Friday, February 14, 2014

மோடியின் 10 கட்டளைகள்:::அடி பணிந்தது அமெரிக்கா!
1.டெல்லியில் தூதரை சந்திக்க மாட்டேன். அவர்தான் என்னை சந்திக்க ஆமதாபாத் வர வேண்டும்.

2.என்னை சந்திக்க போவதாக மத்திய அரசிடம் தெரிவித்து அமெரிக்கா அனுமதி பெற வேண்டும்.

3.அதை ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்.

4.மாநில பிரச்னைகள் எதை பற்றியும் தூதர் என்னிடம் கேட்கக்கூடாது.

5.மத சுதந்திரம், கலவரம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள் தொடர்பாக பேசக்கூடாது.

6.பிரதமர் ஆனதும் என்னென்ன செய்யப் போகிறேன் என்பதை கேட்கலாம்.

7.இந்தியாவுடன் உறவை பலப்படுக்திக் கொள்ள அமெரிக்கா என்னென்ன செய்ய வேண்டும் என்று விசாரிக்கலாம்.

8. கலவரத்தில் எனக்கு பங்கில்லை என்று கோர்ட் தீர்ப்புகள் கூறியிருப்பதை அமெரிக்கா வெளிப்படையாக எற்றுக் கொள்ளவேண்டும்.
Modi and u s ambasador.2
9.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு மூன்றாவது முறையாக முதலமைச்சரான தலைவரை அவமதித்தது தவறு என்று அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்.

10. நூற்று முப்பது கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக எழுச்சி பெறும் மோடியிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு பத்து கட்டளைகளை மோடி பிறப்பித்துள்ளதாக தூதரக வட்டாரங்களில் பரபரப்பாக பேச்சு ஓடுகிறது. அனைத்தையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்ட பிறகுதான் நாளைய சந்திப்புக்கு மோடி நேரம் கொடுத்தார் என்கிறார்கள்.

அமெரிக்காவை பின்பற்றி மோடியை பிளாக்-லிஸ்ட் செய்த இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் போன்றவை ஏற்கனவே சமரசம் செய்துகொண்டுவிட்டன.

No comments:

Post a Comment