Wednesday, January 22, 2014

'சோனியா மருமகன் சென்ற காரை முந்தி சென்றவருக்கு அபராதம்' என்ற செய்தி கண்டேன்.இந்தியா ஜனநாயக நாடா, சர்வாதிகார நாடா என்ற ஐயம் வருகிறது. 'ஊழலைக் களைவோம்' என்று மூச்சு விடாமல் கத்தும் ராகுலும், சோனியாவும், தங்கள் குடும்ப உறுப்பினரான, ராபர்ட் வாத்ரா மீது உள்ள, கோடிக்கணக்கான தொகை கொண்ட நில ஊழல் பற்றி, வாய் திறப்பதில்லை.இந்தியாவில், யாருக்கும் இல்லாத சர்வ சுதந்திரம், வாத்ராவுக்கு அளிக்கப்படுகிறது.எந்த விமான நிலையத்திலும், அவருக்கு விசாரணை இல்லையாம். இவர், ஜனாதிபதி பதவியை விட, எந்த வகையில் உயர்ந்து விட்டார்?அபராதம் விதித்தது, சட்டத்தை மதிக்காத ஆணவம். காலம் மாறும்; பரம்பரைக் குடும்பம் பதவி இழந்தால், வாத்ரா, யாத்ரா போனாலும் அரசு விடாது.

No comments:

Post a Comment