Wednesday, October 9, 2013

இந்தியன் முஜாஹிதீன் உருவான நிகழ்வுகள் - இந்திய பயங்கரவாத இயக்கம் - ஒரு ஐந்து நிமிடம் செலவு செய்து இதை முழுவதும் படியுங்கள் நண்பரே !!

இந்தியாவில் உருவாகிய பயங்கரவாத அமைப்பு. ஷகீல் அகமது கூறியது போல் 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக உருவான அமைப்பு கிடையாது என்பதை முதலில் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது வெடி குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்தவர்கள். இஸ்லாத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் மீது ஜிகாத் தொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே துவக்கப்பட்டது சிமி அமைப்பாகும். 1977-ல் துவக்கப்பட்ட இந்த அமைப்பினர், 1941-ம் ஆண்டு லாகூரில் இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் (Jamaat-e-Islami Hind )என்ற அமைப்புடன், 1981-ம் ஆண்டு வரை நல்ல நெருக்கத்துடன் செயல்பட்டு வந்தார்கள். ஆனால் இந்தியாவிற்கு பாலஸ்தீன அதிபர் யாசா அராபத் விஜயம் செய்த போது, இந்த விஜயத்திற்கு சிமி இயக்கத்தினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர், சிமி இயக்த்தின் கருத்துக்கு மாறாக ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் இயக்கத்தினர் கருத்து தெரிவித்தார்கள், இந்த கருத்து வேறுபாடு காரணமாக ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் அமைப்பினர், சிமிக்கு மாற்றாக Students Islamic Organization என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆகவே அப்போதே தீவிரவாத மாணவர் அமைப்பு ஒன்று ஏற்படுத்த வேண்டும் என்ற சிந்தனை ஜமாத்-இ-இஸ்லாமிய ஹிந்த் இயக்கத்தினருக்க ஏற்பட்டது.

2001-ல் சிமி இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்ட பின்னர், சிமி இயக்கத்தினர் மறைமுகமாக தங்களது சந்திப்புகளை தொடர்ந்தார்கள், இந்த சந்திப்புகளில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, அதாவது ஒரு பிரிவினர் தீவிரவாத நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் முகமது இஸ்லாம் என்பவர் இவ்வாறு தீவிரவாத எண்ணங்களை கொண்டதால் ஒரு புதிய இயக்கம் உதயமானது, அது இந்தியன் முஜாஹிதீன் என்றும் கூறப்பட்டது. இந்தியாவிலேயே உள்ள தீவிரவாதிகளை கொண்ட ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஐ.எஸ்.ஐயின் சிந்தனையில் உருவானது என்றும் பல ஆய்வாளாகள் கூறுகிறர்கள். ரோகித் சிங் என்பவர் தனது ஆய்வு கட்டுரையில் The IM hsd mutated into a radical extremist organization, with pan-Indian spread. என்று குறிப்பிட்டுள்ளார் ( ஆதாரம் Understanding the Indian Mujahideen by Rohit Singh page no.2 ) இந்தியாவில் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், பயங்கரவாதிகளுக்கு உதவி செய்து வரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயால் ஏற்படுத்தப்பட்டது என்பதை கூட மறந்து விட்டு ஷகீல் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.

