Thursday, September 19, 2013

                                         மோடிஜிக்கு பெருமை சேர்த்த மலேசியத்தமிழர்கள்                கோலாலும்பூர் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பில்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் இயக்கத்தில், நேற்று மலேசியா தமிழர்கள் சிலர் ஒன்று கூடி கேக் வெட்டி, சிறப்பு வழிபாடு செய்துள்ளார்கள். சிறப்பு வழிபாடு குஜராத் முதல்வர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு. அவரின் பிறந்தநாளுக்காக இங்கு கேக் வெட்டி, சிறப்பு பூஜைகள் வழிபாடு செய்து செய்துள்ளனர் மலேசியா தமிழர்கள்.
எனக்கு இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்திய அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் நினைவு நாள் சிறப்பு பூஜைகள் மலேசியா தமிழர்கள் கோவில்களில் செய்துள்ளனர் என்றால்.. அது மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும்தான்.. வேறு எவருக்கும் இல்லை.
அவராவது தமிழக முன்னாள் முதல்வர். அதனால், இங்குள்ள தமிழர்கள் அவரை கொண்டாடலாம். ஆனால், தமிழர்கள், அதுவும் மலேசியா தமிழர்கள், தமிழர் அல்லாத ஒரு இந்திய அரசியல் தலைவருக்கு அவர் பிறந்த நாளின் போது, சிறப்பு பூஜைகள் செய்து, அவர் இந்திய பிரதமாராக ஆக வேண்டும். நோய் நொடியின்றி வெகுநாள் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொண்டார்களே அதுதான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது..
திராவிட சாக்கடை அரசியலில் மயங்கி, மலேசியா தமிழர்களும், எங்கள் மொழி , எங்கள் இனம், திராவிடம், வடநாடு தென்னாடு, சமஸ்கிருதம் என்று ஏதோதோ உளறி கொண்டு இருந்துள்ளனர்.. ஆனால், இப்போது, அந்த வெறி சிந்தனைகள் மாறி வருகிறது... பாரதம் முழுவதும் நமக்கு சொந்தமே. வட நாடோ, தென்னாடோ, அனைத்தும் அனைத்து இந்திய சகோதர்களும் நம் உறவே என்ற நல்ல சிந்தனை வந்துள்ளது..

No comments:

Post a Comment