Tuesday, January 28, 2014

பவம் பசு பாவிகலினல் வந்த கொடுரம் 
மாட்டிறைச்சியை உண்டால் இளவயதில் மரணம் * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * இந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்பட்டாலும் சில சமூகத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில் சளைத்தவர்கள் இல்லை. பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. மாட்டிறைச்சி உலகளவில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேல் நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோக்ளோபின் (Myoglobin) என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மையோக்ளோபின் எந்த அளவு கறியில் இருக்கிறதோ அந்த அளவே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவையும் நிர்ணயம் செய்யும். தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் இருபது சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்களில் அதிகமானவர்கள் இளமையிலேயே இதயபாதிப்பு பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை இதயநோய், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகின்றன

No comments:

Post a Comment