im03சிமி இயக்கத்தின் மறு அவதாரம் என்பதால், ஏற்கனவே சிமி இயக்கத்திலிருந்த அப்துல் சுபான் குரேஷி (Abdul Subhan Qureshi ) மற்றும் Riyaz Ismail Shahbandri என்ற இருவரும் இந்தியன் முஜர்ஹிதீன் என்ற அமைப்பை துவக்கியவர்கள். தெற்கு குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மற்றும் மகாராஷ்ட்ராவில் இயங்கி வந்த தியோபந்தி மதராஸாக்களில் ( Deobandi madrasas )படித்துக்கொண்டிருந்த காஷ்மீர் மாணவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இவ்வாறு இணைந்து கொண்டவர்களில் 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வெடி குண்டுகள் கையாளுவது, பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது சம்பந்தமான பயிற்சிகளை பாகிஸ்தானில் பெறுவதற்காக சென்றவர்கள். 2006-ல் குஜராத்தில் உள்ள மதரஸாவில் 30 மாணவர்கள் மாயமானதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தது, ஆனால் தீவிர விசாரணையில் மாயமான 30 மாணவர்களும், பயங்கரவாத பயிற்சி பெறுவதற்காகவே பாகிஸ்தான் சென்றவர்கள் என்பது பின்னர் தெரியவந்த்து. 2009-ம் ஆண்டு வரை பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாக மாறியது. 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ந் தேதி சூரத்தில் உள்ள மதரஸாவில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கோத்ராவில் நடந்த சம்பவத்திற்கு பழி வாங்குவதற்காகவே, லஷ்கர்-இ-தொய்பாவில் மதரஸா மாணவர்களை சேர்க்கும் பொறுப்பை ஏற்று, அவ்வாறு சேருபவர்களை இந்தியாவிலிருந்து பங்களா தேஷ் வழியாக பாகிஸ்தானுக்கு பயிற்சிக்காக அனுப்படும் பணியினை செய்தவர்கள் இந்த கைது சம்பவத்திற்கு பின் இந்தியாவில் உள்ள தியோபந்த் இஸ்லாமியர்களின் முழு ஆதரவும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு இருப்பது தெரியவந்தது. இறுதியாக சிமி இயக்கத்தை உருவாக்க எவ்வாறு ஜமாத்-இ-இஸ்லாமி முக்கியமான காரணியாக இருந்த்தோ அதே போல் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ஏற்பட ஜமாத்-இ-இஸ்லாமி காரணமாக அமைந்த்து.

நோக்கம்

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களுக்கு இருக்கின்ற அதே நோக்கம் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கும் இருந்தது. ஆனால் வார்த்தைகள் மட்டுமே மாறியிருந்தன. மேற்கத்திய பொருள் சார்ந்த பண்பாடு கொண்ட இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது மட்டுமே முதன்மையான நோக்கமாகும். இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால், இந்தியாவில் தியோபந்தி சித்தாந்த்தை செயல்படுத்துவது என்றும், இஸ்லாமியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு, தீவிரவாத தன்மையை மேற்கொள்வதும் முக்கியமானதாகும். ஆனால் 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசத்தில் லக்னே வாரனாசி, பைசாபாத் போன்ற நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வெடி குண்டு தாக்குதல்களை நடத்திய பின்னர், இந்தியன் முஜாஹிதீன் வெளியிட்ட தங்களது அறிக்கையில் குறிப்பிட்டது வேறுவிதமானது. அவர்களின் வார்த்தைகளில் குறிப்பிட வேண்டும் ” The pathetic conditions of Muslims in India that idol worshippers can kill our brothers, sisters and outrage the dignity of our sisters at any time and place ” என்றும் பின்னர் நாகரீகத்தின் மீது தொடுக்கும் யுத்தம் என்றும் தெரிவித்தார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று அவாகள் தெரிவித்த கருத்துதான் ” Only Islam has the power to establish a civilize society and this could be only possible in Islamic rule which could be achieved by only one path, Jihad-Fee-Sabililah (Which means jihad in Islam) ”. ஆகவே எந்த வார்த்தைகளை பயன்படுத்தினாலும் இறுதியில் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவது தான் இறுதி தீர்வு என்ற முறையில் தங்களது செயல்பாடுகளை அமைத்திருந்தார்கள்.

