Thursday, August 8, 2013

தமிழகத்தில், 1967ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், எப்படி காங்கிரஸ் முற்றிலுமாக அகற்றப்பட்டதோ, அதே போன்ற ஒரு நிலை, காங்கிரசுக்கு எதிர்ப்பலை, இப்போது, நாடு முழுவதும் தோன்றியிருக்கிறது. மோடி பிரதமராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, 65 சதவீதத்திற்கு மேலான இந்திய மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த நிலையை, பா.ஜ., உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். நாடே எதிர்பார்க்கும், ஒரு பிரதம வேட்பாளரை, பா.ஜ.,வினர் சிலரே எதிர்ப்பது
வேதனையானது. அத்வானி போட்டியிடப் போகிறாரா என்று தெரியவில்லை. பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டது. ஆனால், பேசிய, ஒரு சில கூட்டங்களில் அத்வானி, "மோடியே பிரதமர்' என்றோ, "அவரை ஆதரித்து பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்யுங்கள்' என்றோ, ஒரு கூட்டத்திலும் பேசவில்லை. காங்கிரசில் அப்படியில்லை. சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ, யாராக இருந்தாலும், பிரதமராக காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும். அடிமைத் தளையிலிருந்து நாட்டை மீட்ட காங்கிரஸ், இன்று, நேரு குடும்பத்துக்கு
அடிமையாக உள்ளது. சோனியா, "ராபர்ட் வதேரா தான் பிரதமர்' என்று கூறினாலும், அதை மற்ற காங்கிரஸ் தலைவர்கள், எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஏற்றுக் கொள்வர்.
ஆனால், பா.ஜ.,வில் இப்படியில்லை; அதன் உட்கட்சி ஜனநாயகம் நன்றாக உள்ளது ,பாஜ   தான் ,நாட்டை காப்பாற்றவேண்டும்
Click Here

No comments:

Post a Comment