காங். தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா மீது ஐ.ஏ.எஸ்., அதிகாரி
அசோக் கெம்கா புகார் தெரிவித்த சில நாட்களிலேயே அவர் மீதான செக் மோசடி
விவகாரமும் அம்பலத்திற்கு வந்துள்ளது. ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட்
ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கிய நிலத்திற்கு
பணம் ஏதும் வழங்கவில்லை. டி.எல்.எஃப்., நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ.7.5
கோடி தரப்படாததால் அந்நிறுவனம் நெருக்கடி அளித்துள்ளது. இதனையடுத்து
டில்லியைச் சேர்ந்த கோவாப்பரேட்டிவ் வங்கி மூலம் செக் ஒன்று
கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் விசாரித்த போது அந்த வங்கியில், ஸ்கைலைட்
ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்திற்கு எந்த ஒரு வங்கி கணக்கும் இல்லை என
தெரியவந்தது. இந்த விவகாரம் தற்போது வெளி வந்துள்ளது.
No comments:
Post a Comment