தலைமை

im062001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிமி இயக்கத்திற்கு தடை விதித்த பின்னர், 2008-ம் ஆண்டு மார்சு மாதம் 27ந் தேதி சிமியின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி கைது செய்யப்பட்டார், அதே ஆண்டு ஜீலை மாதம் 28ந் தேதி டெல்லியில் ஜாகீர் நகரில் உள்ள அலுவலகத்தில் இருந்த சிமியின் தலைவர் டாக்டர் ஷாகித் பதார் ஜலால் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக இரண்டாம் கட்ட தலைவர்கள் மட்டுமே இருந்த்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு கூட்டு நிறுவனராக இருந்த Riyaz Ismail Shahbandri என்பவரும், அப்துஸ் சுபான் குரேஷி என்பவரும் முழு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்கள். ஆனாலும் டெல்லியில் உள்ள காவல் துறையினர் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் மேற்கண்ட இருவரும் இருந்தார்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் நாட்டில் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்ட நடத்தியவர்கள் என குறிப்பிட்டால், அது இருவரை மட்டுமே குறிக்கும், ஒருவர் ரியாஸ் பட்கல் ( Riyaz Bhatkal ) மற்றெருவர் அப்துல் சுபான் குரேஷி. இதில் ரியாஸ் பட்கல் என்பவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் வெடி குண்டு தயாரிக்கும் பணியினை கவனித்து கொண்டவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் சின்னத்தை உருவாக்கி கொடுத்தவன் பீர்பாய் (Peerbhoy ) என்பவன், இவன் சாப்ட்வேர் பொறியாளர், பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் முன் அனைத்து மீடியக்களுக்கும் இ-மெயில் மூலம் தகவல்களை அனுப்பியவன்.

im05தென்னக பகுதிகளில் இந்தியன் முஜாஹிதீனுக்கு ஆட்கள் சேர்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் கேரளத்தை சார்ந்த அப்துல் சத்தார், நசீர் ( Abdul Sattar alis Saibuddin, Nasir )என்பவர்கள், இவர்கள் இருவரும் கேரளத்தில் உள்ள அப்துல் மதானியுடன் ரகசிய உறவு கொண்டவர்கள். 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பயன் படுத்தப்பட்ட பைப் வெடி குண்டை தயாரித்தவன் அப்துல் சத்தார். இவர்கள் குஜராத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு, ரியாஸ் பட்கலுக்காக அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி வெடி குண்டு தயாரித்து கொடுத்தவர்கள். பாகிஸ்தானில் பயிற்சி பெறுவதற்காக 40 க்கு மேற்பட்டவர்களை அனுப்பி வைத்தவன் பட்கல் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். இதுவும் எப்போது தெரியவந்த்து என்றால், வடக்கு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்ட பயங்கரவாதி கேரளத்தில் உள்ள அப்துல் சத்தாரின் மருமகன் என தெரியவந்த்து.

டெல்லியில் ஜாம்யா என்கவுன்டரில் கொல்லப்பட்ட அடிப் அமீன் ( ) என்பவனால் நியமிக்கப்பட்ட முகமது சாதிக் ஷேக் என்பவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் முக்கியமானவன், 2006-ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளியாக பாகிஸ்தானியர்கள் உண்டு என்றாலும், பெரும்பாலனவர்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள ஆஸம்காட் பகுதியில் செயல்பட்ட இந்தியன் முஜாஹிதீன் செல் என்றார்கள், இந்த செல்லில் இருந்த முக்கியமானவன் முகமது சாதிக் ஷேக் . இந்த அமைப்பில் பட்கல் சகோதர்கள் மற்றும் அப்துல் சுபான் குரேஷியை போலவே இன்னும் பலர் அமைப்பாளராக இருந்தார்கள். கூலி வேலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தில் பிறந்தவன் குரேஷி , தொழிற்சாலையில் எலக்ட்ராணிக் பொறியளாராக 1995-ல் தனது படிப்பை முடித்துவிட்டு, மும்பையில் பல்வேறு கன்னி நிறுவனத்தில் பணியில் புரிந்தவன். 2001-ல் சிமி அமைப்பில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவன். 2008-ல் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு திட்டம் வகுத்து செயல்படுத்தியவன்.

