Monday, June 24, 2013

அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும். அப்போது தான், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணையும்' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
வலை பக்கத்தில்
பா.ஜ., கட்சியின் நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜியின், 60வது நினைவு நாளையொட்டி, சமூக வலை தளத்தில் உள்ள தன் வலைப்பக்கத்தில் அத்வானி எழுதியுள்ளதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு, சிறப்பு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்பது, பா.ஜ.,வின் முக்கியமான கோரிக்கை. கூட்டணி கட்சிகளை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே, இந்தக் கோரிக்கையை, பா.ஜ., நீண்ட நாட்களாக எழுப்பவில்லை.
ஆனால், அரசியல் சட்டத்தின், 370வது பிரிவு ரத்து செய்யப்படும் நாளை, நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டால் தான், ஜம்மு - காஷ்மீர், இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணையும்.
ஆரம்பத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள், மற்ற மாநிலத்தவர்கள் செல்ல வேண்டும் எனில், அனுமதிச் சீட்டு பெறும் முறை அமலில் இருந்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் அப்துல்லா, இந்த முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.
சிறையில் அடைப்பு
இதற்கு எதிராக குரல் கொடுத்தவர், ஷியாம பிரசாத் முகர்ஜி. உரிய அனுமதி பெறாமல், அவர் ஜம்மு - காஷ்மீருக்குள் நுழைந்த போது, கைது செய்யப்பட்டு, பின் நீதிமன்ற காவலில் இருந்த போது, உடல் நலம் குன்றி இறந்தார்.
ஷியாம பிரசாத் முகர்ஜி மேற்கொண்ட முயற்சியின் காரணமாகவே, ஜம்மு - காஷ்மீரில், பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அம்மாநிலத்திற்குள் செல்ல, அனுமதிச் சீட்டு பெறும் முறை ரத்து செய்யப்பட்டது.
அம்மாநிலத்தில், பிரதமர் என, அழைக்கப்பட்டவர், மற்ற மாநிலங்களைப் போல, முதல்வர் என, அழைக்கப்பட்டார். இருந்தாலும், இன்னும் பல மாற்றங்களும் நிகழ வேண்டும்.
இவ்வாறு, அத்வானி கூறியுள்ளார்...........அன்புடன் ;சக்குடி ஸ்ரீனிவாசன்

சக்குடி சீனிவாசன்: எப்போதும் ராகுல் அப்படித்தான்!உத்தரகண்ட், இயற்கை ...

சக்குடி சீனிவாசன்: எப்போதும் ராகுல் அப்படித்தான்!
உத்தரகண்ட், இயற்கை ...
: எப்போதும் ராகுல் அப்படித்தான்! உத்தரகண்ட், இயற்கை பேரழிவில் சிக்கி, உருக்குலைந்துள்ளது. மாநில அரசுகள் மட்டுமின்றி, அரசியல் பேதம் மறந்...
எப்போதும் ராகுல் அப்படித்தான்!

உத்தரகண்ட், இயற்கை பேரழிவில் சிக்கி, உருக்குலைந்துள்ளது. மாநில அரசுகள் மட்டுமின்றி, அரசியல் பேதம் மறந்து அனைத்து கட்சிகளும், உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில், காங்., கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்படும், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், வெளிநாடு பயணம் சென்றுள்ளார்.

 ""நாட்டிற்கு, இயற்கை பேரழிவு உள்ளிட்ட ஆபத்து ஏற்படும் போதெல்லாம், ராகுல் வெளிநாட்டுக்கு சென்று விடுகிறார். ராகுலுடைய சேவை, ஸ்பெயின், சுவீடன் அல்லது எந்த நாட்டுக்கு தேவை என்றாலும், அவர் அங்கேயே இருந்து கொள்ளட்டும்     ,''.      அன்புடன்; சக்குடிஸ்ரீனிவாசன் 
குஜராத் முதல்வர் மோடி, நேரடியாகவே களத்தில் இறங்கினார். ஹெலிகாப்டர், நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் உதவியுடன், 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். அதோடு நின்றுவிடாத மோடி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் உதவியுடன், நிவராண முகாம்களை ஏற்படுத்தினார்.

வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட், மாநிலமே உருக்குலைந்து விட்டது. பல மாநிலங்களில் இருந்து, புனித யாத்திரை சென்ற பக்தர்கள், இதில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை சொந்த ஊர் அழைத்து வர, அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

களத்தில் மோடி!

அங்கு, மீட்பு பணிகளை பார்வையிட தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.""அவர்கள் செல்வதால் மீட்புப்பணி பாதிக்கப்படும்; அப்பகுதிகளை பார்வையிட, எனக்கே அனுமதியில்லை. உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவுக்கு மட்டுமே அனுமதி,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். ஆனால், இதை மோடி பொருட்படுத்தவில்லை. குஜராத் மாநிலத்தவர்களை பாதுகாப்பாக மீட்க, நேரடியாகவே களத்தில் இறங்கினார்.

ஒரே இரவில்... :

ஜூன் 21ம் தேதி மாலை, உத்தரகண்ட் புறப்பட்ட அவர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஐந்து பேர், தலா ஒரு ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள், ஜி.ஏ.எஸ்., (குஜராத் மாநில நிர்வாகம்) அதிகாரிகள் இருவர், டி.எஸ்.பி.,க்கள் இருவர், இன்ஸ்பெக்டர்கள் ஐந்து பேர் என, டேராடூன் சென்றார்; அங்கு தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு பணிக்காக, டில்லி, டேராடூனில் தலா ஒருவர்; குஜராத்தில் இருவர் என, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்."குஜராத் பக்தர்கள் எந்தெந்த இடங்களில் உள்ளனர்; மீட்பு பணிகளை எவ்வாறு செய்வது' என்பது குறித்து, நள்ளிரவு, 1:00 மணி வரை, மோடி ஆலோசனை நடத்தினார்.

நவீனம்... நவீனம்:

மறுநாள், மீட்புப்பணிகள் துரிதம் அடைந்தன. போக்குவரத்து இல்லாத இடங்களில், ராணுவத்தினர் உதவியுடன் ஹெலிகாப்டர் மூலம், 15 ஆயிரம் பக்தர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு பணியில், நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் பெரும் பங்கு வகித்தன.மீட்கப்பட்டோர், முதலில் சாலை வசதி உள்ள இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, பின், டேராடூன் சென்றனர். அங்கிருந்து சாலை மற்றும் வான்வழியாக குஜராத் புறப்பட்டனர்.இதற்காக, "இனோவா' கார்கள்-80, சொகுசு பேருந்துகள்-25, "போயிங்' ரக விமானங்கள்- 4 ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும், மோடியின் மேற்பார்வையில் நடந்தது.

அரவணைப்பு:

குஜராத் மக்களை மீட்டதோடு மட்டுமின்றி, உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரண முகாம்களை, மோடி அமைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டன. எந்த இடத்தில் உணவு மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் கிடைக்கும்? என்ற விவரங்கள், அந்த முகாம்கள் மூலம் தெரிவிக்கப்பட்டன.

ஹெலிகாப்டரில் ஆய்வு:

இதற்கிடையே, மிகவும் பாதிக்கப்பட்ட தேவபிரயாக், பத்ரிநாத், டெக்ரிடேம், ருத்ரபிரயாக், கர்னபிரயாக், சமோலி, கவுரிகண்ட், கேதர்காதி ஆகிய பகுதிகளை, ஹெலிகாப்டர் மூலம் மோடி பார்வையிட்டார். மேலும், ஹரித்வாரில், குஜராத் அரசால் அமைக்கப்பட்ட, நிவாரண முகாம்களில் இருந்த மக்களை சந்தித்தார்.

கோவிலை புதுப்பிக்க...:

உத்தரகண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவையும், மோடி சந்தித்தார். ""நிவாரணப் பணிகளில் உதவ, குஜராத் எப்போதும் தயாராக இருக்கிறது,'' என, தெரிவித்த மோடி, கேதார்நாத் கோவிலை, இயற்கை சீற்றங்களில் பாதிக்காத வகையில், நவீன தொழில்நுட்பம் மூலம் சீரமைப்பது குறித்து, பகுகுணாவிடம் ஆலோசனை செய்தார். ஆனால், பகுகுணா அதை நிராகரித்து விட்டார்.மோடியின் மீட்புப்பணி குறித்து கருத்து தெரிவித்த காங்., கட்சியினர், "அவர்,குஜராத்திகளை மட்டுமே மீட்டுள்ளார். அது அவரது கடமை' என, வழக்கம் போல குற்றஞ்சாட்டினர். ஆனால், உள்ளூர் பா.ஜ., தொண்டர்கள் மூலம், நிவாரண முகாம்களை, மோடி ஏற்படுத்தியது குறித்து, வாய் திறக்க மறுத்து விட்டனர்."அங்குள்ள காங்., தொண்டர்களை பயன்படுத்தி, நிவாரணப் பணிகளை, அக்கட்சி தலைவர்களும் செய்திருக்கலாமே. அந்த யோசனை, காங்., கட்சியினருக்கு ஏன் வரவில்லை' என, கேள்வி எழுப்புகின்றனர், மோடி ஆதரவாளர்கள்........அன்புடன் ,சக்குடி ஸ்ரீனிவாசன் 

Friday, June 21, 2013


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை விட இந்தியாவை அதிகம் நேசித்தவர் நாதுராம் விநாயக் கோட்சே.

