அப்போது பழுதடைந்த கிணறு ஒன்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் அருகில் இருந்த செடி கொடிகளை அகற்றியபோது விசித்திரமான சாமி சிலைகள், கற்சிலைகள் காணப்பட்டன. மண்ணில் புதைந்த நிலையில் 11க்கும் மேற்பட்ட சிலைகள் வெளியே எடுக்கப்பட்டன. இந்த தகவல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதால் கிராம மக்கள் பெருமளவில் திரண்டனர்.
தொடர்ந்து கற்பூரம் காட்டி சிலைகளுக்கு பூஜை செய்து வணங்கினர். கிராம மக்கள் கூறுகையில், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு மக்கள் யாரும் செல்லாமல் இருந்தோம். நேற்று சிலை இருப்பதை கண்டு பரவசம் அடைந்தோம். விஞ்ஞானம் வளராத காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு மேலும் பல சிலைகள் புதைந்திருக்கும் என்று கருதுகிறோம். 19ம் நூற்றாண்டின் கன்னிமார் சிலைகளாக இருக்கலாம் என்றனர்.
No comments:
Post a Comment