ஆயுதங்கள் தொடர்பு மற்றும் பயிற்சி முகாம்கள்

2007-ல் இந்தியாவில் உள்ள காடுகளில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி முகாம்களில், பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்கள், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு ஐ.ஈ.டி வெடி(IED ) குண்டு தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும், மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்துவது சம்பந்தமான வழி முறைகளையும், அப்பொழுது பயன்படுத்த வேண்டிய வேதிய பொருள்களான அமோனியம் நைட்ரேட் (Ammonium nitrate ) , ஹைட்ரஜன் பாராக்சைட் ( Hydrogen peroxide)போன்றவற்றை பயன்படுத்துவது சம்பந்தமான பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்ளுரில் கிடைக்கும் மூலப் பொருட்களை கொண்டு வெடி குண்டுகள் தயாரிப்பதிலும், உதரி பாகங்களை இணைப்பதிலும் வல்லுநர்களாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் மாறினார்கள். இதிலும் குறிப்பாக வெடி குண்டுகளில் பால் பேரிங் மற்றும் இரும்பு துகள்கள் சேர்ப்பதிலும் பயிற்சி பெறுவதற்காக, ஐ.எஸ்.ஐ உதவியுடன் பாகிஸ்தானில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி அளிப்பதற்காகவே லாகூர் பல்கலைகழகத்தில் கெமிஸ்ட்ரி பேராசிரியாக பணியாற்றிய அசீம் சீமா ( Azam Cheema ) என்பவன் நியமிக்கப்பட்டார். இவர் பல்வேறு பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்த பயிற்சி அளித்துள்ளார், குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஜீ முகமது, ஹஜ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் அடங்கும். ஜமாத்-உத்-தாவாவின் கட்டளைப்படி தனது பேராசிரியர் பதவியை ராஜினமா செய்து விட்டு, பைசலாபாத் (Faisalabad ) நகரில் ஒரு புதிய ஆய்வு கூடத்தை நிர்மாணித்து, வெடி குண்டுகள் தயாரிக்கும் தொழில் நுட்பம் மற்றும் வெடி குண்டுகளின் மூலப் பொருட்களை கொண்டு இணைக்கும் தொழில் நுடபத்தையும் பயங்கரவாதிகளுக்கு கற்றுக் கொடுக்க தொடங்கினார். இவ்வாறு பயிற்சி பெற்ற இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

im077.3.2008ந் தேதி கைது செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் சப்தார் நகோரி விசாரனையின் போது தெரிவித்த தகவல் மிகவும் அதிர்ச்சிகரமானதாகும். 2005-ம் ஆண்டு ஜீலை மாதம் 7ந்தேதி லண்டன் மாநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது வெடி குண்டுக்கு பயன்படுத்தபட்ட வேதியியல் பொருள் ப்ராக்சைட் (peroxide ) என்பதாகும். இம் மாதிரியான குண்டுகளை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தங்களது வீட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்தான். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ரியாசூதின் நசார் என்பவன், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் 15 முதல் 20 பேர்கள் வீட்டிலேயே வெடி குண்டு தயாரிக்கிறார்கள் என்ற தகவலை உறுதி செய்தான். இவ்வாறு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் பயிற்சி பெற்றாலும், இன்னும் குறிப்பாக சிறப்பு பயிற்சி கொடுப்பதற்காகவே கேரளத்தில் சில பகுதிகள் உள்ளன, அவை Vagamon, Pavagarh, Vododara என்றும் உளவு துறையினர் தெரிவித்தார்கள்.

