Wednesday, August 7, 2013















எல்லையை பாதுகாப்பதில் இந்திய அரசு தோல்வி
இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாக்., ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நமது இந்திய வீரர்கள் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது பாகிஸ்தான் ராணுவத்தின் கோழைத்தனமாக செயல். இதே போன்ற மற்றொரு சீன எல்லைப்பகுதியில், அந்நாட்டு ராணுவமும் அடிக்கடி ஊடுருவி துணிச்சலுடன் உலா வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது மத்தியி்ல் ஆளும் காங்.,தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தூங்கி வழிகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எல்லையை பாதுகாப்பதில் இந்தியா தோல்வியடைந்து விட்டது.ஊடுருவல் விவகாரத்திலும் அலட்சியம் காட்டி வருகிறது என்பது தெளிவாகி விட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment