Thursday, November 7, 2013

: ரஷ்யாவில், புராதன, விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியில் உள்ள, மாய்னா என்ற கிராமத்தில், கடந்த, ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா
கூறியதாவது: மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, ,8,000 பேர் வசித்துள்ளனர்.இப்பகுதியில், ஏழு மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட, மகாவிஷ்ணுவின் சிலை கிடைத்துள்ளது.

இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியில் புராதன நாணயங்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறு கோஜ்வின்கா கூறியுள்ளார்.இந்த புராதன கிராமத்தின் தோற்றம் மற்றும் அழிவு குறித்த சர்வதேச கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தற்போது கிடைத்த மகாவிஷ்ணு சிலை, காட்சிக்கு வைக்கப்பட்டது.

ரிக் வேதத்தில், இப்பகுதி, புனிதத் தலமாகவும், 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிலை கிடைத்திருப்பதன் மூலம், ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையில் பண்டைக் காலத்திலேயே தொடர்பு இருந்தது உறுதியாகி உள்ளது. பெருமாள் கோவில்களில், பூஜை, அர்ச்சனைகள் எவ்வாறு செய்யப்படுகிறதோ அதேபோன்ற, பூஜை, அர்ச்சனைகள், ரஷ்ய சர்ச்சுகளில் செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி பெயரில், அவர்களும் ஒரு விழாவைக் கொண்டாடுகின்றனர்

Friday, October 25, 2013


போலி கோஷங்களும் பொய்மை வேஷங்களும்...

First Published : 25 October 2013
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் அரசியல் சதுரங்கத்தில் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் காரியத்தில் ஈடுபட்டுவருகின்றன. நரேந்திர மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதும் வகுப்புவாத எதிர்ப்பு வேள்வியில் தங்கள் வாழ்க்கையை முற்றாக அர்ப்பணித்துவிட்டவர்கள் சிறுபான்மையினர் நலன் காக்க நவீன குருúக்ஷத்திரத்தில் வந்து குவிந்துவிட்டனர்.
ஒரு பக்கம் "மதச்சார்பின்மை' என்ற மந்திரகோலை மகிழ்ச்சியுடன் காங்கிரஸ் கையில் பிடித்துக் கொண்டது. மறுபக்கம் வகுப்பு வெறியை வளர்த்தெடுக்கும் சக்திகளை முறியடிக்க நம் காம்ரேடுகள் சுத்தியலும் அரிவாளும் சுமந்தபடி மூன்றாவது அணியமைக்கும் பணியில் முனைப்புடன் இறங்கிவிட்டனர்.
இந்த வகுப்புவாத எதிர்ப்பாளர்கள் உண்மையில் சிறுபான்மையினர் நலனில் நாட்டமுள்ளவர்களா? அல்லது அவர்களது வாக்கு வங்கியை தங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்த வெறும் "வாய் வேதாந்தம்' பேசுபவர்களா?
மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்துவிட்டது. ராகுலை பகிரங்கமாக அறிவிக்க ஆசையிருந்தாலும் அறிவித்தால் வெற்றி மங்கை மாலை சூட்ட வருவாளா என்ற அச்சம் காங்கிரûஸ அலைக்கழிக்கிறது. ஒருவர் பெயரை முன்மொழிந்தால் மற்றவர்கள் ஓடிவிடுவார்கள் என்ற கவலை காம்ரேடுகளை ஆட்டிப் படைக்கிறது. பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிப்பது இந்திய ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்று இருதரப்பும் அறிவித்துவிட்டன. ஜனநாயக நடைமுறையை பழுதுபடாமல் பராமரிக்கும் காங்கிரûஸயும் காம்ரேடுகளையும் நினைக்கும்போதே நெஞ்சம் சிலிர்க்கிறது.
ஜெயலலிதா, முலாயம்சிங், நிதிஷ்
குமார், நவீன் பட்நாயக், தேவகவுடா, ஜகன்மோகன் ரெட்டி போன்ற மாநிலத் தலைவர்களை உள்ளடக்கிய மூன்றாவது அணிதான் நாடு காக்கும், மதச்சார்பற்ற, சிறுபான்மையினர் நலம் காக்கும் நல்லரசை உருவாக்கக் கூடியது என்று மார்க்சியர்கள் முடிவெடித்துவிட்டனர்.
மூன்றாவது அணியில் இடம்பெறவேண்டும் என்று காம்ரேடுகள் அடையாளம் காட்டும் மாநிலத் தலைவர்களின் கடந்த காலம் எப்படிப்பட்டது? தமிழகத்தில் பா.ஜ.க. வேர் பிடித்து வளர்வதற்கு முதலில் வேண்டிய நீர் ஊற்றியவர் ஜெயலலிதா. பின்பு அதற்கு உரமிட்டு மரமாக்கி மகிழ்ந்தவர் கருணாநிதி.
1998-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வரவேற்பு ராகம் வாசித்தவர் ஜெயலலிதா. அப்போது, "அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதவாத நச்சரவத்தைக் கொண்டு வந்து சேர்ந்தவர் ஜெயலலிதா' என்றும், "பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ்' என்றும், "பா.ஜ.க.வில் உள்ளவர்கள் பண்டாரம், பரதேசிகள்' என்றும் கடும் வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர் கருணாநிதி. ஆனால் அடுத்த ஆண்டிலேயே தேர்தல் திருமணத்தில் பா.ஜ.க.வின் மாப்பிள்ளைத் தோழனாக அவர் அவதாரம் எடுத்தார்.
மோடியின் நிர்வாகத்தில் 2002-இல் முஸ்லிம் சமுதாயம் பேரழிவைச் சந்தித்ததாகக் கூறப்படும்போது, மத்திய அரசில் வாஜ்பாய் பக்கத்தில் ஆதரவுக் கரம் நீட்டியபடி அமர்ந்திருந்தவர்தான் கருணாநிதி. குஜராத் படுகொலை பற்றிய கேள்விக்கு, "அது ஒரு மாநிலத்தின் பிரச்னை' என்று கருத்து வழங்கி நழுவிக் கொண்டவர்கள்தான்
திமுகவினர். குஜராத் படுகொலைக்குப் பின்பும் மோடியிடம் நல்லன்புடன் நட்பு பாராட்டிய ஜெயலலிதா, அவர் மீண்டும் முதல்வரானதும் தனிவிமானத்தில் சென்று நேரில் நல்வாழ்த்து வழங்கி மகிழ்ந்ததை புதிய அம்மா பக்தர்கள் மறைக்கப் பார்க்கலாம். ஆனால் மார்க்சியர்கள் மறக்கக் கூடுமா?
மாயாவதியும், முலாயம்சிங்கும் பிறவி பா.ஜ.க. எதிர்ப்பாளர்களா? பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உத்திரப்பிரதேச முதல்வராக இருந்தவர் கல்யாண்சிங். அவருடைய ஆசியுடன்தான் அந்த கயமைத்தனம் அன்று அரங்கேறியது. "பாபர் மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்பு' என்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பா.ஜ.க.விலிருந்து வெளியேறியபோது, பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கியை விரிவாக்க அவரை அரவணைத்துக் கொண்டு அரசியல் நடத்தியவர் முலாயம்சிங். இதைவிட மோசமான அரசியல் சந்தர்ப்பவாதம் வேறுண்டா?
பா.ஜ.க.வோடு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டவர் மாயாவதி. பா.ஜ.க. துணையோடு ஒடிஸா முதல்வராக வலம் வந்தவர் நவீன் பட்நாயக். பிகாரில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலிகளில் பா.ஜ.க. ஆதரவோடு வெற்றிக் கனியைச் சுவைத்தவர் நிதிஷ்குமார்.
அவருக்கு மோடிதான் பிரச்சினை, பா.ஜ.க. அல்ல. "சாறுவேண்டும்' இறைச்சி வேண்டாம் என்பவர் வள்ளலார் வாரிசு என்றால், நிதிஷ்குமாரும் வகுப்புவாத எதிர்ப்பாளர்கள்தான்.
தேவகவுடா சந்தர்ப்பவாத அரசியலில் கருணாநிதியையும் மிஞ்சியவர். மதசார்பற்ற ஜனதாதளம் என்று பெயர் வைத்துக் கொண்டு கர்நாடகத்தில் பா.ஜ.க. உதவியோடு, தன் மகன் குமாரசாமியை முதல்வராக்கிய கொள்கை வேந்தர் அவர். இவர்கள்தான் மார்க்சியர்கள் திரட்டும் பரிவாரத்துக்கு வீரத்தளபதிகளாக விளங்கப் போகின்றவர்கள்.
போகட்டும், இந்த மூன்றாவது அணியில் இடம் பெறுபவர்கள் ஊழல் காங்கிரûஸ வீழ்த்துவதற்கான தார்மிக தகுதியுள்ள நெறிசார்ந்த நேர்மையாளர்களா?
மாயாவதி ஒரு தபால்துறை ஊழியருக்கு மகளாகப் பிறந்தவர். பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்தவர். இன்று ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தும் அரசியல் தலைவராக வளர்ந்து நிற்பவர். அமெரிக்காவுடன் மன்மோகன் அரசு உருவாக்கிய அணுக்கொள்கையை எதிர்த்து ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கிய பிரகாஷ் காரத் இந்த மாயாவதியைதான் இந்தியப் பிரதமராக்க முயன்றார். மார்க்சும் ஏங்கல்சும் ஊழல்வாதிகளுக்குப் பதவி நாற்காலியைப் பரிசாகத் தரவேண்டுமென்று பரிந்துரைத்தார்களா? நமக்குப் புரியவில்லை.
யாதவர்களின் சாதிவாக்கையும், இஸ்லாமியரின் மதவாக்கையும் பெற்றப் பெரிய மனிதராக அரசியலரங்கில் காட்சி தரும் முலாயம்சிங் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, லோகியா, சரண்சிங் நிழலில் வளர்ந்து இன்று குபேர வசதிகளுடன் வாழ்ந்து வருபவர். பெரியாரின் பெயர் சொல்லும் கருணாநிதியும், லோகியாவின் பெருமை பேசும் முலாயம்சிங்கும் எல்லா வகையிலும் ஒரு பறவையின் இருசிறகுகள் என்பதுதான் உண்மை. இந்த முலாமைத்தான் மூன்றாவது அணியமைக்க நம் காம்ரேடுகள் முழுமையாக நம்பியுள்ளனர்.