தலைமைக்கு ஏற்ப உறுப்பினர்களை சேர்பதில், இந்தியன் முஜாஹிதீன் சிரமப்படவில்லை, ஏன் என்றால் உஜ்ஜயின், ஆஸம்காட், ஷஹகரன்புர் மற்றும் பல இடங்களில் செயல்படும் தியோபந்தி மதரஸாக்களில் பயிலும் மாணவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த மதரஸாக்களுக்கு நிதி உதவி செய்வது சவுதி அரேபியா என்றும், இவர்களின் நிதி உதவியால் உலகம் முழுவதும், 1,500 மசூதிகளும், 10,000க்கு மேற்பட்ட மதரஸாக்களும் கடந்த 50 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. நிதி உதவி அளிப்பது மட்டுமில்லாமல், இமாம்களுக்கு பயிற்சி கொடுப்பதும், செய்தி துறையில் ஆதிக்கம் செலுத்துவது, வாகாபி இலக்கியங்கள் உருவாக்குவது, கல்லூரிகள் மற்றும் பல்கலைகழங்களில் வாகாபி இஸ்லாமிய பயிற்சியாளர்கள நியமிக்க வைப்பது போன்ற செயல்பாடுகளையும் செய்து வருகிறது. இது மட்டுமில்லாமல் பெட்ரேலிய பொருட்களை கொண்டும் தங்களது செயல்பாடுகளை ஊக்குவிப்பதும் சவுதியின் பணியாகும். 1970-ல் பெட்ரோல் விலை உயர்வு ஏற்பட்ட போது, அதை பயன்படுத்தி ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு அதிக அளவில் நிதி உதவி செய்த்து சவுதி அரேபியா . இவ்வாறு அதிக அளவில் ஆதிக்க சக்தியாக திகழும் தியோபந்தி மதரஸாக்கள் இந்தியாவிலும் உருவானது.

im08ஷா வாலியுல்லா (Shah Waliullah )என்பவரால் 1762-ல் இந்தியாவில் தியோபான்ட் பள்ளிகள்(Deoband Schools ) மற்றும் ஹகி-இ-ஹதீத்( Ahl-e-Hadith) பள்ளிகளும் துவங்கினார் உத்திர பிரதேசத்தில் உள்ள ஷாரன்புர் நகரில் முகமது அபித் உசைன்(Mohammad Abid Husayn ) என்பவரால் 1867-ல் தியாபந்த மதரஸா ஏற்படுத்தப்பட்டது. 1879-ல் தியாபந்த மதரஸாவுடன் தார்-உல்-உலும் என்ற அமைப்பும் இணைந்து கொண்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தியாபாந்தி வாஹாபியின் சித்தாந்தங்கள் கட்டாயமாக இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டும் என இமாம்கள் உத்திரவிட்டார்கள். முதலில் மதத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும், மதத்திற்கு பின்னர் தான் நாட்டிற்கு கட்டுப்பட வேண்டும். இரண்டாவது உம்மாக்களுக்கு கீழ்படிய வேண்டும், மூன்றாவதாக இஸ்லாமியர்களின் நலனை காக்க ஜிகாத் தொடுக்க வேண்டும் என்றாலும், அதற்கு கட்டுப்பட வேண்டும். இதன் அடிப்படையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தியோபந்தி மதரஸாக்களுக்கும், Mawdudi பள்ளிக்கும் விசுவசமாகவே நடந்தார்கள். இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பணியே தீவிரவாத இஸ்லாத்தை உருவாக்குவது, இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் பரவ வேண்டும் என்ற நோக்கமே முதன்மையாக இருந்த்து.

இந்தியன் முஜாஹிதீன் நடத்திய பயங்கரவாத தாக்குதல்கள்

11.7.2006ந் தேதி மும்பையில் ரயிலில் தொடர் குண்டு வெடிப்பு 216 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 700க்கு அதிகமானவர்கள் படுகாயமடைந்தார்கள். 23.11.2007ந் தேதி உத்திர பிரதேசத்தில் லக்னே, வாரனாசி, பைசாபாத் ஆகிய நகரங்களில் உள்ள நீதி மன்ற வளாகத்தின் வெளியே குண்டு வெடிப்பு, 14 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 50க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். 1.1.2008ந் தேதி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த ராம்புர் நகரில் வெடி குண்டு தாக்குதல் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 8 பேர்கள் கொல்லப்பட்டார்கள், பாதுகாப்பு படையினர் ஆறு பேர்கள் படுகாயமடைந்தார்கள். 13.5.2008ந் தேதி ஜெய்புர் கடைவீதியில் வெடி குண்டு வெடித்த்தில் 60 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 200க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள். 25.7.2008ந் தேதி பெங்களுரில் எட்டு இடங்களில் வெடித்த குண்டுகளின் காரணமாக 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தாலும், இருவர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். 26.7.2008ந் தேதி அகமதாபாத் நகரில் 18 இடங்களில் வைத்த குண்டுகள் வெடித்ததில் 38 பேர்கள் கொல்லப்பட்டார்கள், 130க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இதை போலவே சூரத்திலும், டெல்லியிலும் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் உட்பட பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியவர்கள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் என்பது முழு உண்மையாகும். இந்தியாவில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்களில், தாக்குதல்களை நடத்தியவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கு சவால் விடும் வகையில் அமைந்துவிடும், ஆனால் இந்தியன் முஜாஹதீன் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ஊடகங்களுக்கும், காவல் துறையினருக்கும் தகவல்களை கொடுத்து விட்டு தாக்குதல்களை நடத்தினார்கள். எனவே தாக்குதல் நடப்பதற்கு முன்பும், நடந்த பின்னரும் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பில் உள்ள முக்கியமானவர்கள்

