Friday, January 25, 2013

uruppatuma bahrathanaduநாட்டில் என்ன நடக்குது ? எத்தனையோ படங்களில்தன்னை நாத்திகனாக காட்டிக்கொண்டு இந்துக்கள் மனது புண்படும்படி வசனங்களையும் காட்சிகளையும் வைத்தவர் கமல் அதை இந்துக்கள் சகித்து கொண்டனர்.பகுத்தறிவாளர்கள் ரசித்தனர்??. மக்களும் கமலுக்கு ஆதரவளித்தனர்.விசுவரூபம் படத்தில் தீவிர வாதிகளுக்கு [மொகமது உமர் ]தமிழகத்தில்கோவை மதுரை அடைக்கலம் கொடுத்தது போன்ற காட்சிகள் வருகிறதாம்[கமலிடம் அதற்கு ஆதாரம் வேறு இருக்கிறதாம்] அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டும்என்பது முஸ்லீம்கள் போராட்டம்.அது ஒரு புறம் இருக்க இது பற்றி சீமானிடம் கருத்து கேட்டால் நிறைய படங்களில் கிருத்துவ பெண்கள் காபரே டான்சராக காட்டப்படுகிறார்கள் இதை ஒரு படைப்பாளியாக நீங்கள் கேட்கமாட்டீர்களா? என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.இப்படி படம் எடுப்பது தவறு என்று சந்தடி சாக்கில் நான் சீமான் இல்லை சைமன் தான் என்று நிரூபிக்கிறார்.சினிமா என்பது பொழுது போக்கு இதில் மதத்தை நுழைத்தால் ஒவ்வொரு படத்தையும் இந்துக்களும் போட்டு காட்ட சொன்னால் தமிழகத்தில் ஒரு படத்தையும் திரை இட முடியாது.இதை உணர்ந்து சினிமாவை பொழது போக்காக மட்டும் பார்க்க மக்கள் பக்குவப் படனும் இல்லை.இனி எந்த ஒரு படத்தையும் திரை இடுவதற்கு முன் அனைத்து மத தலைவர்களுக்கும் போட்டு காட்டிய பின்பே திரையிடும் நிலை வரலாம்

No comments:

Post a Comment