Tuesday, July 23, 2013

                                      65  தேசவிரோதிகள்
நரேந்திர மோடிக்கு விசா வழங்கக்கூடாது என்று அமெரிக்க அரசை வலியுறுத்தி இந்தியாவை சேர்ந்த 65 எம்.பி.க்கள் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் எழுதி இருக்கும் தகவல் இன்று  வெளியானது.
கடந்த 2012–ம் ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இந்த கடிதம் எழுதப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் உள்ள ‘இந்திய முஸ்லிம் கவுன்சிலி’ல் உள்ள அந்த கடிதத்தின் நகல், ஞாயிற்றுக்கிழமை அன்று மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காங்கிரஸ்–தி.மு.க.
12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 40 மக்களவை எம்.பி.க்களும், 25 மேல்–சபை எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக, இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மேல்–சபை சுயேச்சை எம்.பி.யான முகமது அதீப் தெரிவித்து இருக்கிறார்.
சீத்தாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட்), எம்.பி.அச்சுதன் (இந்திய கம்யூனிஸ்டு), ரஷீத் மசூத் (காங்கிரஸ்), எஸ்.அகமது (திரிணாமுல் காங்கிரஸ்), கே.பி.ராமலிங்கம் (தி.மு.க.), எஸ்.எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோரும் கடிதத்தில் கையெழுத்திட்டு உள்ளனர்

No comments:

Post a Comment