இந்த அமைப்பில் உள்ள அனைவரும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள். இவர்கள் 2006லிருந்து இன்று வரை நாட்டில் நடந்துள்ள பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர்கள். அப்துல் சுபான் குரேஷி, இவன் சப்ட்வேர் என்ஜினியர், வெடி குண்டு தயாரிப்பில் திறமையானவன். ரியாஸ் இஸ்மாயில் ஷாபந்திரி (Riyaz Ismail Shahbandri ) , முப்தி அபு பஸிர் Mufti Abu Bashir என்பவன் சிமிக்கும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் தொடர்பாளர், சப்தார் நகோரி கைது செய்யப்பட்டவன், க்யுமைதீன் கப்பாடியா Qayamuddin Kapadia வதோராவில் உள்ள வியாபாரி, சாஜித் மன்சூரி Sajid Mansuri , உஸ்மான் அகர்பட்டிவாலா Usman Agarbattiwala, ஆலம்ஜிப் அப்ரிதி Alamzeb Afridi, அப்துல் ரஸாக் மன்சூரி, முஜிப் ஷேக், சாகீத் ஷேக்,அமில் பர்வோஸ் போன்றவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். இவர்கள் அனைவரும் காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள்.

வெளி நாட்டு தொடர்பு மற்றும் நிதி உதவி

எவ்வாறு சிமி இயக்கத்திற்கு வெளிநாட்டில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் நிதி உதவி அளித்தனரோ அதே அமைப்பினர் தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கும் நிதி உதவி செய்தார்கள். ரியாத்தில் உள்ள World Assembly of Muslim Youth என்ற அமைப்பும், குவைத்தில் உள்ள International Islamic Federation of Students Organisation அமைப்பினரும் உதவி செய்த்துடன், சிக்காகோவில் உள்ள கன்சலடிவ் கமிட்டி ஆப் இந்தியன் முஸ்லிம் அமைப்பும் ( Consultative committee of Indian Muslims ) அதிக அளவில் நிதி கிடைக்க ஏற்பாடு செய்தார்கள். சவுதி அரேபியாவில் உள்ள சிமி ஆதரவாளர்கள், இந்தியாவில் உள்ள குறிப்பிட தக்க இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளார்கள் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், கேரளத்தை மையமாக கொண்டு செயல்படும் நேஷனல் டெமாக்கரடிக் ஃப்ரண்ட் மற்றும் இஸ்லாமிக் யுத சென்டர் அமைப்பும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டார்கள். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு தேவையான பயிற்சிகளும், ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்து பொருட்கள் வாங்க தேவையான நிதி உதவிக்கு ஏற்பாடு செய்து கொடுப்பதும் இவர்களின் முக்கிய பணியாகும்.

