Saturday, January 19, 2013


"பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்க மேற்கத்திய கலாசாரமே காரணம்'

First Published : 17 January 2013 02:31 AM IST
நாட்டில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களில் மேற்கத்திய கலாசாரமும் முக்கிய பங்கு வகிப்பதாக புரி சங்கராச்சாரியார் சுவாமி ஸ்ரீ நிஸ்சலானந்த சரஸ்வதி கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியது: திரைப்படம், கிளப் கலாசாரம் மற்றும் போதை மருந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பழக்கவழக்கங்கள், நம் நாட்டின் பண்டைய வாழ்வியல் நடைமுறைகளை அழித்து விட்டன. சுதந்திரத்துக்கு முன்பு நமது கலாசாரமும் வாழ்வியல் நடைமுறைகளும் கட்டி காக்கப்பட்டு வந்தன. ஆனால் சுதந்திரத்துக்கு பின்பு அவற்றை படிப்படியாக இழந்து வருகிறோம். இந்த நிலை மாற வேண்டும். தில்லி மாணவி பலாத்கார சம்பவம் போல மீண்டும் நிகழாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

No comments:

Post a Comment