Saturday, June 8, 2013

பாகிஸ்தான் பிரிவினை பற்றி திரு.பசும்பொன் தேவர் விவரித்த உண்மைகள்! !
மகாத்மா காந்தியின் மனசாட்சியாகவும், பாகிஸ்தானை பிரித்துக்கொடுப்பதில் காந்தியை தீவிரமாய் ஆதரித்த திரு.ராஜாஜி அவர்கள் சென்னை மகாண பிரதான மந்திரியாய் இருக்க அவரை நோக்கி பசும்பொன் தேவர் ஆவேசமாய் பேசியது !
""தேசத்தில் பாகிஸ்தான் என்ற பரம பாதகமான நாட்டுப் பிரிவினையை உண்டுபண்ணும்படி சொன்னது தாங்கள் அல்லவா?
அப்பொழுது என்ன சொன்னீர்கள்: 'பாகிஸ்தான் என்றால் ஜின்னாவுக்கு என்னவென்றாவது தெரியுமா? பாகிஸ்தானை கொடுத்துவிட்டால் அதனால் நமக்கு தொல்லை இருக்காது' என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.
"Pakistan bubble will be pricked" என்று சொன்னீர்களே!பாகிஸ்தானை கொடுத்த பிறகாவது இன்று அதனால் தொல்லையில்லாமல் இருக்கிறீர்களா?
காஷ்மீரில் இன்று நடக்கும் காரியங்கள் என்ன?
பாகிஸ்தான் கொடுத்தவுடனேயே அந்தப் பிராந்திய மக்கள், அந்தப் பிராந்தியத்திலேயே வசிப்பவர்கள் பாகிஸ்தான் பிரஜையாகி விடுவார்கள் என சொன்னீர்களே,
பாகிஸ்தான் கிடைத்தவுடனேயே ஒன்றரைக் கோடி இந்திய மக்களை அடித்துவிரட்டவில்லையா?
பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட ஒன்றரைக் கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று?
அவர்கள் நடு சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே!
சொத்தை இழந்து,வாழ்க்கை நிலைமை இழந்து , மனைவி மக்களை இழந்து அலறித்துடித்தார்களே!
அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களை பாகிஸ்தான் ஓடு என ஆச்சாரியர் கோஷ்டியால் விரட்டமுடிந்ததா?அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜையே போ" என்று சொல்ல முடிந்ததா?
ஆச்சாரியாரே! உங்களுடைய அறிவு அப்போது எப்படி ஆயிற்று? நீங்கள் யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்? அவர்கள்(பாகிஸ்தான்) உங்களிடம் ஏமாந்தார்களா? கொஞ்சம் சொல்லுங்களேன். அரசியலுக்கு அறிவு மட்டும் இருந்தால் போதுமா? ஆற்றல் இருந்தால் மட்டும் போதுமா?
காந்தினுடைய தவறான மரணத்திற்கும் தங்கள் பாகிஸ்தான் யோசனையல்லவா துராணகருவி.
((1952-ல் ஜூலை-3ல் சென்னை மகாணப் பேரவையில் ராஜாஜி கொண்டு வந்த 'நம்பிக்கை தீர்மாணத்தில் திரு.பசும்பொன் தேவர் பேசியது))
. "பாகிஸ்தானை கேட்டவனும் முட்டாள்! பாகிஸ்தானை கொடுத்தவனும் முட்டாள்!" என்று தேவர் கண்ணிகி இதழில் கட்டுரை எழுதியுள்ளார் அதில் மிக நீண்ட விரிவுரை தந்திருப்ப்பார்..இந்த நாடு எததனை துரோகிகளை சந்தித்து இன்னும் உயிர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என எனக்கு சிந்தனை ஓடியது!

No comments:

Post a Comment