im09பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ தான் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த்தால், அவர்களுடனான நெருக்கம் அதிக அளவில் இருந்த்து. சிமி இயக்கத்தின் பொறுப்பாளரான சப்தார் நகோரி என்பவர் பல்வேறு காலகட்டங்களில் தங்களுக்கும் ஐ.எஸ்.ஐக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றே கூறி வந்தார். ஆனால் 1996-1997-ல் Kashmir Awareness Bureau என்ற அமைப்பு நடத்திய கூட்டங்களில் நகோரி கலந்து கொண்டார், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஹூரியத் மாநாட்டு கட்சியின் மீர்வாஸ் உமர் பரூக்? ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் பொறுப்பாளர் யாசின் மாலிக், போன்றவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். புது டெல்லியில் பாகிஸ்தான் தூதர் ரியாஸ் கோக்கர் என்பவர் கொடுத்த இப்தார் விருந்தில் நகோரி கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியில் சபி நாசன் (Saif Nachan ) அப்துல் சுபான் குரேஷி ஆகியோர் கலந்து கொண்டார்கள், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சிமி இயக்கத்தினர் ஐ.எஸ்.ஐயுடன் உறவு கொள்ள துவங்கியதாக காவல் துறையினர் தெரிவித்தார்கள். ஐ.எஸ்.ஐயை போலவே பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்புனருடனும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். நேபாள், பங்களா தேஷ் நாடுகளிலிருந்து செயல்படும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்புடனும் உறவு கொண்டார்கள். ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பின் துணையோடு, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் தொடர்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயினர்.

இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு அதிக அளவில் தொடர்பில் இருந்த பயங்கரவாத அமைப்பு என்றால் அது லஷ்கர்-இ-தொய்பாவுடன் மட்மே. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த சர்பிரிஷ் நவாஸ் (Sarfaraz Nawaz ) என்பவனை பெங்களுரில் கைது செய்யப்பட்டான். இவனிடம் விசாரனை செய்த போது, லஷ்கர்-இ-தொய்பாவின் நேரடி கட்டளையின் படி பெங்களுர் குண்டு வெடிப்பு நிகழந்த்து, இத்திட்டத்திற்காகவே நஸிர் (Nazeer )என்பவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவன் விசாரனையின் போது, 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓமன் நாட்டில் கைது செய்யப்பட்ட மஸ்காட் தொழிலதிபர் அலி அப்துல்-அஸிஸ் அல்-ஹொட்டி (AliAbdul Aziz al-Hooti )என்பவன் இந்தியாவில் உள்ள சிமி மற்றும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினருக்கு நிதி உதவி செய்வதும், மேற்படி நிதியானது சர்பிரிஷ் நவாஸ் மூலகமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்த்து. 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 மற்றும் 17ந் தேதி ஹொட்டி மும்பைக்கு விஜயம் செய்திருப்பதாகவும், 2007-ல் பஃகீம் அன்சாரி மூலம் ஒரு கப்பல் லஷ்கர் அமைப்பினருக்கு அனுப்பியவனும் இந்த ஹொட்டி தான் என்பதும், ராம்புர் மத்திய ரிசர்வ் படையின் மீது 1.1.2008ந் தேதி தாக்குதல் நடத்தியவன் பஃகீம் அன்சாரி( Fahim Ansari) என்பதும், இவனை உத்திர பிரதேச காவல் துறையினர் பின்னர் கைது செய்த போது கிடைத்த தகவல் ஆகும். மஸ்காட்டில் பணியில் இருந்த போது அங்குள்ள மசூதியில் தொடர்ச்சியாக ஹொட்டியை சர்பிரிஸ் நவாஸ் ஜிகாதி நன்பர்கள் மூலமாக சந்திப்பு நடந்து வந்துள்ளது.

ஆகவே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் முயற்சியின் காரணமாக முழுவதும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை கொண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு உருவாக்க வேண்டும் என்ற நீன்ட நாள் சிந்தனையில் உருவானதுதான இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பாகும். 2001-ல் சிமி மீது மத்திய அரசு தடை விதித்தவுடன், அந்த அமைப்பினரில் ஜிகாத் சிந்தனையை தூண்டி அதன் மூலம் உருவான அமைப்பாகும். இவர்களை பற்றிய தகவல்கள் இன்னும் நிறை இருப்பதால் பின்னர் ஒரு காலக் கட்டத்தில் விரிவாக அலசுவோம்.

நன்றி - - ஈரோடு ஆ.சரவணன்

No comments:

Post a Comment