1993 ஜனவரியில், மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி, அரசு
அறிக்கையின்படி, 257 பேரைக் கொன்று, பல்லாயிரக்கணக்கானோரை குற்றுயிராக்கிய
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிடமிருந்து, ஏ.கே.56 ரைபிளையும், ஒரு
கைத்துப்பாக்கியையும் வாங்கி, தன் பாதுகாப்புக்காக கள்ளத்தனமாக பதுக்கி
வைத்திருந்தார் சஞ்சய் தத் என்பது தான் பிரச்னை. இப்படி திருட்டுத்தனமாக,
லைசென்ஸ் இல்லாமல் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருந்த சஞ்சய் தத்தை,
கட்ஜுகளும், ஜெயபிரதாக்களும், அமர்சிங்களும், சாந்தி பூஷண்களும்,
ரஜினிகளும் ஆதரிக்கின்றனர். சஞ்சய் தத் பெற்ற ஆறாண்டு தண்டனை யை, ஐந்து
ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் குறைத்த பின்பும், "நானும் என் மனைவியும்,
குழந்தைகளும் சொல்லொணா துயரத்தில் துன்பப்படுகிறோம்' என்று வேஷமிட்டு,
அழுது நடிக்கிறார் நடிகர் சஞ்சய் தத்.அப்படியென்றால், பலியான அந்த, 257
பேரின் குடும்பங்களும், குற்றுயிராகக் கிடக்கும் பல்லாயிரக் கணக்கான
குடும்பங்களும், பேரின்பத்திலா இருக்கின்றனர்?நிழல் உலக தாதா தாவூத்
இப்ராகிம் என்ன, சஞ்சய் தத்தின் ஒன்றுவிட்ட சித்தப்பாவா?ஒரு கிரிமினலின்
நண்பனும், கிரிமினல் தானே?
No comments:
Post a Comment