ஊழலில் ஊறித் திளைக்கும் தேவகவுடா, ஊழலின் மறுவடிவமான மாயாவதி, ஊழலுக்கு உற்சவம் நடத்திப் பலநூறு கோடியைத் திரட்டி வைத்த ராஜசேகர ரெட்டியின் திருமகன் ஜெகன்மோகன்ரெட்டி, பெங்களூரு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்புக்குக் காத்திருக்கும் ஜெயலலிதா, தமிழகத்தையே ஊழல் மாயமாக்கிய கருணாநிதி... இவர்கள்தான் மதவாத எதிர்ப்பாளர்களா? நேற்று பா.ஜ.க.வோடு இருந்த இவர்கள், தேர்தலுக்குப் பின்பு பா.ஜ.க.வின் பக்கம் தலைவைத்துப் படுக்கமாட்டோம் என்று மார்க்சியர்கள் நீட்டிய பத்திரத்தில் கையொப்பமிட்டு உத்தரவாதம் வழங்கியிருக்கிறார்களா? அது போகட்டும், மதச்சார்பற்ற மம்தாவை ஏன் சேர்க்காமல் விட்டுவிட்டீர்கள்?
தான் பிரதமராக வரும் வாய்ப்பு இல்லாத நிலையில், ஜெயலலிதா மோடியின் பக்கம் நின்றால், அப்போது மதச்சார்பின்மை கொடி பிடித்து மோடியின் ரத்தம் படிந்த முகத்தைக் காட்டி ஓலமிடும் 14 காரட் காம்ரேடுகள் என்ன செய்வார்கள்? இரண்டு எம்.பி. தொகுதிகளுக்கு போயஸ் தோட்டத்தில் தவமிருக்கும் காம்ரேடுகளுக்கு, சிறுபான்மையினர் வாக்குகளைப் பெறுவதற்காகவே அதிமுக இப்போது பா.ஜ.க.விடமிருந்து விலகி நிற்கிறது என்பது தெரியாதா? அந்த அளவுக்கு இடதுசாரிகள் அரசியல் அப்பாவிகளா?
எதற்கும் இருக்கட்டும் என்று கருணாநிதி கடிதம் ஒன்று வரைந்து ஆதரவு கேட்கும் சாக்கில் பா.ஜ.க. திண்ணையில் இப்போதே ஒரு துண்டு போட்டு வைத்திருப்பதன் நோக்கம் என்ன? 1996 முதல் மிக நீண்டகாலம் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் அல்லாத ஒரே மாநிலக் கட்சி தி.மு.கழகம்தான் தெரியுமா? இந்திரர்கள் மாறுவார்கள். இந்திராணி மாறுவதில்லை என்ற புராண வாசகத்தை அரசியலில் உண்மையாக்கிய கருணாநிதி நாளை பா.ஜ.க.வோடு போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்? விவஸ்தை கெட்ட அரசியலில் விவேகத்திற்கு இடமுண்டா? சிறுபான்மையினர் விழித்துக் கொள்ளவேண்டும்.
கடந்த ஒன்பதாண்டுகளில் காங்கிரஸ் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊழலில் உச்சம் தொட்டது. ஆட்சியைத் தக்கவைக்க எம்.பி.க்களை ஏலம் எடுத்தது. தன்னோடு இணங்கி வராத கட்சிகளை சி.பி.ஐ. மூலம் வளைத்துப் போட்டது. கிரிமினல் தலைவர்களின் பதவியைப் பாதுகாக்க அவசரசட்டம் தீட்ட முயன்றது.
நிலக்கரி ஊழலில் நீதியைத் தடுக்க ஆவணங்களை மறைத்து வைத்தது. கார்பரேட் நிறுவனங்களின் குற்றங்களுக்கு உடந்தையானது. பொம்மை பிரதமரை முன் நிறுத்தி ஒரு குடும்பம் அதிகாரத்தை முற்றுரிமையாக்க அனுமதித்தது.
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவிக்க உதவி செய்தது. அன்றாடம் தமிழக மீனவர்கள் சிங்களரால் துன்புறுத்தப்படுவதை வேடிக்கை பார்க்கிறது. அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துகிறது.
இந்த மலினமான மக்கள் விரோத அரசை அகற்ற மார்க்சியர்கள் அமைக்கும் மூன்றாவது அணியில், சிறுபான்மையினரை எப்பொழுதும் வெறும் வாக்கு வங்கியாகவே பயன்படுத்திக் கொள்ளும் சுயநலக் கட்சிகள், போலி கோஷத்தோடும் பொய்மை வேஷத்தோடும் "மதச்சார்பின்மை நவீன நாடகம்' நடத்தும் நோக்கில் இணையவிருக்கின்றன. 1996 முதல்
1999 வரை இது போன்ற மூன்றாவது அணியால்தான் மூன்று தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தன. மூன்றாண்டுகளில் மூன்று பிரதமர்கள் பரிபாலனம் செய்தனர். இடதுசாரிகளால் இந்த மோசமான வரலாறு மீண்டும் திரும்பினால் இந்தியா தாங்காது.
கட்டுரையாளர்:
தலைவர், காந்தி மக்கள் இயக்கம்

