Monday, January 21, 2013

ஷிண்டேவின் கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ்., அளித்த பதிலில், மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, பயங்கரவாதிகளின் செல்லப்பிள்ளை போல் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரின் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., குறித்த இந்த கருத்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நடத்த பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, மும்பை தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ள, ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீது, ஷிண்டேவின் கருத்து தொடர்பாக நிருபர் கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். ஷிண்டேவின் கருத்துக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஹபீஸ் சயீத் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சயீத் கூறுகையில், ஷிண்டே உண்மையை பேசியுள்ளார். பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தானை குற்றம்சாட்டும் இந்தியாவின் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அமைச்சரின் கருத்து பாகிஸ்தானுக்கு உதவியாக இருக்கும் என கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது டுவிட்டர் இணையதளத்தில், இது போன்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம், நமது எதிரிகளுக்கு உள்துறை அமைச்சர் உதவிசெய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment