Friday, March 22, 2013

இதுதாங்க… ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். ஐ பற்றிய தெளிவான விளக்கம் இந்த பதிவில் — பாகம் 1.

பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமை படுத்தி, இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப்பட்ட இயக்கமே RSS !!

1925 ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.

1962ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் RSS ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.

1965 பாகிஸ்தான் போரின் போது தலை நகர் தில்லியில் சாலை போக்குவரத்து கட்டுப்பாடு, காவல் துறைபணி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால்பஹதூர் சாஸ்திரி RSS வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம்.

1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும் அமைப்புகளும், தலைவர்களும் , பத்திரிகைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சதியாக்ரஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற் பட்டோர் பல மாதம் சிற சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.

1995 தேச விரோதிகளால் தூண்டு விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லினக்க கூடத்தையும், பாதயாதிரையையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது !!

2004 ஆழிப் பெறலாம் சுனாமி தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசக்கரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது !!

தேசம் முழுவதும் கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம் சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு.

விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசக்கரம் நீட்டி உடனே சேவை செய்தது.

தேசம் முழுவதும் தனது 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெரும் இயக்கம் மற்றும் 50 கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகிறது.

உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி செலவிடும் கோடி கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் RSS ற்கு உண்டு .

No comments:

Post a Comment