மதுரை
மீனாட்சி அம்மன் கோவிலில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் துணைவி
ராஜாத்தி, நேற்று, தரிசனம் செய்தார். ராஜாத்தி, நேற்று காலை, 9:00 மணிக்கு,
விமானம் மூலம் மதுரை வந்தார். விஜயா
தாயன்பன் உட்பட, நான்கு பேர், அவருடன் வந்தனர். அவர்களது வருகை ரகசியமாக
வைக்கப்பட்டிருந்ததால், கட்சியின் முக்கிய நிர்வாகி சிலர் மட்டும், விமான
நிலையம் சென்று வரவேற்றனர். காலை, 10:00 மணிக்கு, பிள்ளையார்பட்டிக்கு
சென்று, விநாயகர் கோயிலில், மதியம், 12:00 மணி வரை தரிசனம் செய்தார். மாலை,
4:00 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற ராஜாத்தி, தன் வருகை
போலீசுக்கு கூட தெரியக் கூடாது என்று, தரிசனம் செய்ய, வி.ஐ.பி.,க்கள்
செல்லும் வழியை தவிர்த்து, 100 ரூபாய் சிறப்பு தரிசன கட்டண சீட்டு வாங்கி,
தரிசனம் செய்தார். அங்கு, கனிமொழி உட்பட குடும்பத்தினர் பெயருக்கு, சிறப்பு
அர்ச்சனை செய்தார். அவருடன் வந்தவர்களும், சிறப்பு தரிசன கட்டண சீட்டு
பெற்றே, தரிசனம் செய்தனர். மாலை, 4:15 மணி வரை கோவிலில் இருந்த அவர், பின்
விமான நிலையம் சென்று, அங்கிருந்து சென்னை கிளம்பி சென்றார்.
>>தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா, கண் திறந்து பாரம்மா. <<
நன்றி: இதுதான் ஜனநாயகம
>>தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா, கண் திறந்து பாரம்மா. <<
நன்றி: இதுதான் ஜனநாயகம
No comments:
Post a Comment