சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள்
கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்’ ரவி
நடித்த ‘ஆதிபகவன்’ படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில்
கூறியிருப்பதாவது:-
இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்’ என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். தற்போது ‘ஆதிபகவன்’ என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்’ என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.
‘ஆதிபகவன்’ படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்’ என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார். தற்போது ‘ஆதிபகவன்’ என்ற படத்தை எடுக்கிறார். ‘ஆதிபகவன்’ என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.
‘ஆதிபகவன்’ படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
No comments:
Post a Comment