நவம்பர் 15- தூக்கில் தொங்கிய கோட்சேயின் வாக்குமூலம்

கோட்சே -- இந்த மனிதனை மேற்கோள் காட்டியோ அல்லது ஆதரவாக கருத்து சொன்னாலோ ஒரு எதிரியை போல் பார்க்கப்படும் தேசத்தில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது ...

"இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது"-- கோட்சே

உலகம் முழுவதும் உத்தமராய் போற்றி வணங்கப்பட்ட ஒரு வயோதிகரை சிறிதும் ஈவு இரக்கமின்றி துடிக்க துடிக்க சுட்டு கொலை செய்த ஒரு மனிதனிடம் அப்படி என்ன நியாயம் இருந்துவிட முடியும் ..? என்ற மனோபாவத்தோடு காந்தியின் கொலைபற்றிய கோட்சேயின் வாக்கு மூலத்தை படித்த போது பல்வேறு சிந்தனைகளும் குழப்பங்களுமே மிஞ்சின ..!

நீங்களும் படித்துபாருங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள் .

டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில், மகாத்மா காந்தி கொலை வழக்கு விசாரணை நடந்தது. 1948 நவம்பர் 8_ந்தேதி கோட்சே வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம், ஆங்கிலத்தில் மொத்தம் 92 பக்கங்களில் எழுதப்பட்டிருந்தது. மொத்தம் ஐந்து மணி நேரம் நின்று கொண்டே வாக்குமூலத்தை கோட்சே படித்தார். வாக்குமூலத்தில் கோட்சே கூறியிருந்ததாவது:-

"தெய்வ பக்தியுள்ள பிராமணக் குடும்பத்தில் நான் பிறந்தேன். இந்துவாகப் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். நான் வளர வளர என் மதத்தின் மீது எனக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. ஆனால் எனக்கு எவ்வித மூட நம்பிக்கையும் ஏற்படவில்லை. தீண்டாமை ஒழியவும், சாதி ஒழியவும் பாடுபட்டேன். எல்லா இந்துக்களையும் சமமாக நடத்த வேண்டும், அவர்களுக்கு இடையே உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்துள்ளேன். சுவாமி விவேகானந்தர், திலகர், கோகலே, தாதாபாய் நவ்ரோஜி போன்றோர் எழுதிய நூல்களை படித்திருக்கிறேன்.

இந்தியாவின் வரலாற்றைப் படித்திருக்கிறேன். இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். மகாத்மா காந்தி எழுதிய நூல்களையும், வீரசவர்க்கார் எழுதிய நூல்களையும் ஆழமாகப் படித்திருக்கிறேன். அவர்கள் பேச்சையும் நான் கேட்டிருக்கிறேன். என்னுடைய எண்ணமும், செயலும் இயங்க அவை எனக்கு உறுதுணையாக இருந்தன. இவைகளைப் படித்ததால் இந்து மதத்தில் நம்பிக்கையும், அழுத்தமான பிடிப்பும் ஏற்பட்டன. இந்து சமயத்திற்கும், இந்துக்களுக்கும் தொண்டு செய்வதே முதல் கடமை என்று எண்ணினேன். முப்பது கோடி இந்துக்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். மனித இனத்தின் ஐந்தில் ஒரு பங்கு இந்துக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்வு ஏற்பட்டது.

1946_ல் முகமதியர்களின் கொடுமை சொல்லொணாத துயரத்தைத் தந்தது. அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது. நவகாளியில் நடந்த நிகழ்ச்சிகள் எங்கள் ரத்தத்தைக் கொதிப்படையச் செய்தன. அத்தகைய கொடுமைகள் புரிந்த முஸ்லிம்களை மகாத்மா காந்தி ஆதரித்தார். அதுமட்டுமல்ல டெல்லியில் ஒரு இந்துக் கோவிலில் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் "குர்ஆன்" வாசகங்களைப் படிக்கச் செய்தார்.

முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் மசூதியில் பகவத் கீதையை மகாத்மா காந்தியால் படிக்க முடியுமா? 1947_ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15_ந்தேதி விளக்குகள் அலங்காரத்துடன் நாடெங்கும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில் பஞ்சாபில் இந்துக்கள் உடைமைகளை முஸ்லிம்கள் தீக்கு இரையாக்கினார்கள். இந்துக்களின் ரத்தம், பஞ்சாப் ஆற்று நீரில் கலந்தோடியது.

மேற்கு பாகிஸ்தானில் இருந்த சிறுபான்மை இந்துக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். அதேபோல கிழக்குப் பாகிஸ்தானில் இருந்த முகமதியர்களும் நடந்து கொண்டனர். 11 கோடி மக்கள் வீடு இழந்தனர். இவ்வளவு நடந்தும் மகாத்மா காந்தி, "முகமதியர்களின் செயலில் ஒரு களங்கமுமில்லை" என்று பரிந்து பேசினார். என் ரத்தம் கொதித்தது. இனிமேல் நான் பொறுமையாக இருக்க முடியாத சூழ்நிலை உருவானது.

காந்தியடிகளை கடுமையான வார்த்தைகளால் நான் தாக்க விரும்பவில்லை. அவருடைய கொள்கையும், மார்க்கத்தையும் முழுவதாக நிராகரிப்பதாகச் சொல்ல விரும்பவில்லை. பிரிட்டிஷ்காரர்கள், நம்மிடையே பிரிவினையை உண்டாக்கி, சுகமாக நம் நாட்டை ஆண்டு வந்தபோது, மகாத்மா காந்தி அதை எதிர்த்துப் போராடி பெரும் வெற்றியை நமக்குத் தந்தவர் என்பதை நான் மறுக்கவில்லை; அதற்காக அவரைப் பாராட்டுகிறேன். ஆனால் இந்தியா பிரிக்கப்படுவதற்குக் காரணமாகவும், துணையாகவும் இருந்தவர் அவர். அதனால் அவர் இன்னும் நாட்டில் இருந்தால், இந்தியாவிற்குத் துன்பமும், இழப்பும் ஏற்படும். முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கும், அட்டூழியத்திற்கும் பக்கபலமாக இருப்பார் என்பதை உணர்ந்து கொண்டேன்.

நல்லதோ, கெட்டதோ அவர் எடுக்கும் முடிவினையே இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் அவரிடம் காணப்பட்டது. இந்தியா அவருடைய தலைமையை நாடினால் அது நம் நாட்டை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். அவரே இங்கு உள்ள எல்லாவற்றையும் இயக்குபவர்; ஒரு நீதிபதி என்றும் கூறலாம். "சத்தியாக்கிரகம்" என்றும் அழியாது என்பது அவர் அறிந்த சூத்திரம். காந்திஜியே தன் செயல்களுக்குத் தாமே வழக்கறிஞரும், நீதிபதியும் எனலாம். அவரது அரசியல், பகுத்தறிவு இல்லாதது எனப் பெரும்பாலானோர் நினைத்தனர்.

அவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற வேண்டும்; அல்லது அவர்களது அறிவுடைமயைக் காந்தியடிகளின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு சரண் அடைய வேண்டும்; பிறகு அவர் விரும்பியபடி செயல்புரிய விடவேண்டும். அவர் கண்டதோ, தோல்வி மேல் தோல்வி; அழிவு மேல் அழிவு. 33 வருடம் அரசியல் வாழ்வில் அவருடைய அரசியல் வெற்றி என்று எதையும் கூறமுடியாது. காந்தி வழி நடந்தால் நாம் அழிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். கைராட்டை, அகிம்சை, உண்மை எனக் கூறிக்கொண்டு புரட்சிகரமான கருத்துக்கும் எதிராக இருப்பார். 34 வருடம் கழிந்த பிறகு கை ராட்டையைத்தான் அவர் தந்தார்.

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.
சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. "கொலைக்கு நானே பொறுப்பு" என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்

Thursday, June 13, 2013

சக்குடி சீனிவாசன்: Tuesday at 3:44pm · போராளியின் மறுபெயர் யாரென்று...

சக்குடி சீனிவாசன்: Tuesday at 3:44pm ·
போராளியின் மறுபெயர் யாரென்று...
: Tuesday at 3:44pm · போராளியின் மறுபெயர் யாரென்று சொன்னால், உடனடியாக நரேந்திர மோடியை உதாரணம் காட்டலாம். அந்த அளவுக்கு சிறு வயதில்...
Tuesday at 3:44pm ·
  • போராளியின் மறுபெயர் யாரென்று சொன்னால், உடனடியாக நரேந்திர மோடியை உதாரணம் காட்டலாம். அந்த அளவுக்கு சிறு வயதில் இருந்தே, எந்த ஒரு கடினமான விஷயத்தையும் கூட, நாம் தோற்றுவிடுவோம் என்று எண்ணிவிடாமல் தொடர்ந்து போராட்ட குணத்துடன் அதனுடன் மோதி வெற்றி கண்டு வருபவர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி. பா.ஜ.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சில் பாலபாடம் கற்று இன்று பா.ஜ.வில் பிரசாரக்குழு தலைவர் என்ற உயரிய பொறுப்புக்கு வந்துள்ளார். அடுத்தது. இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பிரதமர் பதவியில் அவரை அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று பா.ஜ. முடிவு செய்துள்ளது. எப்போதுமே போராளிகளின் வாழ்க்கையை சற்று பின்னோக்கி பார்த்தால், அது நெஞ்சை பிழிவதாகத்தான் இருக்கும் என்பார்கள். அது மோடியின் வாழ்க்கையிலும் சில அத்தியாயங்களாக பதிந்து கிடக்கின்றன. அந்த பிஞ்சு செடியில் இடப்பட்ட இன்னல்கள் என்னும் உரத்தை தன்னுள் வாங்கி, இன்று ஆலமாக விருட்சமாக வளர்ந்து பலருக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறார் மோடி. 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம், குஜராத்தின் வத்நகரில், தாமோதரதாஸ் மூல்சந்த் மோடி , ஹீராபென் என்ற விவசாய தம்பதியின் 3வது மகனாக பிறந்தவர் மோடி. விவசாயி என்றாலே வறுமைதானே சொத்து.

    குடும்பத்தில் கடுமையான வறுமை நிலவியதால், அவரது மூத்த சகோதரர் டீக்கடை ஒன்றை போட்டார். அதில் மோடியும் அவரது சகோதரர்களும் வேலை பார்த்தனர். டீ கிளாஸ்களை கழுவி சுத்தமாக வைப்பது மோடியின் பணிகளில் ஒன்று. எந்த பணி என்றாலும் என்ன, செய்யும் நுணுக்கத்தில்தான் ஒருவரின் திறன் வெளிப்படும். அதேபோல், டீ கிளாஸ்களை மிக சுத்தமாக கழுவி துடைத்து வைத்துவிடுவார் மோடி. இந்தக் கடையில் வேலை பார்த்துக் கொண்டே அவர் பள்ளிப்படிப்பையும் முடித்தார். பள்ளி நேரத்தை தவிர பெரும்பாலான நேரத்தில் கடையில்தான் இருக்க வேண்டும். இரவு 11 மணிக்கு பின்னர் கொஞ்ச நேரம் படிப்பதற்கு நேரம் கிடைக்கும். இந்த நேரத்தில்தான் அவர் படித்துக் கொள்ள வேண்டும். லட்சியங்களை கனவாக கொண்ட மோடிக்கு அது பெரும் கஷ்டமாக இல்லை. ஆனால், பரீட்சையில் மார்க்தான் அவரிடம் வசப்படாமல் இருந்தது. 1960ம் ஆண்டு நடுப்பகுதியில் இந்தியா , பாகிஸ்தான் போர் நடந்தது. அந்த 10 வயதிலேயே அவர் ரயில் நிலையத்தில் ராணுவ வீரர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு பணியை செய்தார். 1967ல் குஜராத்தை வெள்ளம் பாதித்தபோதும் இரவு, பகல் பாராமல் மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார். இதற்கு எல்லாம் அடித்தளமாக இருந்தது, அவர் இணைந்திருந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புதான். கஷ்டப்பட்டு பள்ளிப்படிப்பை முடித்த மோடி, குடும்பத்தினரிடம் கெஞ்சிக்கூத்தாடி கல்லூரியில் சேர அனுமதி வாங்கினார்.

    கல்லூரியில் அவர் எடுத்துக் கொண்ட படிப்பு எம்.ஏ. அரசியல். சிறுவயதில் இருந்தே மோடியிடம் ஒரு பிடிவாத குணம், எதையும், எதிலும் போராடி பார்த்துவிடுவது என்பதுதான். எல்லோரும் ஒரு விஷயத்தை சாதாரண கோணத்தில் பார்த்தால் மோடி மட்டும் மாறுபட்ட கோணத்தில் இருந்து அதை பார்த்தார். அந்த கலை, இன்றைய கடினமான அரசியல் சூழ்நிலையிலும் அவருக்கு வெற்றியை தேடித் தந்துக் கொண்டிருக்கிறது என்றால், அது மிகையாகாது. கல்லூரி படிப்பில் முதுகலை அரசியல் பாடம் படித்த மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் இணைந்து பணியாற்றினார். அவரது அபார உழைப்பு, போராட்ட குணம், எதிலும் பின்வாங்காத தன்மை ஆகியவற்றை பார்த்து பிரசாரகர் பதவியை கொடுத்து அழகு பார்த்தது அந்த அமைப்பு. நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, தலைமறைவு வாழ்க்கையில் அதை எதிர்த்து போராடினார் மோடி. 1987ல் முதல் முறையாக அரசியல் நீரோட்டத்தில் அவர் இணைகிறார். பா.ஜ.வில் இணைந்த மோடி, குஜராத் மாநிலம் முழுவதும் அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டார். அவரது அபாரமான நடவடிக்கைகளை பார்த்து வியந்த தலைமை, அடுத்த ஒரு ஆண்டிலேயே அவரை கட்சியின் மாநில செயலாளராக ஆக்கியது. 1995ல் குஜராத்தில் நடந்த தேர்தலில் மோடியின் வியூகத்தினால், பா.ஜ. செல்வாக்கு பெற்றது.

    1987 , 1995 இடைப்பட்ட காலத்தில் மோடி மிகப்பெரிய ராஜதந்திரி என்பதை பா.ஜ. மட்டுமின்றி குஜராத்தும் புரிந்துக் கொண்டது. அத்வானியின் ரத யாத்திரை வெற்றிகரமாக நடத்தி தந்தது மோடிதான். ரத யாத்திரையில் கிடைத்த செல்வாக்கால், 1998ல் பா.ஜ. மத்தியில் ஆட்சியை பிடித்தது. மோடியை நன்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த பா.ஜ தலைமை அவருக்கு கட்சியின் தேசிய செயலாளர் பதவியை அளித்தது. மேலும், 5 மாநிலங்களின் கட்சிப் பொறுப்பையும் அவரிடம் அளித்தது. அந்த இளம் வயதில் மோடியை தவிர வேறு யாருக்கும் இவ்வளவு பெரிய அங்கீகாரத்தை பா.ஜ. தரவில்லை. இந்த சமயத்தில்தான் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. மற்ற மாநிலங்களையே கண்ணை ஒத்திக்கொண்டு பார்த்த மோடி, சொந்த மாநிலத்தை எப்படி பார்த்துக் கொள்வார்? குஜராத்தில் எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றிவாகை கிடைக்கும் என்பதை ஆராய்ந்து சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து தேர்தல் களத்துக்கு அனுப்பி வைத்தார். அவர் எதிர்பார்த்தபடி, குஜராத்தில் பா.ஜ. ஆட்சியை பிடித்தது. தன்னுடைய குரு என்று மோடியால் கூறப்பட்டு வந்த கேசுபாய் படேல் முதல்வராக பொறுப்பேற்றார். அவரது போதாதகாலம் போலும். குஜராத்தை மிகப்பெரிய பூகம்பம் புரட்டிப்போட்டது. நிவாரணப் பணிகளை முதல்வர் பதவியில் இருந்த கேசுபாய் படேல் சரியாக முடுக்கிவிடவில்லை என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், கேசுபாய் படேல் திறமையாக செயல்படாத முதல்வர் என்றும் புகார்கள் கூறப்பட்டன. கட்சியின் செல்வாக்கு சரிவதை பார்த்த பா.ஜ. தலைமை கேசுபாய்க்கு பதில் யாரை அந்த பொறுப்புக்கு நியமிக்கலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டது. முதலும் கடைசியுமாக அந்த வாய்ப்பில் இருந்த ஒரே நபர் மோடிதான். ஆனால், இளம்வயது, அனுபவமின்மை என்று பல காரணங்களை சில வயது முதிர்ந்த தலைவர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கூறினர்.

