Tuesday, January 28, 2014

.காங்., மறைமுக பிரதமர் வேட்பாளர் தான் ராகுல்:அருண்
ஜேட்லி......காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையிலும்,
பா.ஜ.,கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பா.ஜனதா தலைவரும் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவருமான அருண் ஜேட்லி கூறுகையில்,ராகுலை சுற்றியே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கை இருக்கிறது. எப்படியோ, இப்போது அவர் பிரதமர் வேட்பாளராக இல்லை. இருப்பினும், ராகுலை சுற்றிதான் நடவடிக்கைகள் இருக்கின்றனவே ஏன் என்று தெரியவில்லை அவர்தான் காங்கிரஸ் கட்சியின் மறைமுக பிரதமர் வேட்பாளர் என்பது தற்போது தெரியவருகிறது.
காங்கிரஸ்காரர்கள் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அவர்கள் தயாராகவும் இல்லை விருப்பமும் இல்லை.ஏனென்றால் பயம் தான் காரணம்.லோக்சபா தேர்தலில் அவர்களுக்கு எதிரான முடிவுகள் வந்தால் ராகுல் பொறுப்பேற்க வேண்டியது இருக்கும். அதனால் அவர்கள் பயப்படுகின்றனர்.சந்தையில் பொருட்களை விற்க விளம்பரம் அவசியம் ஆகிறது.அதற்கு பணம் செலவழிக்க வேண்டும். அதைதான் காங்கிரஸ் கடந்த நான்கு மாதங்களாக செய்துவருகிறது.தேர்தலை அப்படி செய்து விடமுடியாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை என்றார் அருண் ஜேட்ல

No comments:

Post a Comment