Friday, March 8, 2013

மதமாற்றத்துக்கு வலியுறுத்தி துண்டு பிரசுரம் வினியோகம்: 2 பேர் கைது 
 
கோவை துடியலூர் அருகில் உள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி வி.கே.வி. நகருக்கு தனியார் பஸ்சில் வந்தவர்கள் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து மத பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
 
தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உருவை பாலன், பொருளாளர் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், ஒன்றிய பொதுச் செயலாளர் ஜெய்கார்த்திக், ஊராட்சி துணைத்தலைவர் சுதாகர் மற்றும் நிர்வாகிகள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சுந்தரம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் ராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சுமன், சந்திரகுப்தா, சார்லஸ் ஆகியோர் மதமாற்றம் செய்தது தெரிய வந்தது.
 
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் மீது 505 (மிமி) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சுமன் (24), சந்திரகுப்தா (26) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டத

No comments:

Post a Comment