Saturday, August 10, 2013

முத்துப்பேட்டை - அல்லாவின் ரம்ஜான் பரிசு - பாஜகவினர் நடத்திய இலவச ரத்ததான முகாமில் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய முஸ்லீம் கும்பல், போலீஸ் தடியடி!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவான் ஓடையில் பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம் வசித்து வருகிறார். நேற்று அவருடைய பிறந்தநாளை முத்துப்பேட்டை குமரன் கடைத்தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாட பா.ஜனதா கட்சியினர் முடிவு செய்தனர்.
இதையொட்டி நேற்று ஜாம்புவான் ஓடையில் இருந்து மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தை அழைத்து கொண்டு பா.ஜனதா கட்சியினர் ஊர்வலமாக விழா நடக்கும் மண்டபத்திற்குச் சென்றனர்.
கல்வீச்சு – போலீஸ் தடியடி
ஊர்வலத்தின்போது முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் பட்டாசு வெடித்தனர். பா.ஜனதா கட்சியினர் விழா மண்டபத்திற்குச் சென்ற சிறிது நேரத்தில் 50 பேர் கொண்ட கும்பல் பா.ஜனதா கட்சியினர் விழா நடத்தி கொண்டிருந்த மண்டபத்தை நோக்கிச் சென்றது. அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து, கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி கும்பலை மண்டபத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் 50–க்கும் மேற்பட்ட போலீசார் பழைய பஸ் நிலையம், குமரன் கடைத்தெரு, ஆசாத்நகர் உள்ளிட்ட இடங்களில் குவிக்கப்பட்டு முத்துப்பேட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
இந்த நிலையில் கடைகள் மீது கும்பல் ஒன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்து அப்பகுதி கடைகாரர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சூப்பிரண்டு, வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடைகளை திறக்குமாறு கூறினார். அப்போது வர்த்தக சங்கத்தினர் முத்துப்பேட்டை பகுதிகளில் கடைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸ் பாதுகாப்புடன் முத்துப்பேட்டை பகுதி கடைகள் உடனடியாக திறக்கப்பட்டன.
போலீஸ் விசாரணை
முன்னதாக பழைய பஸ் நிலையம் அருகே கும்பல் நடத்திய கல்வீச்சு சம்பவத்தின்போது குணசேகரன், பாஸ்கரன், சாகுல்அமீது, சரவணன் ஆகிய 4 பேரின் கடைகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து சேதப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் 4 பேரும் முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பல் ஒன்று திடீரென கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment