Wednesday, June 12, 2013

பிறக்கப் போகும் குழந்தை ஆணா?பெண்ணா?
இது உங்கள் கையில்!

நம் நாசியில் மூச்சு மாறி மாறி இயங்குவது உங்களுக்குத் தெரியும்.

வலது புறம் சிறிது நேரம்,இடது புறம் சிறிது நேரம் என மாறி மாறியே சுவாசம் வருகிறது.

இதை அடிப்படையாகக் கொண்டு திருமூலர், பிறக்கும் குழந்தையின் பால் என்னவாக இருக்கும் எனத் தீர்மானிக்கிறார்,

புணர்ச்சியின்போது,ஆணின் மூச்சு வலப்பக்க நாசியில் (இதை சூரிய கலை என்று சொல்வார்கள்)இயங்குமானால் பிறக்கும் குழந்தை ஆணாகவும் இடப்பக்க நாசியில் இயங்கினால்(இதைச் சந்திர கலை என்று சொல்வார்கள்) பெண் குழந்தையாகவும் இருக்கும்!

பிராண வாயுவுடன் அபான வாயு எதித்தால் சுக்கிலம் சிதைந்து இரட்டைக் குழந்தையாகும்!

அபூர்வமாக,இரு பக்கமும் மூச்சு இயங்கினால் குழந்தை ஆணுமின்றிப் பெண்ணுமின்றிப் போகும் .

இது திருமூலர் கூற்று,

அந்தப் பாடல்.........
”குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலிஆகும்கொண்ட காலொக்கிலே” (திருமந்திரம்-482

No comments:

Post a Comment