன்று பேச்சுவார்த்தையை துவககியுள்ளோம்.வரும் பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும் போது, ம.தி.மு.க. அமைத்துள்ள குழுவிடம் பேச்சு நடத்தி கூட்டணி உறுதி செய்யப்படும். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார்
"இஸ்லாமிய பயங்கரவாதத்தை இந்திய அரசாங்கம் கையாளும் விதத்தை பார்க்கும் போது, எதிர் காலத்தில் தாலிபான்களுக்கு இந்தியா தான் பாதுகாப்பான இடமாக இருக்கும்".

விளாடிமீர் புடின், ரஷ்ய அதிபர்.

Wednesday, January 22, 2014

45 minutes ago ·
Visited Netaji Subhash Chandra Bose's birthplace at Odia Bazar in Cuttack today and paid tributes to one of the greatest heroes in the history of India's freedom struggle.

Netaji's death is still a mystery for most of us. The entire country is eager to know as to how Netaji died and under what circumstances. The mystery behind his death should be unveiled by the Union government to let the people know the truth.
முன்னால் பிரதமரும், வருங்கால பிரதமரும்.
நமது தேச தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

1897ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இதே நாளில் (ஜனவரி 23) ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் மகனாக பிறந்தார்.

லண்டனில் வேலை செய்து வந்த நேதாஜி, ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பிறகு அந்நிய நாட்டில் இனிமேல் இருக்க கூடாது, நாட்டின் சுதந்திரத்திற்க்காக போராட வேண்டும் என்று தாயகம் திரும்பி காங்கிரஸில் சேர்ந்தார்.

நேதாஜி அவர்கள் காங்கிரஸ் தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். ஆனால், அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார். ஆனால், பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே, தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறினார்.

பின்னர் பல வெளிநாடுகளுக்கு சென்று இந்திய சுதந்திரத்திற்கு ஆதரவு தேடினார். சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பையும் ஏற்படுத்தியதோடு, பெர்லினில் இந்திய வானொலியையும் தொடங்கினார்.
“ராஷ் பிகாரி போஸ்” தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார். 1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடனத்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மாவில் இருந்தபடியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொண்டு 1944ல் ஆங்கிலேயரை எதிர்த்தார்.

இந்திய தேசிய ராணுவப்படை சில தோல்விகளை தழுவியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தலத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார்.

ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டு நேதாஜி பயணம் செய்த விமானம் பர்மோசா தீவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் என ஜப்பானிய வானொலி அறிவித்தது. இந்த செய்தி, இந்திய மக்களை நிலைக்குலைய செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலரும் நம்பவில்லை. இறுதிவரை அவருடைய மரணம் மர்மமாகவே புதைந்துவிட்டது.

----------------------------------------
நேதாஜி அவர்களின் 118வது பிறந்த தினநன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம் உண்மையான பாரத பக்தன் நரேந்திரமோடிஜியை இந்த பாரத தேசத்தின் பாதுகாவலறாக்குவோம் என்று
'சோனியா மருமகன் சென்ற காரை முந்தி சென்றவருக்கு அபராதம்' என்ற செய்தி கண்டேன்.இந்தியா ஜனநாயக நாடா, சர்வாதிகார நாடா என்ற ஐயம் வருகிறது. 'ஊழலைக் களைவோம்' என்று மூச்சு விடாமல் கத்தும் ராகுலும், சோனியாவும், தங்கள் குடும்ப உறுப்பினரான, ராபர்ட் வாத்ரா மீது உள்ள, கோடிக்கணக்கான தொகை கொண்ட நில ஊழல் பற்றி, வாய் திறப்பதில்லை.இந்தியாவில், யாருக்கும் இல்லாத சர்வ சுதந்திரம், வாத்ராவுக்கு அளிக்கப்படுகிறது.எந்த விமான நிலையத்திலும், அவருக்கு விசாரணை இல்லையாம். இவர், ஜனாதிபதி பதவியை விட, எந்த வகையில் உயர்ந்து விட்டார்?அபராதம் விதித்தது, சட்டத்தை மதிக்காத ஆணவம். காலம் மாறும்; பரம்பரைக் குடும்பம் பதவி இழந்தால், வாத்ரா, யாத்ரா போனாலும் அரசு விடாது.

Friday, January 10, 2014

சன் டிவி வீரபாண்டியனுக்கு சப்போட் பண்ணும் இந்த நரகல் தின்னும் நாய்களை விரட்டிஅடிக்க வேண்டும் நாட்டை விட்டு..............
சன் டிவியில் வீரபாண்டியன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பொங்கியுள்ள கருத்தியல் காவலர்கள்.

மனுஷியபுதிரன் - எழுத்தாளர் /கவிஞர்
வீரமணி -திராவிடர் கழகம்
பீட்டர் அல்போன்ஸ் - முன்னாள் எம்.பி
திருமாவளவன் - விடுதலைச் சிறுத்தைகள்
காதர் மொய்தீன் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
சீமான் - நாம் தமிழர்
ஜவஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி
விடுதலை ராசேந்திரன் - திராவிடர் விடுதலைக் கழகம்
சுப.வீரபாண்டியன் - திராவிட இலக்கியத் தமிழர் பேரவை
பீட்டர் பெர்னாண்டோ - மதுரை ஆர்ச் பிஷப்
அப்துல் ரஹ்மான் - கவிஞர்
ஹென்றி டிப்பாங் - மக்கள் கண்காணிப்பகம்
மார்க்ஸ் - மனித உரிமை செயல்பாட்டாளர்
ஜே.எஸ் ரிபாய் - தமுமுக
கு.ராமகிருஷ்ணன் - தந்தை பெரியார் திக
எஸ்.ரா சற்குணம் - பிஷப்
தேவசகாயம் - சி.எஸ்.ஐ பிஷப்
ஞானி - எழுத்தாளர்
அப்துல் ரகுமான் - வேலூர் எம்.பி
குமரேசன் - தீக்கதிர்

சன் டிவி செய்தி ஆசிரியர், மன்மத ராசா, அங்கே செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய அகிலா என்ற பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியபோது எங்கே போனார்கள் இந்த கருத்தியல் காவலர்கள்.. ?

நன்றி: Achimuthu Shankar
(2 photos)