Friday, January 24, 2014

லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு, மூன்றில் இரண்டு மடங்கு இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகத் தெரிவதாக திருவாய் மலர்ந்துள்ளார், ராகுல்.கதர் சட்டைப் பேர்வழிகள், நல்லாவே காமெடி பண்ணுறாங்க. மகாபாரதப் போரில், பாண்டவர்களின் வெற்றிக்காக, அரவானைப் பலி கொடுக்கச் சொன்னார் கிருஷ்ண பகவான்.மகத்தான தோல்வியைத் தவிர்க்க, 'ராகுல் தான் எங்கள் அடுத்த சூப்பர் பிரதமர்' என்கிறது, காங்கிரஸ் கட்சி. 65 ஆண்டுகளுக்கு மேல் இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, இன்று, சீந்துவார் யாரும் இல்லாததால், அரசியல் அனாதையாகிப் போனது தான் மிச்சம்.'கழுதையை நிறுத்தினாலும் கட்டாயம் ஜெயிப்போம்' என்று தெனாவட்டாகப் பேசியவர்கள், இன்று, டிபாசிட் பணம் திரும்பக் கிடைக்குமா என, ஏங்கும் நிலையில் தானே இருக்கின்றனர்.'மணிமேகலையே... மங்கம்மாவே' என்று புகழ்ந்து பாடியவர்கள் எல்லாம், 'அட போம்மா! வேலையைப் பார்த்துக்கிட்டு' என, ஏகடியம் பேச ஆரம்பித்து விட்டனர். ராகுலுக்கு, தவிர்க்க முடியாத கடமை ஒன்று பாக்கி இருக்கிறது. அது, காந்திஜியின் சமாதிக்கு அருகே, காங்கிரஸ் கட்சிக்கும் சமாதி கட்ட, ராகுல் தயாராக வேண்டும்.அப்ப தான் காந்திஜி ஆத்மா சந்தி அடைம் 

No comments:

Post a Comment