Monday, October 21, 2013


மோடியின் கேள்விகள்

சென்னையில் "இந்தியாவும் உலகமும்' என்கிற தலைப்பில் பல்கிவாலா நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்த வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்ட இரண்டு கருத்துகள் சிந்தனைக்குரியவை. நரேந்திர மோடி கூறியிருக்கிறார் என்பதாலேயே அந்தக் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பது விதண்டாவாதமாக இருக்குமே தவிர, புத்திசாலித்தனமாகாது.
அப்படி என்னதான் சொல்லிவிட்டார் நரேந்திர மோடி? முதலாவதாக, அவர் குறிப்பிட்டிருப்பது "இந்தியா என்பது தில்லி மட்டுமே அல்ல' என்பது. அதாவது, முப்பதுக்கும் மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி அமைப்புதான் இந்தியாவே தவிர, மொகலாய சாம்ராஜ்ய, பிரிட்டிஷ் காலனிய நடைமுறையிலான, தில்லியின் கட்டளைக்குக் கீழ்ப்படியும் குறுநில நாடுகளாக செயல்படும் அமைப்பல்ல இந்தியா என்பதை வலியுறுத்துகிறார் மோடி.
இந்தக் கருத்தைத்தான் முன்பு சோஷலிஸ்டுகளும், கூட்டணி ஆட்சிகள் அமையத் தொடங்கியது முதல் இடதுசாரிகளும் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதால், மோடியின் கருத்தை மறுதலிப்பது சரியாகாது. மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் என்கிற, மாநில சுயாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததுதான் நரேந்திர மோடியின் கூற்றும்.
எத்தனையோ சர்வதேச நிகழ்வுகள் நடக்கின்றன. பிற நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள், இரு நாடுகளுக்கிடையேயான பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன, பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
"இவையெல்லாம் ஏன் தில்லியிலேயே நடைபெற வேண்டும்? மதுரையிலோ, மைசூரிலோ, புவனேஸ்வரத்திலோ, வடேதராவிலோ, குவாஹாட்டியிலோ, கோலாப்பூரிலோ நடக்கக் கூடாதா? அப்படி சர்வதேச நிகழ்வுகள் பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களிலும், பிற முக்கியமான நகரங்களிலும் நடைபெற்றால்தானே, அந்தந்தப் பகுதிகளின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்? எல்லா மாநிலங்களிலும் உள்ளவர்கள் இந்தியா என்பது எங்கேயோ தூரத்தில் இருக்கும் தில்லி மட்டுமல்ல, நமது மாநிலமும்தான் என்கிற உணர்வுடன் இருப்பார்கள்?' என்பதுதான் நரேந்திர மோடி எழுப்பி இருக்கும் நியாயமான கேள்வி.
வெளிநாடுகளில் நரேந்திர மோடி குறிப்பிடும் முறைதான் கையாளப்படுகிறது. ஜப்பானில் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த ஜி-20 மாநாடு டோக்கியோவில் நடைபெறவில்லை. ஹொக்கைடோ என்கிற நகரத்தில்தான் நடந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்னால் பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியனின் மாநாடு, தலைநகர் பாரீசில் நடத்தப்படவில்லை, மார்செய்ல்ஸ் நகரத்தில்தான் நடந்தது. அதுபோல, பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்திய யூனியனில் ஏன் மாநிலங்கள் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்கிற நரேந்திர மோடியின் கேள்வி சிந்தனைக்குரியது மட்டுமல்ல, செயல்படுத்தப்பட வேண்டியதுமாகும்.
நரேந்திர மோடி வெளிப்படுத்திய இரண்டாவது கருத்து, இந்திய நிர்வாகத்தில் நிலவும் மெத்தனப்போக்கும், பொறுப்பின்மையும் பற்றியது. கோப்புகள் காணாமல் போகின்றன. பிரதமர், "கோப்புகளைக் காவல் காப்பது எனது வேலையல்ல' என்று சர்வ சாதாரணமாக பதிலளிக்கிறார்.
மீனவர்கள் அண்டை நாடுகளால் சிறைபிடிக்கப்படுகிறார்கள், மத்திய அரசு பிரச்னைக்குத் தீர்வு காணாமல் சமரசம் பேசுகிறோம் என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், "அதற்கும் பாகிஸ்தானிய ராணுவத்துக்கும் தொடர்பில்லை' என்று பாதுகாப்பு அமைச்சரே நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
ஆயுதங்களுடன் ஒரு கப்பல் கடலோரக் காவல் படையினரால் பிடிக்கப்படுகிறது, தேசியப் பாதுகாப்பு அலுவலக அதிகாரி, "12 கடல் மைல்களுக்கு அப்பால் கப்பல் நின்று கொண்டிருந்ததால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது' என்று அறிக்கை விடுக்கிறார்.
இப்படி, யாருக்குமே தேசப்பற்றோ, நிர்வாகத்தின் மீது கட்டுப்பாடோ, பொறுப்போ இல்லாத தன்மை இந்தியாவைப் பற்றியிருக்கும் மிகப்பெரிய புற்றுநோய். பிரதமர் அலுவலகத்தில் தொடங்கி பஞ்சாயத்து அலுவலகம் வரை எந்தவொரு தவறுக்கும் யாரும் பொறுப்பேற்காத நிலைமை. எந்தவொரு மக்கள் பிரச்னைக்கும் பொதுநலன் கருதியும், தொலைநோக்குப் பார்வையுடனும் உடனடியகாத் தீர்வு காணத் தயாராக இல்லாத நிலையில் இயங்குகிறது நமது நிர்வாக இயந்திரம். இந்த மெத்தனப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் நரேந்திர மோடி.
நரேந்திர மோடி எந்த சார்பைச் சேர்ந்தவராக இருந்தால்தான் என்ன? அவரது கருத்தில் நியாயம் இருக்கிறதா, தேசத்தின் நலன் இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இன்றைய இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தத் தெரியாமல், ஆனால் எழுப்ப நினைக்கும் இரண்டு கேள்விகளை நரேந்திர மோடி எழுப்பி இருக்கிறார். இவற்றுக்கான விடை காணப்பட்டாலே போதும். வலிமை மிக்க இந்தியா உருவாகிவிடும்!

Sunday, October 20, 2013

20-10-2013 அன்று மதுரையில் ஹிந்துமுன்னணி சார்பாக, இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகளுக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்பட்டம் நடை பெற்றது .
20-10-2013 அன்று மதுரையில் ஹிந்துமுன்னணி சார்பாக, இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகளுக்கு துணைபோகும் தமிழக அரசை கண்டித்து மாபெரும் ஆர்பட்டம் நடை பெற்றது .