    திறமை அற்றவர்; அவரை துணை முதல்வராக்கலாம் என்று அத்வானி அப்போது வெளிப்படையாக கூறினார். பொறுப்பை கொடுத்தால், முழுமையாக கொடுங்கள். அதில் தோல்வியுற்றால் பின்னர் பேசுங்கள் என்று மோடி தடாலடியாக ஒரு போடுபோட்டார். அனுபவமிக்க தலைவர்கள் மோடியின் கருத்தில் இருந்த உண்மைக்கு சலாம் போட்டனர். அவரை முதல்வராக ஆக்கியது பா.ஜ. ஆனால், ஒரு ஆண்டிலேயே பா.ஜ. ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. குறுகிய பதவிக்காலத்திலேயே மோடி செய்த சாதனைகள் பலப்பல. முதலாவதாக அவர் செய்தது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள்தான். பூகம்பம் பாதித்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையும் பார்த்த மக்கள் மீண்டும் அவரது தலைமையிலான ஆட்சிக்கு வாக்குகளை அள்ளி, அள்ளித்தந்தனர். மீண்டும் அமோகமாக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்தார் மோடி. அன்றிலிருந்து இன்று வரையில் அவரது வளர்ச்சி வேகத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வளர்ச்சி என்பது சாதாரணமாக வந்துவிடாது. இதற்கு அவர் பாடுபட்டது ஏராளம். இன்று குஜராத் மாநிலம் தொழில் வளர்ச்சியில் மிகச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளதும் இதுதான் காரணம். சமீபத்தில் நடந்த குஜராத் மாநில தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் அவரை எப்படியும் வீழ்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி முதல் மன்மோகன் சிங் வரையில் பறந்து, பறந்து சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். மோடியின் பலம் என்றால், அது அவரது சாதனைகள்தானே. 3வது முறையாகவும் மோடி ஆட்சியைப் பிடித்தார். மோடிக்கு முஸ்லிம்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்று தீவிர பிரசாரம் நடந்து வந்த நிலையில், ஒரு நல்ல தலைவரை கைதூக்கிவிட வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?

    முஸ்லிம்களும் அவரது வாக்குகளை வாரி வழங்கினர். அப்போதே அவரை பிரதமர் பதவிக்குரிய வேட்பாளராகவும், பா.ஜ. தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவரான ராகுல் காந்திதான் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பிரதமர் பதவி வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டத்தில், மோடிக்கு கட்சியின் உயரிய பதவியான பிரசாரக்குழு தலைவர் பதவியை கொடுப்பது என்று பெரும்பாலான தலைவர்கள் முடிவு செய்தனர். இதை அறிந்துக் கொண்ட அத்வானி, அந்த கூட்டத்துக்கு செல்லவில்லை. அவரது ஆதரவாளர்களும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். நாடு சென்று கொண்டிருக்கும் வேகத்தில், இன்னமும் பழைய கருத்துகளுக்கு இடம் அளிப்பது சிறப்பாக இருக்காது என்பதை புரிந்து கொண்ட ராஜ்நாத் சிங், பல்வேறு எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, இப்பதவிக்கு மோடியின் பெயரை அறிவித்தார். முன் மக்கள் முன் மக்களே என்பது பழமொழி. பெரிய பதவிக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த விநாடியே, மோடி செய்த முதல் காரியம் அத்வானியிடம் பேசியதுதான். என்னதான் ஒருவர் கீழே இறங்கிவந்தாலும், சிலர் தங்கள் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதில்லை. அதில் அத்வானியும் ஒருவர். வயதிலும், கட்சியிலும் மிக மூத்தவரான அத்வானி, மோடிக்கு பதவி கொடுத்ததை எதிர்க்கும் வகையில் கட்சியின் அனைத்து பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மோடியின் செல்வாக்கு கூடி வருவது, அவரது கட்சி தலைவர்களின் எதிர்ப்பிலேயே உணர முடிகிறது. அடுத்து வரும் மக்களவை தேர்தல், இளம் தலைவரை உயர்ந்த பதவிக்கு கொண்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    சோஷியல் மீடியாவில் உச்சத்தில் மோடி:

    பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் எங்கு பார்த்தாலும் இப்போது நரேந்திர மோடியை பற்றிய பேச்சுதான்.
    ஆரம்பத்தில் மோடியை அனுபவமில்லாதவர், திறமையற்றவர் என்றெல்லாம் காரணம்காட்டி அவரை ஒதுக்க நினைத்தார்கள். ஆனால், அதெல்லாம் பொய் என நிரூபித்து, சீனா கண்டு வரும் வளர்ச்சியை போல், குஜராத்தின் அபார வளர்ச்சிக்கு வித்திட்டார் மோடி. தொழில்வளர்ச்சியில் எல்லா மாநிலங்களையும் ஒருபடி பின்னுக்கு தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கிறது குஜராத். தேசிய வளர்ச்சி புள்ளிவிவரம் உதாரணம்.
    இதையடுத்து, இந்த கோஷம் எடுபடாது என்று நினைத்தவர்கள், மோடிக்கு எதிராக மதவாத கோஷத்தை எடுத்துக் கொண்டனர். மோடி ஒரு தரப்புக்கு மட்டுமே ஆதரவானவர் என்று பிரசாரம் செய்தனர். குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், அதையும் பொய் என்று நிரூபித்து காட்டினார் மோடி. காரணம், முன்னெப்போதும் இல்லாத வகையில், முஸ்லிம்களின் ஆதரவுடன் அவர் பெரும் வெற்றி பெற்றார். இப்போது மோடிக்கு எதிராக வேறு என்ன கோஷத்தை எடுக்கலாம் என்று எதிராளிகள் சிந்தித்துக் கொண்டிருப்பதாக டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். சீனாவுக்கு ஈடாக இந்தியாவை வல்லரசாக ஆக்க மோடியை போன்ற தலைவரால் தான் முடியும் என்று பல தரப்பினரும் உணரத்துவங்கி விட்டனர். வெறும் வாய்ஜால வாக்குறுதிகளால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. அடுத்த நிமிடமே, சோஷியல் மீடியாக்களில் விமர்சிக்கப்படும் நிலை உருவாகி விட்டது. இந்த வகையில் மோடிக்கு இதில் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சோளப்பொரியை போட்டு திமிங்கலம் பிடித்தவர்

    எங்கு ஒருவருக்கு வேலை இருக்கிறதோ, அங்கு வெட்டிப் பேச்சுகள் இருக்காது என்பது சீன பழமொழி. அதைதான் என்னுடைய பணியாக கொண்டுள்ளேன் என்று மோடி அடிக்கடி கூறுவது வழக்கம்.இதன் எதிரொலியாக தன்னுடைய மாநிலத்தில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் எடுத்தார். மேற்குவங்க மாநிலத்தில் இருந்து டாடா கார் தயாரிப்பு நிறுவனம் துரத்தியடிக்கப்பட்டபோது, பலகோடி வரிச்சலுகைகளையும், ஏராளமான நிலங்களையும் அளித்து, அதை தன்னுடைய மாநிலத்துக்கு மோடி கொண்டு வந்தார். மோடியின் ராஜதந்திரம் அங்குதான் வேலை செய்தது. சோளப் பொரியை கொடுத்து, திமிங்கலத்தை அவர் பிடித்தது இப்போதுதான் எல்லா மாநிலங்களுக்கும் புரிய வருகிறது.

    டாடா தொழிற்சாலை மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்தது. டாடா நிறுவனமே இடம் மாறிவிட்ட பின்னர் தங்களுக்கு என்ன வேலை என்று பல குட்டி நிறுவனங்கள், தாங்களாகவே, பசுவின் பின்னால் செல்லும் கன்றுகளை போன்று குஜராத் மாநிலத்துக்கு இடம் பெயர்ந்தன.மின்தட்டுப்பாடு என்பது இப்போது எல்லா மாநிலங்களிலும் சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால், குஜராத்தில், மின்தடை என்ற பேச்சே யாருக்கும் தெரியாது.

    அந்த அளவுக்கு மின்னுற்பத்தியில் உபரி மாநிலமாக திகழ்கிறது குஜராத். இதிலும் மோடியின் ராஜதந்திரம்தான். 10 தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்தால், ஒரு மின்னுற்பத்தி நிலையத்துக்கு திட்டம் தீட்டுவது அவரது வழக்கமாக இருந்தது. சூரிய மின்சக்தியை பெருக்குவதற்கும் பெருமளவில் நடவடிக்கை எடுத்துள்ளார். கிராமங்களில் பொது விளக்குகளுக்கு மின்சாரம் தருவது சூரிய மின்சக்தி பேனல்கள். ஆரம்பத்தில் இதற்கான செலவு அதிகமாக தெரிந்தாலும், பின்னாளில் அதன் பலன் மிக அதிகம் என்பதை மோடி உணர்ந்திருக்கிறார்.அன்புடன்  ,,   அன்புடன்;சக்குடி ஸ்ரீனிவாசன்