Thursday, October 17, 2013

நரேந்திர மோடி அலையால் உத்தரபிரதேசம், பீகாரில் காங்கிரஸ் மற்றும் முலாயம்சிங், நிதிஷ் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் சக்தியாக இருந்து வருகிறது. இங்கு வெற்றி பெறும் கட்சி மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என 4 அணிகள் உருவான பின்பு நிலைமை மாறி விட்டது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தொடர்ந்து தோற்றாலும் மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வருகிறது.

இதே போல் பீகார் மாநிலமும் மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த தேர்தலில் பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கும், லல்லு பிரசாத் யாதவுக்கும் குறைந்த இடங்கள் கிடைத்தன.

தற்போது பாரதீய ஜனதா – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்து விட்டது. மேலும் லல்லு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிறை சென்று விட்டார். இதனால் அங்கும் நிலைமை மாறி விட்டது.

தற்போது உத்தரபிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் நரேந்திரமோடி அலை வீசுவதாக எக்காமிக்ஸ் டைம்ஸ் – ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 120 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இப்போது தேர்தல் நடந்தால் இந்த இரு மாநிலங்களிலும் 44 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், பீகாரில் 23 தொகுதிகளில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. தற்போது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளதாலும், பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியிலும் உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியிலும் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாலும் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இதன் மூலம் பீகாரிலும், உத்தரபிரதேசத்திலும் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக திகழும். உத்தரபிரதேசத்தில் மட்டும் 27 தொகுதிகள் கிடைக்கும். பீகாரில் 17 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணக்கில் தெரிய வந்துள்ளது.

இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு சரிந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் 2009–ல் 21 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தற்போது 12 தொகுதிகள்தான் கிடைக்கும்.

பீகாரில் கடந்த தேர்தலில் 4 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு அந்த முறை 2 தொகுதிகள்தான் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மாயாவதி கட்சிக்கு 20 இடங்களும், முலாயம்சிங் கட்சிக்கு 16 இடங்களும் தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மாயாவதியை விட முலாயம்சிங் யாதவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அந்த கட்சிக்கு தற்போது இருக்கும் 23 எம்.பி.க்களின் எண்ணிக்கை 16 ஆக குறையும்.

பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தற்போது இருக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 20–ல் இருந்து 10 ஆக குறையும் என்று கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

இந்த இரு மாநிலங்களிலும் நரேந்திர மோடியா? ராகுல் காந்தியா? என்று நேரடியாக கேள்வி கேட்டால் நரேந்திர மோடிக்குத்தான் ஆதரவு என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்

Tuesday, October 15, 2013

                               மதானியின் கருத்தை வரவேற்றுஉள்ள, பா.ஜ., தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, முஸ்லிம் அமைப்பான, ஜமாத் - இ - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா, எம்.பி.யுமான, முகமது மதானி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை, கடுமையாக சாடினார். இந்த இரு கட்சிகளுமே, தாங்கள் ஆளும் மாநிலங்களில் மதக் கலவரங்களை தடுப்பதில், தங்கள் கடமையிலிருந்து தவறி விட்டதாக கண்டித்துள்ளார்.

இது குறித்து மதானி பேசியதாவது:மக்களிடையே மதச்சார்பின்மை பற்றி பேசும் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களின் என்னென்ன நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளன, என்ன சாதனை படைத்துள்ளன போன்றவற்றை கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். ஒரு தனிப் பட்ட நபர் (மோடி) ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, பயத்தை ஏற்படுத்தி, மக்களிடையே பிரசாரம் செய்யக் கூடாது.மதச்சார் பற்றவர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், ராஜஸ்தானில் மதக் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது. சமாஜ்வாதி, முசாபர்நகர் கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக மதச்சார்பின்மை பேசும் காங்., மத நல்லிணக்கத்திற்காக, என்ன செய்ய வேண்டுமோ அதை முதலில் செய்ய வேண்டும்.மேற்குறிப்பிட்ட இரு மாநிலங்களிலும், முஸ்லிம்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவேஉள்ளது.இவ்வாறு முகமது மதானி கூறிஉள்ளார்.

மதானியின் கருத்தை வரவேற்றுஉள்ள, பா.ஜ., தலைவர், முக்தார் அப்பாஸ் நக்வி, ''காங்., எப்போதும் பிரித்தாளும் கொள்கையை கையாள்வதில் விருப்பம் உடையது. அவர்கள், இந்து - முஸ்லிம் இடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதில் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்,'' எனக் கூறியுள்ளார்